Pongal 2024 : பொங்கல் பண்டிகை ஏன் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Pongal 2024: எப்படியோ நல்லவிதமாக 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். இந்த புத்தாண்டின் முதல் பண்டிகையாக வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைவரும் ஆலவலுடன் இருப்போம். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.

இந்த பொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது ஒரு அறுவடை திருவிழாவாகும். இது நான்கு நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் தைப்பொங்கல் என்றும் அழைப்பார்கள்.

Pongal 2024: Date & Types and What Are The 4 Days Of PongalCalledinTamil

பொங்கல் பண்டிகையானது பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த பண்டிகை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 2024 ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும், அதன் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சரி, இந்த நான்கு நாட்களும் எதனால் கொண்டாடப்படுகிறது என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொங்கல் 2024 தேதி

பொங்கல் 2024 தேதி

* போகிப்பண்டிகை - 2024 ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை

* தைப்பொங்கல் - 2024 ஜனவரி 15, திங்கட்கிழமை

* மாட்டுப்பொங்கல் - 2024 ஜனவரி 16, செவ்வாய்க்கிழமை

* காணும் பொங்கல் - 2024 ஜனவரி 17, புதன்கிழமை

போகி பண்டிகை

போகி பண்டிகை

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த போகி பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் விவசாயத்திற்கு நல்ல விளைச்சல் நிலத்துடன் மழையையும் தந்த இந்திரனை வணங்குவார்கள். இது தவிர ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியின் கடைசி நாளன்று வீட்டிற்கு கொண்டு வருவார்கள். அதோடு இந்நாளில் மக்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை எரித்து, வீட்டை சுத்தம் செய்வார்கள்.

தைப்பொங்கல்

தைப்பொங்கல்

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் தான் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலானது தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும். இந்நாளில் மக்கள் அறுவடை செய்த புதிய பச்சரியால் பால், வெல்லம் சேர்த்து புதிய பானையில் பொங்கல் வைத்து, விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுவார்கள்.

மாட்டுப்பொங்கல்

மாட்டுப்பொங்கல்

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் கொண்டாடப்படுவது மாட்டுப்பொங்கல். இந்நாளில் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கால்நடைகளை அழகாக அலங்கரித்து, கழுத்தில் மணிகளைக் கட்டி, பொங்கல் வைத்து அவற்றிற்கு சாப்பிட கொடுப்பார்கள். மேலும் திருக்குறள் மூலம் தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்ததால், இந்நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல்

காணும் பொங்கல் பண்டிகையானது ஓய்வின்றி விவசாயம் செய்ததால், ஓய்விற்காகவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் இது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீட்டிற்கு செல்வது மற்றும் வீட்டு பெரியோரின் ஆசியைப் பெறுவது போன்றவற்றையும் மக்கள் மேற்கொள்வார்கள். முக்கியமாக இந்த நாளன்று ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் நடைபெறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion