புராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...!

எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்

தலைக்கு குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், மதத்திலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், வழிபாடும் உள்ளது.

Myths about Hair Wash in Hinduism

எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும், அதேசமயம் சில நாட்களில் தலைக்கு குளிப்பது கெட்ட பலன்களை வழங்கும். இந்த பதிவில் எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செவ்வாய்க் கிழமை

செவ்வாய்க் கிழமை

புரதான நம்பிக்கைகளின் படி செவ்வாய்க் கிழமையில் தலைக்கு குளிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க் கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு குளிக்கக் கூடாது. செவ்வாய் கிழமையன்று தலைக்கு குளிப்பது உங்கள் மீது செவ்வாயின் தாக்கத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் செவ்வாய் கிழமையில் தலைக்கு குளிக்க கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

புதன் கிழமை

புதன் கிழமை

முன்னோர்களின் கூற்றுப்படி புதன் கிழமை பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது. இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் பெண்கள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு மகனைக் கொண்ட தாய்மார்கள் ஒருபோதும் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. இது அவர்களின் மகனை ஆரோக்கியரீதியாக பாதிக்கும். அதேபோல புதிதாக திருமணம் ஆன பெண்கள் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை

இந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் கடுமையாக கடைபிடிக்கும் நம்பிக்கை இதுவாகும். வியாழக்கிழமை அன்று தலைக்கு குளிப்பது உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமியை வெளியே அனுப்பும் செயலாகும். இதனால் உங்கள் நிதி நிலை மிகவும் மோசமடையக்கூடும். மேலும் புராணக்கதைகளின் படி வியாழக்கிழமையில் தலைக்கு குளிக்கும் பெண் தன்னுடைய செல்வத்தை படிப்படியாக இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமையன்று துணி துவைப்பது கூட தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

சனிக்கிழமை

சனிக்கிழமை

சனிக்கிழமை தலைக்கு குளிப்பதைப் பற்றி பலவிதமான கதைகள் இந்து புராணங்களில் உள்ளது. சில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது உங்களுக்கு இருக்கும் சனி தோஷத்தின் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது. வேறுசில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, August 7, 2019, 17:48 [IST]
Desktop Bottom Promotion