Just In
- 5 min ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 1 hr ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 4 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 5 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க வாழக்கையை மாற்றக்கூடிய நரசிம்ம ஜெயந்தி இந்த வருஷம் எப்போ வருது தெரியுமா? இத மறக்காம பண்ணுங்க...!
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக கருதப்படுகிறது. மனித உடலும் சிங்கத்தின் தலையும் கொண்ட நரசிம்ம உருவம் ஒரு புராணங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக கருதப்படுகிறது. மனித உடலும் சிங்கத்தின் தலையும் கொண்ட நரசிம்ம உருவம் ஒரு புராணங்களில் மிகவும் முக்கியமானதாகும்.இரணியகசிபுவிடமிருந்து பிரகலாதனைப் பாதுகாக்க நரசிம்ம மூர்த்தி அவதாரம் எடுத்தார் என்று நம்பப்படுகிறது. பகவான் விஷ்ணுவையும் அவருடைய மற்ற அவதாரங்களையும் வணங்குவதைப் போலவே நரசிம்மரை வணங்குகிறார்கள்.
நரசிம்ம மூர்த்தியை முழு மனதோடும், விசுவாசத்தோடும் வணங்கினால், அவர் வாழ்க்கையில் செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அடைவார் என்று நம்பப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தி நரசிம்மரை வழிபடுவதற்கான சிறந்த நாளாக கருதப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தி வைஷாக சதுர்தாஷியில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நரசிம்ம ஜெயந்தி 2021 மே 14 அன்று வருகிறது.
புராணக்கதை
நரசிம்ம மூர்த்தி பெரும்பாலும் அரை மனிதன் அல்லது அரை சிங்கம் என்று கருதப்படுகிறார். இவர் மனிதனைப் போன்ற உடலும் சிங்கம் போன்ற முகமும் நகங்களும் கொண்டிருப்பார். இரணியகசிபு என்ற அரக்க மன்னனை அழிக்க விஷ்ணு நரசிம்மராக அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. பிரகலாதன் அசுர வேந்தன் இரணியகசிபு மற்றும் ராணி கயாது ஆகியோரின் மகனாகப் பிறந்தார். தாயின் வயிற்றில் இருந்தபோதே, பிரகலாதன் விஷ்ணுவின் பக்தரானார்.
அசுர வேந்தன் இரணியகசிபு
மனிதன், தெய்வம், கடவுள், விலங்கு அல்லது வேறு எந்த பொருளாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதுஎன்று பிரம்மாவிடம் இருந்து வரம் பெற்ற ஒரு அரக்க மன்னன் இரணியகசிபு. இரணியகசிபுவை எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும், பூமியிலோ அல்லது வானத்திலோ கொல்ல முடியாது. அதனால்தான் விஷ்ணு அரை மனித அரை சிங்கம் வடிவில் தோன்றி மாலை நேரத்தில் தனது நகங்களால் இரணியகசிபுவைக் கொன்றார்.
நரசிம்மமரின் வடிவங்கள்
நரசிம்ம மூர்த்தி பல்வேறு வடிவங்களில் சித்தரிக்கப்படுகிறார். நரசிம்மர் வெவ்வேறு வெளிப்பாடுகள் மற்றும் ஆயுதங்களுடன் 74 க்கும் மேற்பட்ட வடிவங்களைக் கொண்டுள்ளார். நரசிம்மரின் 9 முக்கிய வடிவங்கள் நவநரசிம்ஹா என்று அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாறு: உக்ரா நரசிம்ம, க்ரோதா நரசிம்ம, வீர நரசிம்ம, விலம்ப நரசிம்ம, கோபா நரசிம்ம, யோகா நரசிம்ம, அகோரா நரசிம்ம, சுதர்சன நரசிம்ம மற்றும் லட்சுமி.
MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!
நரசிம்ம ஜெயந்தி
இந்த ஆண்டு, நரசிம்ம ஜெயந்தி 2022 மே 14 சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், நரசிம்ம ஜெயந்தி நோன்பைக் கடைப்பிடிப்பதற்கான விதிகளும் வழிகாட்டுதல்களும் ஏகாதசி நோன்பைப் போலவே இருக்கின்றன.
நரசிம்ம ஜெயந்தி சடங்குகள்
சதுர்தாஷி திதி 2022 மே 14 அன்று 03:22 மணிக்கு தொடங்கி 2022 மே 15 அன்று 12:45 மணிக்கு முடிகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும், மதிய நேரத்தில் நரசிம்மரை வணங்கி, சூரிய அஸ்தமனத்திற்கு முன் நரசிம்ம பூஜை செய்யுங்கள். ஏனெனில் மாலை நேரத்தில்தான் நரசிம்மர் தோன்றினார், அந்த நேரத்தில் பூஜை செய்வது நரசிம்மரின் அருளை பெற்றுத்தரும்.
நரசிம்ம பூஜை நேரம்
நரசிம்ம ஜெயந்தி மாலை நேர பூஜை நேரம் 10:56 முதல் 01:39 வரை. பூஜை நேரம் கிட்டதட்ட 2 மணி நேரம் 45 நிமிடங்களாகும். மேலும் இரவு விழித்திருக்கவும், மறுநாள் காலையில் விசர்ஜன் பூஜை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சதுர்தாஷி திதி முடிந்ததும் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகு விரதத்தை முடிக்க வேண்டும்.
MOST READ: உலகையே கொலைகளால் நடுங்கவைத்த ஆபத்தான கொலைகார ஜோடிகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...!
நரசிம்ம ஜெயந்தியின் முக்கியத்துவம்
நரசிம்ம ஜெயந்தி விஷ்ணுவைப் வழிபடுபவர்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, நரசிம்ம சத்தியுகத்தில் அசுர மன்னனான இரணியகசிபுவைக் கொல்ல தோன்றி, அவரது தீவிர பக்தரான பக்த பிரஹலாதைக் காப்பாற்றி தர்மத்தை மீட்டெடுத்தார்.
நரசிம்ம மந்திரம்
" உக்ரம் விராம் மகா விஷ்னம் ஜ்வாலந்தம் சர்வடோ முகம் நிரிசிம்ஹாம் பீஷனம் பத்ரம் மிருத்யூர் மிருத்யம் நமமி அஹம் ". இந்த மந்திரத்தை நரசிம்ம பூஜையின் போது 108 முறை கூற வேண்டும்.
நரசிம்ம பூஜையின் நன்மைகள்
# நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட விஷயங்களில் வெற்றி
# நோய்களிலிருந்து பாதுகாப்பு
# கடன்கள், நிதி சிக்கல்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகளை சமாளித்தல்
# மனநலக் கோளாறிலிருந்து பாதுகாப்பு, மரண பயம் மற்றும் கனவுகளில் இருந்து விடுபடுதல்
# பகைகளில் இருந்து பாதுகாப்பு