Just In
- 11 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 36 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த ராசிக்காரங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் காதல் செட் ஆகாதாம்...
ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் 3 ராசிக்காரர்களால் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் பெற முடியாது. இதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு உண்மையான அன்பு தேவை. இத்தகைய அன்பு அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடாது. சிலருக்கு எளிதில் மற்றும் விரைவில் கிடைத்துவிடும். இன்னும் சிலருக்கு என்ன முயற்சித்தாலும் கிடைக்காது. ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் 3 ராசிக்காரர்களால் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் பெற முடியாது. இதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இப்படி சிலருக்கு உண்மையான அன்பு கிடைக்காமல் இருப்பதற்கு, அவர்களின் இயல்பு காரணமாக இருக்கலாம் மற்றும் சில நேரங்களில் அவர்கள் மனதளவில் காயமடையலாம். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் வலுவானவர்கள் மற்றும் எந்த வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். மேலும் இவர்கள் அவ்வளவு எளிதில் எதையும் விட்டுவிடமாட்டார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பரந்த மனம் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் மனநிலை எப்போதும் சற்று சூடாகவே இருக்கும். இவர்கள் மிகவும் அதிகமாக கோபப்படுபவர்கள். அதன் காரணமாக பல முறை கோபத்தில் சில தவறான முடிவுகளை எடுத்து, பின்னர் வருத்தப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் சொந்த வழியில் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்காக எதையும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். இத்தகைய சூழ்நிலையில், இவர்களை யாராவது கட்டுப்படுத்த முயற்சித்தால், அதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதோடு, இவர்கள் தவறான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் அவர்கள் காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே தான் பலர் இவர்களிடம் இருந்து விலகி இருக்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் யாரையாவது காதலித்தால், அவர்களை இவர்கள் அதிகம் காதலிப்பார்கள். மற்றவர்களிடமும் அந்த காதலை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்களால் தங்கள் காதலை வெளிப்படுத்த தெரியாது. இதனாலேயே பலர் இவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை என்று தவறாக நினைக்கிறார்கள். மேலும் இவர்கள் மிகவும் கோபக்காரர்கள். இவர்கள் கோபத்தில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இந்த கோபம் இவர்களின் உறவிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அனைவராலும் இவர்களை சகித்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே இவர்களுக்கு உண்மையான காதல் எளிதில் அமைவதில்லை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இவர்கள் தவறான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எந்த ஒரு கடினமான முடிவையும் எடுக்க தயங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏற்ற ஆள் கிடைக்காவிட்டால், காதலில் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்கள் மிக வேகமாக கோபப்படுவார்கள். பல நேரங்களில் மக்கள் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், இவர்களின் நடத்தையை வைத்து இவர்களை தவறாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் கடினமான சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மறுப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. பொது நலனைக் கருத்தில் கொண்டே இங்கு வழங்கப்பட்டுள்ளது.