பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...!

கடந்த காலங்களில் சிறிய குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த மரண தண்டனை கூட மிகவும் கொடூரமான முறைகளில் அது நிறைவேற்றப்பட்டது.

தவறுகளுக்கு தண்டனைகள் கொடுப்பது என்பது அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து வருவதாகும். வரலாறு முழுவதும், குற்றவாளிகள், எதிரிகள் அல்லது விரும்பத்தகாதவர்களைக் கொல்ல பல மோசமான, பயங்கரமான முறைகள் உள்ளன. கொடூரமான குற்றங்களுக்குக் கூட இப்போது நமது நாட்டில் மரண தண்டனை விதிப்பது கடினமாக இருக்கிறது.

பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...!

கடந்த காலங்களில் சிறிய குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த மரண தண்டனை கூட மிகவும் கொடூரமான முறைகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனை முறைகள் படிக்கும்போதே நமக்குள் பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த தண்டனைகளில் பல இப்போது நடைமுறையில் இல்லை. மனித குலத்தின் ஆரம்பகால நாகரிகங்களில் நடைமுறையில் இருந்த மிக கொடூரமான மரண தண்டனை முறைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிலுவையில் அறையப்படுவது

சிலுவையில் அறையப்படுவது

சிலுவையில் அறையப்படுவது பண்டைய மரணதண்டனை முறைகளில் மிகவும் கொடூரமான மற்றும் வேதனையான தண்டனையாகும். இது கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது, முக்கியமாக செலூசிட்ஸ், கார்தீஜினியர்கள், பெர்சியர்கள் மற்றும் ரோமானியர்கள் இந்த முறையை பின்பற்றி வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பெரிய மர சிலுவையில் அறையப்பட்டு இறக்கும் வரை அதில் தொங்கவிடப்பட்டார். பொதுவாக இவர்கள் அதிக இரத்தப்போக்கால் இறந்து விடுவார்கள் அல்லது பசி மற்றும் தாகத்தால் இறந்து விடுவார்கள். சிலசமயம் அதிக குளிர் அல்லது வெப்பத்தால் கூட இறந்து விடுவார்கள். இந்த தண்டனை முறை பழங்காலத்தில் இருந்தது, இன்றும் சட்டவிரோதமாக சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்டுகிறது.

தோலை உரிப்பது

தோலை உரிப்பது

இது இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த சித்திரவதை மற்றும் தண்டனையின் மிகக் கொடூரமான மற்றும் நாகரிகமற்ற முறைகளில் ஒன்றாகும். இந்த மிருகத்தனமான தண்டனையில் கைதியின் உடலில் இருக்கும் தோல் உரிக்கப்படும், தோல் உரிக்கப்படும்போது அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோல் அகற்றப்பட்ட பிறகு, தண்டனைக்கு உட்படுத்தபட்டவர்கள் இரத்தம் வெளியேற தூக்கி எறியப்படுவார்கள். வலியை அதிகரிக்க உப்பு போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிகள், சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் ‘மந்திரவாதிகள்' மீது சுமத்தப்பட்ட பொது மரணதண்டனை இது.

நொறுக்கும் சக்கரம்

நொறுக்கும் சக்கரம்

நொறுக்கும் சக்கரம், ‘கேத்தரின் சக்கரம்' என்றும் அழைக்கப்படுகிறது, இது மரண தண்டனைக்கு பயன்படுத்தப்படும் சித்திரவதை சாதனமாகும். இது இடைக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது மேலும் 19 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. இது பண்டைய கிரேக்கத்தில் தோன்றியது, அங்கிருந்து பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சுவீடன் போன்ற பிற நாடுகளிலும் பரவியது. பாதிக்கப்பட்டவரை நீட்ட ஒரு மர சக்கரம் பயன்படுத்தப்பட்டது, அவர்களின் உறுப்புகள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கும். அவர்களின் எலும்புகள் அனைத்தையும் உடைக்க இடைவெளி வழியாக ஒரு சுத்தி அல்லது ஒரு பெரிய இரும்புக் கம்பி பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை ஒருவரை கொல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. இந்த முறையில் வழக்கமாக ஒரு நபர் தனது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் உடைத்து உயிருடன் வைத்திருக்கப்படுவார்கள்.

குடல்கள் உருவப்படுவது

குடல்கள் உருவப்படுவது

விபத்துக்களின் போது குடல் வெளியேறி ஒருவர் இறக்க வாய்ப்புள்ளது, ஆனால் ஒருவருக்கு தண்டனையை நிறைவேற்றும் வகையில் அவரின் குடல் உருவப்படும் கொடூரமான முறை பண்டைய காலத்தில் இருந்தது. இதுவரை கேட்டிராத மிகக் கடுமையான தண்டனைகளில் இதுவும் ஒன்றாகும். திருடர்கள் மற்றும் விபச்சாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது. சில அல்லது அனைத்து முக்கிய உறுப்புகளும் ஒவ்வொன்றாக உடலில் இருந்து, முக்கியமாக அடிவயிற்றில் இருந்து அகற்றப்பட்டன. இது இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜப்பானில் நடைமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கழுமரம் ஏற்றுவது

