Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
இந்த 7 சாதாரண பாவங்களுக்கு நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்ன தெரியுமா? ஜாக்கிரதை!
அனைவருக்கும் மரணத்திற்கு பிறகான வாழ்க்கைக் குறித்த அச்சமும், எதிர்பார்ப்பும் இருக்கும். சொர்க்கம் மற்றும் நரகம் அனைத்து மதங்களிலும் இருக்கிறது.
அனைவருக்கும் மரணத்திற்கு பிறகான வாழ்க்கைக் குறித்த அச்சமும், எதிர்பார்ப்பும் இருக்கும். சொர்க்கம் மற்றும் நரகம் அனைத்து மதங்களிலும் இருக்கிறது. மரணத்திற்குப் பிறகு நரகத்தை செல்வதை தவிர்க்க அனைவரும் ஆசைப்படுவார்கள். PAGGLES என்று குறிப்பிடப்படும், நாம் அறிந்த மற்றும் பெரும்பாலும் செய்யக்கூடிய ஏழு கொடிய பாவங்கள் பெருமை(Pride), கோபம்(Anger), பேராசை(Greed), பெருந்தீனி(Gluttony), காமம்(Lust), பொறாமை (Envy) மற்றும் சோம்பல்(Sloth) ஆகும்.

இந்த 7 கொடிய பாவங்கள் முதலாம் போப் கிரிகோரியால் தொகுக்கப்பட்டது. அவர் 400 AD இல் பண்டைய சுமேரிய, கிரேக்க மற்றும் எகிப்திய கலாச்சாரங்களிலிருந்து "தீய எண்ணங்களின்" பட்டியலை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாவங்களைத் தொகுத்தார். மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையிலிருந்து மனிதர்களை வழிநடத்துவதற்கு அவர் இவற்றைப் பயன்படுத்தினார். ஏழு கொடிய பாவங்களில் ஒன்று அல்லது பலவற்றைச் செய்பவர்களுக்கு நரகம் குறிப்பிட்ட தண்டனைகளை வழங்குவதாக கருதப்படுகிறது. நரகத்திற்கு அழைத்து செல்லும் இந்த பாவங்களுக்கு அங்கு வழங்கப்படும் தண்டனைகள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பெருமை
பெருமை என்பது ஆபத்தான சுயநலம் எண்ணமாகும், ஒருவரின் சொந்த ஆசைகள், தூண்டுதல்கள், விருப்பங்கள் மற்றும் மற்றவர்களின் நலன்களை புறக்கணிப்பது. இது மற்ற எல்லா தீமைகளுக்கும் வழிவகுக்கும் பாவத்தின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது கடவுளின் பாதுகாப்பு கவசத்திலிருந்து உங்களை பிரித்து வைக்கும், எனவே இது மோசமானவற்றிலும் மோசமான பாவமாகக் கருதப்படுகிறது.
உங்கள் அதிகப்படியான சுய முக்கியத்துவத்திற்கான தண்டனை உங்கள் மீது சக்கரத்தை தொடர்ந்து ஏற்றுவதாகும்.

கோபம்
கோபம் உண்மையில் ஒருவரின் அடிப்படை குணமாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத கோபம், ஆத்திரம் அல்லது வெறுப்பை உணரும்போது, உங்கள் கோபம் பாவமாக மாறும். உங்களின் கட்டுப்படுத்த முடியாத கோபம் உங்களை வாழும்போதே நரகத்திற்கு அழைத்துச்செல்லும்.
அவர்களுக்கான தண்டனை அவர்கள் வாழும் காலத்திலேயே தனிமைப்படுத்துவதில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் இறந்த பிறகும் உயிருடன் இருக்கும்போது உணர்வது போன்ற வலியை உணர்வீர்கள்.

பேராசை
பேராசை என்பது பொருள் உடைமைகளின் ஆசை மற்றும் நாட்டமாகும். நமது சமூகம் முதலாளித்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதால், இது அனைவரும் உணரக்கூடிய விஷயமாகும். வாழ்நாள் முழுவதும் பேராசை உள்ளவர்கள் நிச்சயம் நரகத்தை செல்லுவார்கள்.
இந்த பாவத்திற்கு நீங்கள் நரகத்தில் கொதிக்கும் நீரில் வேக வைக்கப்படுவீர்கள். உங்களால் அனைத்து வலியையும் நரகத்தில் உணர முடியும்.

பெருந்தீனி
பெருந்தீனி என்பது அதீத ஈடுபாடும், அதிகப்படியான உணவு நுகர்வும், உணவை வீணாக்குவதுமாகும். இது பொதுவாக உணவுடன் தொடர்புடையது. செயின்ட் தாமஸ் அக்வினாஸ் பெருந்தீனி மீதான தனது விமர்சனத்தை பல்வேறு வழிகளில் உடைத்து மற்றொரு நிலைக்கு கொண்டு சென்றார். நீங்கள் விலையுயர்ந்த உணவை விரும்புகிறீர்களா? அதுவும் பாவம்தான். உங்கள் உணவிற்காக எப்போதும் காத்திருக்கிறீர்களா? அதுவும் பாவம்தான்.
இந்த பாவத்திற்கான உங்கள் நரக தண்டனை என்னவென்றால், நீங்கள் விரும்புவதை அதிகமாகச் செய்வது, அதாவது சாப்பிடுவது,ஆனால் மெனுவில் எலிகள், சிலந்திகள் மற்றும் தவளைகள் போன்றவை இருக்கும்.

காமம்
காமம் என்பது பணம் அல்லது அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடற்ற ஆசை. காமம் உங்களை "சாத்தானின் அடிமை" ஆக்குகிறது என்று 19 ஆம் நூற்றாண்டின் கார்டினல் ஹென்றி எட்வர்ட் மேனிங் கூறினார். எனவே அது உங்களின் மோசமான பாவமாகும்.

பொறாமை
பொறாமை என்பது மற்றவர்களின் ஆளுமை மற்றும் உடமைகளைப் பார்த்து கோபமாகவோ அல்லது சோகமாகவோ ஆசைப்படுவதாகும். பொறாமை உங்கள் எலும்புகளை அழுகச் செய்யும். ஆனால் இதுதான் உங்களின் நரக தண்டனை என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும்.
பொறாமை கொண்ட வாழ்க்கைக்கான உங்கள் நரக தண்டனை எப்போதும் உறைபனி நீரில் மூழ்கி இருக்க வேண்டும்.

சோம்பல்
சோம்பல் உழைப்பதற்கு தயங்குவது அல்லது உழைப்பதை வெறுப்பதாகும். இந்த பாவம் தனித்துவமானது, இது ஏதோ ஏராளமாக இருப்பதைக் காட்டிலும் ஏதோவொன்றின் பற்றாக்குறையால் மட்டுமே ஏற்படுகிறது.
உங்கள் சோம்பேறித்தனத்திற்கு, நரகத்தில் உங்களுக்கான தண்டனை பாம்பு குழிகளுக்குள் தள்ளப்படுவதாகும்.



Click it and Unblock the Notifications