Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
வக்ர புதன் பெயர்ச்சியால் புத்தாண்டின் தொடக்கத்தில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஆண்டின் கடைசி நாளில் புதன் வக்ரமாவதால், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் உள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி நாளில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். வேத ஜோதிடத்தில் புதன் தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை ஆகிய அனைத்தையும் கொண்டிருப்பார். அதுவே புதன் பலவீனமான நிலையில் இருந்தால், மந்தமாக இருப்பார்.

2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்லும் புதன், 2023 ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, 2023 பிப்ரவர் 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்வார். இப்படி ஆண்டின் கடைசி நாளில் புதன் வக்ரமாவதால், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் உங்களின் பேச்சில் கசப்பு நிறைந்திருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குடும்பத்தினர்களுடன் சண்டை போடும் சூழலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஊடகம், எழுத்துத்துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் புதனின் நிலையால் வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். யாருக்காவது கடனாக பணத்தைக் கொடுத்திருந்தால், அதை இக்காலத்தில் திரும்ப பெற முடியாது. இந்த காலகட்டத்தில் நண்பர்களின் உதவி கிடைக்காததால், சற்று மனம் வருத்தமடைய நேரிடும். உங்கள் மாமனார்-மாமியாருடன் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். எனவே இந்த புதன் பெயர்ச்சிக்கு பின், மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதி தொடர்பான வேலையை செய்பவர்களின் பணியில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கையில் சில பதட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











