Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
இந்த மசாலா பொருட்களை உங்க பர்ஸில் வைத்திருந்தால்... உங்க வீட்டில் செல்வ மழை பொழியுமாம் தெரியுமா?
இலவங்கப்பட்டை மசாலாவின் குச்சி உங்கள் செல்வத்தை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. உங்கள் சேமிப்பை அதிகரிக்க, இலவங்கப்பட்டையை உங்கள் பணப்பையில் அல்லது உண்டியலில் வைத்திருந்தால் போதும்.
மசாலாப் பொருட்கள் மருத்துவ ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ சமையலறையில் எப்போதும் மதிப்புமிக்கவை. அவை உணவில் சுவையை மட்டுமல்ல, வாழ்க்கையில் செல்வத்தையும் சேர்க்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தில், சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பற்றிய குறிப்பு உள்ளது. அவை நாட்டுப்புற மற்றும் ஆன்மீகத்தில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு சூழலில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அவற்றைத் தனித்தனியாகப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் கைப்பை அல்லது பணப்பையின் உள்ளே ஒரு சிறிய பையில் சில மசாலாப் பொருட்களை வைக்கலாம். எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவதற்காக அவற்றை எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.

அது வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ, இந்த பொருட்கள் தடைகளை நீக்கி, நீங்கள் சீராக செழிக்க உடனடியாக ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கும். அதுமட்டுமல்லாமல் வாசனைப் பொருட்களையும் மூலிகைகளையும் வாஸ்து சாஸ்திரத்தின் மூலமும் பணத்தைப் பெருக்கும் பொருளாக மாற்றலாம். வாஸ்து சாஸ்திரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் பட்டியல் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பெருஞ்சீரகம் மற்றும் கிராம்பு
ஒன்று மிகவும் இனிமையாகவும் மற்றொன்று சுவையில் மிகவும் கூர்மையானதாகவும் இருக்கும். இந்த இரண்டு மசாலாப் பொருட்களும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் எதிர்மறையைத் தடுக்க பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய காலம் முதல் நம் முன்னோர்களும் பெருஞ்சீரகம் மற்றும் கிராம்புகளை உணவுகளிலும் தீய சக்திகளை போக்கவும் பயன்படுத்துகிறார்கள். பல கலாச்சாரங்களில், பெருஞ்சீரகம் மற்றும் கிராம்பு கொண்ட ஒரு சிறிய பையை உங்கள் வீட்டு வாசலில் கட்டுவது பேய்கள், ஆவிகள் மற்றும் தீய சக்தி வராமல் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

என்னென்ன நன்மைகள்?
பெருஞ்சீரகத்தை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்திருப்பது உங்களை நன்றாகவும் நிம்மதியாகவும் தூங்க உதவும். அதேசமயம், கிராம்பை உங்கள் பணப்பையில் வைத்துக்கொள்வது எப்போதும் எதிர்மறை ஆற்றலிலிருந்து உங்களை விலகி இருக்க உதவும். பெருஞ்சீரகம் மற்றும் கிராம்பை சாப்பிடுவது தெளிவுத்திறன், கருவுறுதல், நீண்ட ஆயுள், காயங்களை குணப்படுத்துதல், நினைவகம், தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

கரம் மசாலா
கரம் மசாலா எந்த உணவிற்கும் அதன் நறுமணம் மற்றும் சுவையுடன் தனித்துவத்தைக் கொண்டுவருவதாக அறியப்படுகிறது. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த மசாலா உங்களுக்கு செல்வத்தையும் வெற்றியையும் கொடுக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த மசாலாவை ஒரு சிறிய பாக்கெட்டில் அல்லது பேப்பரில் மடித்து உங்கள் பணப்பையில் வைக்கவும். மேலும், நீங்கள் உங்கள் வீடு அல்லது கடையின் மூலைகளில் கரம் மசாலா பொடியைத் தூவலாம், இது உங்களுக்கு வெற்றியை கொண்டுவரலாம். இந்த மசாலா உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் கொண்டு வருகிறது. உங்கள் உள் ஆன்மாவிற்கு நேர்மறையை கொண்டு வர, அதை எப்போதும் உங்கள் உணவில் நேர்மறையான நோக்கத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள், அது உங்களுக்கு அதிசயங்களைச் செய்யும்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை மசாலாவின் குச்சி உங்கள் செல்வத்தை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. உங்கள் சேமிப்பை அதிகரிக்க, இலவங்கப்பட்டையை உங்கள் பணப்பையில் அல்லது உண்டியலில் வைத்திருந்தால் போதும். இந்த மசாலா குணப்படுத்துதல், அன்பு, வெற்றி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருகிறது. அதைப் பயன்படுத்தும் போது அது ஆன்மீகத்தின் அலைகளை உங்களுக்கு வழங்கும். அதன் விளைவா நல்ல செல்வத்தை பெறலாம்.

புதினா இலைகள்
புதினா இலை வாஸ்து படி, உங்கள் வாழ்க்கையில் சில செல்வங்களை பெற ஒரு சிறந்த வழி. பணம் பெருக்குவதற்கு புதினா இலைகளை உங்கள் வீட்டில் பணம் இருக்கும் இடத்தில் வைக்கவும். அது மட்டுமின்றி, உங்கள் பணப்பையில் அல்லது காசோலை புத்தகத்தில் 2-3 புதினா இலைகளை வைத்திருக்கலாம். அவற்றின் வாசனை உங்களை சக்தி வாய்ந்ததாக உணர வைக்கும். இந்த மூலிகை உங்களுக்கு வலிமையையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. அவை உங்கள் முதலீடுகளை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகின்றன. இந்த மசாலாவின் நிறம் போல செல்வா பசுமையை நீங்கள் பெறலாம். இதனால் அதிக செல்வம் வீட்டில் சேரும்.



Click it and Unblock the Notifications