Just In
- 43 min ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 1 hr ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 3 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Don't Miss
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அந்த ராசி மாற்றத்தின் காரணமாக சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, அதனால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி புத்திகாரகனான புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.
கேந்திர திரிகோண ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். இந்த யோகத்தினால் நிறைய ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, தொழில் வாழ்க்கையில் வெற்றிகளும் குவியும். இப்போது மகரத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது அட்டகாசமான பலன்கள் வழங்கும். இந்த ராசியின் 4 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், இக்காலத்தில் அனைத்துவிதமான சுகங்களும் கிடைக்கும். மேலும் இந்த யோக காலத்தில் ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு, இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் அதிலிருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு வலுபெறும்.
மகரம்
மகர ராசியில் இந்த யோகமானது லக்ன வீட்டில் உருவாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் இக்காலத்தில் திறக்கப்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு புதிய திருமண வரன் கிடைக்கலாம். மேலும் இக்காலத்தில் கூட்டு தொழிலில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது இனிமையானதாக இருக்கும். இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக இந்த யோக காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. பணிபுரிபவர்களின் கௌரவம் இக்காலத்தில் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)