Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
வக்ர சனியால் அக்டோபர் 23 வரை இந்த ராசிக்காரர்களிடம் ஏராளமான செல்வம் சேருமாம்...
கிரகங்கள் வக்ர நிலையில் மோசமான பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கும். அப்படி தான் வக்ர சனியால் அக்டோபர் 23 வரை 3 ராசிக்காரர்கள் கையில் செல்வம் அதிகம் சேரும்.
ஜோதிடத்தில், சனி துன்பம், வலி, நோய், தாதுக்கள், எண்ணெய், இரும்பு, அறிவியல் போன்றவற்றின் கிரகமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சனி கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாவார் மற்றும் பூசம், அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியும் ஆவார். சனி பகவான் என்றாலே தீங்கு விளைவிப்பவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலைல் இருந்தால், அவர் நற்பலன்களை அள்ளி வழங்குவார். அதுவே பாதகமான நிலையில் இருந்தால், வாழ்க்கை சாதாரணமாகவும், பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும்.

இத்தகைய சனி 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். அதன் பின் ஜூன் 5 ஆம் தேதி கும்பத்தில் வக்ரமாக மாறி பயணிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணிக்க ஆரம்பித்தார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் அக்டோபர் 23 வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார். கிரகங்கள் வக்ர நிலையில் மோசமான பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கும். அப்படி தான் வக்ர சனியால் அக்டோபர் 23 வரை 3 ராசிக்காரர்கள் கையில் செல்வம் அதிகம் சேரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் உள்ளார். இந்த வீடு தொழில், வேலை மற்றும் வணிகத்தின் வீடாகும். எனவே வக்ர சனியால் மேஷ ராசிக்காரர்களின் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றியும், பணமும் கிடைக்கும். கூடுதலாக, வணிகத்தை விரிவுபடுத்த முடியும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் பெரும் பொருளாதார வெற்றியையும், வளர்ச்சியையும் தரும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகியுள்ளார். இது வருவாய் மற்றும் செல்வத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருளாதார பலன்களைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்த புதிய வணிக உறவுகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் அல்லது வியாபாரிகள் இக்காலத்தில் பெரும் வெற்றியை அனுபவிப்பார்கள்.

தனுசு
வக்ர சனியால் அக்டோபர் வரை தனுசு ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகியுள்ளார். இது பேச்சு மற்றும் பணத்தின் வீடாகும். இதன் விளைவாக பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க சிறந்த காலமாக இருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்களில் சிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு தொடர்பான வேலையை செய்பவர்களுக்கு இக்காலம் வெற்றிகரமானதாக இருக்கும். கார், வீடு போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications