Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அந்த ராசி மாற்றத்தின் காரணமாக சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, அதனால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

கேந்திர திரிகோண ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். இந்த யோகத்தினால் நிறைய ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, தொழில் வாழ்க்கையில் வெற்றிகளும் குவியும். இப்போது மகரத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது அட்டகாசமான பலன்கள் வழங்கும். இந்த ராசியின் 4 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், இக்காலத்தில் அனைத்துவிதமான சுகங்களும் கிடைக்கும். மேலும் இந்த யோக காலத்தில் ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு, இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் அதிலிருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு வலுபெறும்.

மகரம்
மகர ராசியில் இந்த யோகமானது லக்ன வீட்டில் உருவாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் இக்காலத்தில் திறக்கப்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு புதிய திருமண வரன் கிடைக்கலாம். மேலும் இக்காலத்தில் கூட்டு தொழிலில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது இனிமையானதாக இருக்கும். இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக இந்த யோக காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. பணிபுரிபவர்களின் கௌரவம் இக்காலத்தில் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications