Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அந்த ராசி மாற்றத்தின் காரணமாக சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, அதனால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

கேந்திர திரிகோண ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். இந்த யோகத்தினால் நிறைய ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, தொழில் வாழ்க்கையில் வெற்றிகளும் குவியும். இப்போது மகரத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது அட்டகாசமான பலன்கள் வழங்கும். இந்த ராசியின் 4 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், இக்காலத்தில் அனைத்துவிதமான சுகங்களும் கிடைக்கும். மேலும் இந்த யோக காலத்தில் ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு, இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் அதிலிருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு வலுபெறும்.

மகரம்
மகர ராசியில் இந்த யோகமானது லக்ன வீட்டில் உருவாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் இக்காலத்தில் திறக்கப்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு புதிய திருமண வரன் கிடைக்கலாம். மேலும் இக்காலத்தில் கூட்டு தொழிலில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது இனிமையானதாக இருக்கும். இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக இந்த யோக காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. பணிபுரிபவர்களின் கௌரவம் இக்காலத்தில் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











