Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
617 ஆண்டுகளுக்கு பின் உருவான 3 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப் போகுது..
தற்போது குருவும், சுக்கிரனும் மீன ராசியில் ஒன்றாக பயணிக்கிறார்கள். அதே சமயம் சனி சூரியனுடன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நான்கு கிரகங்களின் அரிய சேர்க்கையானது 617 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.
Saturn Sun Jupiter Venus Made Three Rajyoga After 617 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களும், நட்சத்திரங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அப்படி மாறும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகளால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகலாம். அந்த வகையில் தற்போது குருவும், சுக்கிரனும் மீன ராசியில் ஒன்றாக பயணிக்கிறார்கள். அதே சமயம் சனி சூரியனுடன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நான்கு கிரகங்களின் அரிய சேர்க்கையானது 617 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.

இந்த கிரகங்களின் சேர்க்கைகளால் சச, மாளவ்யா, ஹன்ஸ் போன்ற ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இந்த மூன்று ராஜயோகங்களின் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் அற்புதமான பலன்களைப் பெற்று, வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொல்லப்போனால் இந்த யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகளும் நனவாக போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மீன ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்திருப்பதால், ஹன்ஸ் மற்றும் மாளவியா ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலமானது யோகமான காலமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உணர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். முக்கியமாக இக்காலத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சச ராஜயோகத்தை சனி பகவான் உருவாக்கியுள்ளார். இதனால் இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்யா யோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் மற்றும் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் அமையும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் மாளவ்யா ரோஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, நிதி நிலைமையானது வலுவடையும். வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications