Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதில் வித்தியாசம் ஒன்று உள்ளது - அது என்ன தெரியுமா?
சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக் கொடியானது கம்பத்தில் ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியானது அவிழ்க்கப்படும். என்ன புரியவில்லையா?
ஜனவரி மாதம் வந்தாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது குடியரசு தினம் தான். இந்தியாவின் மிகவும் முக்கியமான தேசிய விழாக்களில் ஒன்று தான் குடியரசு தினம். ஒவ்வொரு ஆண்டும் இது மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 74 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டதை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த குடியரசு தினத்தன்று சுதந்திர தினத்தைப் போன்றே தான் கொடி ஏற்றுவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. ஆம், சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக் கொடியானது கம்பத்தில் ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியானது அவிழ்க்கப்படும். என்ன புரியவில்லையா? இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கொடி ஏற்றுவது
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமரால் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. இந்நாளில் கொடி ஏற்றும் போது, கொடியானது கம்பத்தில் கீழ்பகுதியில் கட்டப்பட்டு, பின் பாரத பிரதமரால் தேசிய கொடி மேலே ஏற்றப்படுகிறது. இது இந்தியா பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த அடையாளத்தைக் குறிக்கும் செயலாகும்.

கொடி அவிப்பது
குடியரசு தினமானது இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது. இந்த குடியரசு நாளில் இந்திய குடியரசு தலைவர் ராஜ்பாத் என்னும் கர்தவ்ய பாதையில் கொடியேற்றுவார். அதாவது, குடியரசு நாளில் இந்திய கொடியானது கம்பத்தின் மேல் ஒரு மூட்டையாக கட்டப்படும். பின் குடியரசு தலைவர் அந்த மூட்டையை அவிழ்த்து, கொடியை பறக்கவிடுவார்.

யார் கொடியை ஏற்றுவார், யார் கொடியை அவிழ்ப்பார்?
இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி யாரும் இல்லை. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜனரலாக மவுண்ட்பேட்டன் பிரபு இருந்தார். இது தான் ஜனாதிபதியின் பதவிக்கு இணையானது. ஆனால் இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் தான் ஏற்ற முடியும் என்பதால், அப்போது முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கொடியை ஏற்றினார். அன்று முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்தியாவின் பிரதமர் கொடி ஏற்றுகிறார்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு ஏற்றுக் கொண்ட குடியரசு தினத்தன்று, இந்தியாவின் முதல் குடிமகனாக, குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா ஏற்கனவே சுதந்திரம் பெற்றதால், முதல் குடியரசு தினத்தன்று குடியரசு தலைவராக பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் அவர்கள் கொடியை அவிழ்த்து வைத்தார். அப்போது முதல் இன்று வரை குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவிழ்க்கப்பட்டு வருகிறது.

இவ்விரு நிகழ்வுகளும் எங்கு நடைபெறும்?
குடியரசு தினத்தன்று, அதாவது ஜனவரி 26 ஆம் தேதி புது தில்லியில் உள்ள ராஜ்பாத் என்று அழைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் இந்திய குடியரசு தலைவர் தேசியக் கொடியை அவிழ்ப்பார். அதே சமயம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் இந்திய தேசிய கொடியை கம்பத்தின் கீழிருந்து கொடியை மேலே ஏற்றுவார்.



Click it and Unblock the Notifications