கழுமரம் ஏற்றுவது

15 ஆம் நூற்றாண்டில் ருமேனியாவில் டிராகுலா என்று நம்பப்பட்டவர்கள் ர்மையான மற்றும் அடர்த்தியான கம்பத்தில் உட்காரும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம் அவர்களை கொன்றார்கள். பின்னர் கம்பம் நிமிர்ந்து எழுப்பப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர் அவரது எடையால் கீழே சறுக்குவதற்கு விடப்பட்டார். மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தண்டனைகளில் மிகவும் கொடூரமானது இதுவாகும். இது ரோமானியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் மற்றும் துருக்கியர்களுக்கு மிகவும் பிடித்தது. இது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. குறிப்பாக இந்தியாவிலும் இந்த தண்டனைமுறை நடைமுறையில் இருந்தது. மரணதண்டனை மிகவும் பயங்கரமான முறைகளில் ஒன்று. பாதிக்கப்பட்டவர் மலக்குடல் வழியாக, யோனி வழியாக, பக்கவாட்டில் அல்லது வாய் வழியாகவும் துளைக்கப்பட்டு, ஆழ்ந்த இரத்தப்போக்கு மற்றும் வலி காயங்களை உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் கல்லறைக்குள் தள்ளப்பட்டனர். பாதிக்கப்பட்டவர் அவர்கள் இறப்பதற்கு முன்னர் நீண்ட கால துன்பங்களை தாங்க வேண்டியிருந்தது.

நசுக்குவது

நசுக்குவது

நசுக்குவதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் மரணம் என்பது ஒரு விரிவான வரலாற்றைக் கொண்ட ஒரு பிரபலமான மரணதண்டனை முறையாகும், இது காலப்போக்கில் பல மாறுபட்ட முறைகளைப் பயன்படுத்துகிறது. அவற்றில் முக்கியமான ஒன்று ‘யானைகளால் நசுக்குதல்', இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டது. இது ரோமானியர்களாலும் வியட்நாமில் உள்ள குயென் வம்சத்தினாலும் பயன்படுத்தப்பட்டது என்று வட்டாரங்கள் கூறுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் தலையுடன் ஒரு கல் அல்லது சற்று வெளியேற்றப்பட்ட மேற்பரப்பில் கட்டப்படுவார். மெதுவாக தலையில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் மிகவும் பயிற்சி பெற்ற யானையால் தலையை நசுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடைசி மூச்சை எடுப்பதற்கு முன்பு அவரது பயங்கரமான மரணத்தின் அனைத்து கொடூரங்களையும் உணருவார். மற்றொரு முறையில், பாதிக்கப்பட்டவரின் மார்பில் மிகப் பெரிய மற்றும் கனமான கற்களால் அழுத்தி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது.

எரித்துக் கொல்வது

எரித்துக் கொல்வது

மற்றொரு பயங்கரமான மரணதண்டனை முறை முக்கியமாக ரோம், சிசிலி, இங்கிலாந்து, மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும் நடைமுறையில் இருந்தது. எரித்துக் கொல்வது சாதாரணமான தண்டனைதான் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இந்த முறையில் அவ்வாறு நடப்பதில்லை. தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவரின் ஒவ்வொரு உறுப்பும் தனித்தனியாக எரிக்கப்படும். கைகள், கால்கள், மார்பு, வயிறு என ஒவ்வொரு பாகங்களாக எரிக்கப்பட்டு இறுதியில் மரணம் ஏற்படுத்தப்படும். சிலசமயம் நெருப்பு வைப்பதற்கு முன் அவர்களுக்கு கார்பன் மோனாக்சைடு விஷம் கொடுக்கப்பட்டது.

இரண்டாக அறுத்துக் கொல்வது

இரண்டாக அறுத்துக் கொல்வது

அறுப்பதன் மூலம் மரணம் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது, எடுத்துக்காட்டாக ஐரோப்பாவில் ரோமானியப் பேரரசின் கீழ், ஸ்பெயினில் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கமாக தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள். ஒரு பெரிய கத்தி கொண்டு அவர்கள் இரண்டாக அறுக்கப்படுவார்கள், இறுதியில் தலையும் பிளக்கப்படும். தலை துண்டிக்கப்படும் வரை அவர்கள் உயிருடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

குதிரையில் இழுத்து சென்று தூக்கிலிடுவது

குதிரையில் இழுத்து சென்று தூக்கிலிடுவது

இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட மிகவும் கொடூரமான மிருகத்தனமான தண்டனைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த தண்டனையில் தண்டைனைக்கு ஆளானவர் மரக்கட்டையை கட்டப்பட்டு தண்டனை வழங்கும் இடத்திற்கு குதிரையின் மேல் அமர்ந்தவரால் இழுத்து வரப்படுவார். அங்கு வந்தபின் சாகும் வரை தூக்கிலப்படுவார். அதன்பின் தலை துண்டிக்கப்பட்டு மாற்றம் நான்கு துண்டுகளாக வெட்டப்படுவார். அவரின் மீதமுள்ள உடல் நகரின் பல்வேறு முக்கியமான இடங்களில் வைக்கப்படும். இந்த தண்டனை ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

மெதுவாக வெட்டுதல்

மெதுவாக வெட்டுதல்

"நீடித்த மரணம்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" என்றும் சீனாவில் லிஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது கி.பி 900 இல் குற்றவாளிகளை தண்டிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான தண்டனையாகும். இந்த முறையில் ஒருவரின் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு வெட்டப்படும். இறுதியில் மரணம் வரை இந்த சித்திரவதை தொடரும். தேசத்துரோகம், வெகுஜன கொலை, எஜமானரை கொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. அரசர்கள் மக்களை அச்சுறுத்துவதற்காக இதைப் பயன்படுத்தினர், சில சமயங்களில் சிறு குற்றங்களுக்காகவும் இந்த தண்டனை வழங்கப்பட்டது. சில பேரரசர்கள் இந்த தண்டனையை தங்கள் எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion