Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தலைசுற்ற வைக்கும் இந்தியாவில் இன்றும் பின்பற்றப்படும் மோசமான திருமண மரபுகள்... இப்டிலாமா பண்ணுவாங்க!
இந்திய திருமணங்கள் அவை நடைபெறும் இடத்திற்கும், மாநிலத்திற்கும் ஏற்ப பலவேறு மரபுகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளது.
இந்தியா பல கலாச்சார நாடு மற்றும் பல மொழிகள், மதம் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகும். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இருப்பது நமது நாட்டின் திருமண முறைகள்தான். இந்திய திருமணங்களில் நிறைந்திருக்கும் உணர்ச்சிபூர்வமான சடங்குகளும் அதன் ஆடம்பரங்களும் உலகம் முழுவதும் பிரபலமானவை.
இந்திய திருமணங்கள் அவை நடைபெறும் இடத்திற்கும், மாநிலத்திற்கும் ஏற்ப பலவேறு மரபுகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த சடங்குகள் மற்றும் மரபுகள் திருமண பந்தத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால் இந்த சடங்குகளில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், முகம் சுளிக்க வைப்பதாகவும் இருப்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இந்த பதிவில் இந்தியாவில் இன்றளவும் பின்பற்றப்படும் திருமண மரபுகள் என்னவென்று பார்க்கலாம்.
பெற்றோர்கள் இல்லாத திருமணம்
திருமணம் பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் நடந்ததால்தான் பூரணத்துவம் அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் பாரம்பரிய பெங்காலி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளின் தயார் கண்டிப்பாக கலந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் தாயின் இருப்பு அந்த மணமக்களின் வாழ்க்கையில் தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
குஜராத்தி திருமணம்
குஜராத்தி திருமணங்களில் ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. அங்கு மணமகனின் கால்கள் பால் மற்றும் தேனினால் அவரது மாமனாரால் கழுவப்படும். இது மதுபர்கா என்று அழைக்கப்படுகிறது, இதில் வித்தியாசமான விஷயம் என்னவெனில் அந்த பாலின் ஒரு பகுதியை மணமகன் குடிக்க வேண்டும்.
உத்திர பிரதேச திருமணம்
உத்திர பிரதேசத்தின் பழங்குடி பகுதியில், மணமகன் ரோஜா அல்லது மல்லிகை பூக்களால் வரவேற்கப்படுவதில்லை, மாறாக மணமகன் மீது தக்காளி வீசப்படுகிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான மற்றும் விசித்திரமான சம்பவத்துடன் தொடங்கிய ஒரு உறவு நிச்சயமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான ஆழ்ந்த அன்பில் முடிவடையும் என்பது தக்காளியைத் தூக்கி எறிவதன் பின்னணியில் உள்ள நம்பிக்கையாகும்.
MOST READ: புராணங்களின் படி இந்த கனவுகளில் ஒன்று வந்தாலும் உங்களை நோக்கி பணம் தேடி வருகிறது அர்த்தமாம்...!
அஸ்ஸாம் திருமணம்
இந்தியாவிலேயே எளிமையான திருமணம் என்றால் அது அஸ்ஸாமின் ரபா பழங்குடியினர் நடத்தும் திருமணம்தான். இங்கு மணமகனும், மணமகளும் மாலைகளை பரிமாறிக்கொள்கிறார்கள், அவ்வாறு பரிமாறிக்கொண்டாள் அவர்கள் திருமணம் ஆனவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
மரத்துடன் திருமணம்
இந்தியாவில் மங்லிக் அல்லது மாங்கல்ய தோஷம் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு மணமகளுக்கு இந்த நிலை இருந்தால் அவர் மனிதனை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு அரச மரம் அல்லது நாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதிலுள்ள அசாதாரண மூடநம்பிக்கை என்னவென்றால் மணமகள் முதலில் மரத்தை மணந்து கொள்ளாவிட்டால் மணமகன் திருமணம் செய்தவுடன் விரைவில் இறந்து விடுவார்.
சமூக புறக்கணிப்பு திருமணம்
ஒரு சில ஆதிவாசி சமூகங்கள் இந்த சடங்கைப் பின்பற்றுகின்றன, அதாவது ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போது, பெண்கள் கணவருடன் ஒரு மறைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படுகிறார்கள், மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு வருடம் கழித்து திருமணத்தை கிராமத்தின் மூத்த உறுப்பினர்கள் அங்கீகரிக்கின்றனர். அதற்கு பிறகே சமூகத்தில் ஒரு பிரமாண்டமான விழா நடைபெற்று திருமணம் கொண்டாடப்படுகிறது.
மணிப்பூரி திருமணம்
பாரம்பரிய மணிப்பூரி திருமணத்தில், மணமகனும், மணமகளும் ஒரு குளத்தில் இரண்டு மீன்களை விடுவிக்கிறார்கள். மீன் ஒன்றாக நகர்ந்தால், அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
MOST READ: உங்க பெஸ்ட் பிரண்ட் இப்படி நடந்துக்கிட்டா அவங்க உங்கள காதலிக்க தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
பீஹாரி திருமணம்
பீஹாரி திருமணங்களில் மணமகளின் திறன்கள் அவரின் புகுந்த வீட்டில் நுழைந்த தருணத்தில் இருந்து சோதிக்கப்படுகின்றன. சடங்கின்படி மாமியார் பெண்ணின் தலையில் நிறைய பானைகளை வைப்பார்கள். அந்த நிலையிலேயே மணமகள் கீழே குனிந்து பெரியவர்களின் ஆசீர்வாதத்தை எடுக்க வேண்டும். இது மிகவும் பயமுறுத்தும் விழா, இது மணமகளின் ஸ்திரத்தன்மையை சோதிக்கிறது மற்றும் அவரது வெற்றி அவரது திருமண வாழ்க்கையில் எவ்வளவு சீரானதாக இருக்கும் என்பதற்கான அறிக்கையாகும்.