Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
வக்ர நிவர்த்தி அடைந்த சனியால் சந்திக்கும் பிரச்சனைகளை குறைக்கும் பரிகாரங்கள்!
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்கள் மூலம் சனி பகவானால் சந்திக்கும் பாதகமான விளைவுகளைக் குறைக்கலாம்.
நவகிரங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை வழங்கும் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்க தொங்கியுள்ளார். சனி வக்ர நிவர்த்தி அடைந்ததால், பல ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் மாற்றத்தால் சிலர் தங்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மேலும் சனி தோஷத்தால் குடும்ப வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் அல்லது செலவுகளை சந்திக்க நேரிடும். தொழில் செய்து வருபவர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்கள் மூலம் சனி பகவானால் சந்திக்கும் பாதகமான விளைவுகளைக் குறைக்கலாம். இப்போது மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க உதவும் பரிகாரங்கள் குறித்து காண்போம்.

பரிகாரம் #1
சனி தோஷம் அல்லது சனியால் சந்திக்கும் பிச்சனைகளைக் குறைக்க சனிக்கிழமையன்று சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள். மேலும் மனதில் சனி பகவானை நினைத்து தியானம் செய்யுங்கள். இதனால் சனி தோஷத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறையும்.

பரிகாரம் #2
சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் வீட்டின் அருகில் உள்ள கோவிலில் உள்ள சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்.

பரிகாரம் #3
பண பிரச்சனையை சந்திப்பவர்கள் ஏதேனும் ஒரு சுக்லபட்சத்தின் முதல் சனிக்கிழமையன்று 10 பாதாமை எடுத்து அனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு 5 பாதாமை வைத்துவிட்டு, 5 பாதாமை வீட்டிற்கு கொண்டு வந்து, சிவப்பு துணியில் வைத்து கட்டி, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இப்படி செய்வதால் சனி பகவானால் சந்திக்கும் பண பிரச்சனை குறையும்.

பரிகாரம் #4
சனிக்கிழமைகளில் குரங்குகளுக்கு சாதம், வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றை கொடுங்கள். மேலும் ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தை பார்த்து, பின் அந்த எண்ணெயை தானம் செய்யுங்கள். தேங்காயை ஆற்றில் எறியுங்கள்.

பரிகாரம் #5
சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் கறிவேப்பிலையை அரைத்து அதை உருண்டைகளாக்கி, மீன்களுக்கு உணவாக கொடுங்கள்.

பரிகாரம் #6
ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு நிற நாய்க்கு கடுகு எண்ணெயில் நனைத்த ரொட்டியை சாப்பிட கொடுங்கள். மேலும் இரவு நேரங்களில் கால் நகங்களில் கடுகு எண்ணெயை தடவுங்கள். அதோடு, 7 சனிக்கிழமைகளில் எறும்புகளுக்கு கருப்பு உருண்டையை உணவளியுங்கள்.

பரிகாரம் #7
சனி தோஷங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், சிவ சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். அதோடு அனுமனை வழிபடுவதும் சனியினால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

பரிகாரம் #8
சனி தோஷங்களை குறைக்க சனிக்கிழமைகளில் ஏழை மக்களுக்கு உணவளிப்பது மிகச்சிறந்த பரிகாரமாகும். அதுவும் நீங்கள் பிறந்த நாள் அல்லது உங்கள் வாழ்வில் முக்கியமான நாளாக கருதப்படும் தினங்களில் அன்ன தானம் செய்யுங்கள். இதனால் சனி பகவான் மகிழ்ச்சியடைவார்.



Click it and Unblock the Notifications