Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாஸ்திரத்தின் படி இந்த சூழ்நிலைகளில் சபலப்படும் ஆண்கள் நேரடியாக நரகத்திற்குத்தான் செல்வார்கள்...!
மனுஸ்மிருதி அல்லது மமானவ தர்மசாஸ்திரத்தில் பாலியல் உறவுகளை நிறுவுவது மற்றும் தவிர்ப்பது பற்றிய பல விதிகளும், குறிப்புகளும் உள்ளது.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தின் பண்டைய அறிஞர்களும் வாழ்க்கை நெறிமுறைகள், அறநெறி மற்றும் பாலியல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதர்களுக்கு தார்மீக சிந்தனைகளை உருவாக்கியுள்ளனர். இந்த வழிகாட்டுதல்கள் மனிதர்களின் மனம், ஆன்மா, உடல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சீராக செயல்பட உதவும்.

இந்து மதத்தில் கற்பு மற்றும் பிரம்மச்சரியம் இரண்டும் நல்லொழுக்கத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆன்மீக உணர்தலின் இலக்கை நோக்கி உடல் மற்றும் மனதின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியாக இது நம்பப்படுகிறது. தனக்குள்ளேயே அமைதியையும், சுய உணர்தலையும் விரும்புபவர்களுக்கு ஆன்மீகமே அதனை வழங்குவதாக இருக்கும். பிரம்மா தனது மூத்த மகன் மனுவுக்கு மனிதகுலத்திற்கான தார்மீக நெறிமுறைகளை அமைக்க வழிகாட்டினார், இதனால் அவர்கள் நித்திய வாழ்க்கைக்கான வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.

மனுவின் நீதிகள்
மனுஸ்மிருதி அல்லது மானவ தர்மசாஸ்திரத்தில் பாலியல் உறவுகளை நிறுவுவது மற்றும் தவிர்ப்பது பற்றிய பல விதிகளும், குறிப்புகளும் உள்ளது. பாலியல் உறவுகளை நிறுவுவது முதல் விபச்சாரம், துரோகம் போன்றவற்றிற்கான தண்டனைகள் வரை இதில் உள்ளது.

சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்கள் தொடர்பான பாவங்கள்
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டால் அது மனிதக் குலத்தின் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதில் கூறியுள்ளபடி ஆண்கள் மரணத்திற்க்கு பிறகு அமைதியான வாழ்க்கையை பெற விரும்பினால் சில சந்தர்ப்பங்களில் சிற்றின்ப காரணங்களுக்காக சபலப்படக்கூடாது. இல்லையெனில் நரகத்தில் பல தண்டனைகளை அனுபவிக்க நேரிடும்.

தியானம்
ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட தானாக மனிதன் ஒருவன் எந்த சூழ்நிலையிலும் தந்து கவனத்தை சிதற விடக்கூடாது. அந்த சமயத்தில் எந்த பெண்ணின் மீதும் சபலமோ அல்லது காமத்தின் எண்ணமோ வரவேக்கூடாது.

உணர்வு இழந்த நிலை
ஒரு மனிதனின் மனம் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான புத்திசாலித்தனத்தை அவர் இழக்க நேரிடும்.

காமம்
ஒரு மனிதன் காம நிலையில் இருக்கும்போது, பெண்களுக்கு மரியாதை கொடுக்காதபோது, மற்றவர்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இதனால் அவர் தன்னுடைய ஒழுக்கத்தை இழக்க நேரிடும்.

தூக்கமின்மை
ஒரு மனிதன் தூக்கமின்மையால் அவதிப்படும்போதோ அல்லது தூக்கமில்லாத பல இரவுகளை கடந்து வந்திருக்கும்போதோ சபல படக்கூடாது, இந்த நிலையில் அவர்களுக்குள் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். இதனால் அவர்கள் சுய அழிவிற்கு தள்ளப்படலாம்.

சோர்வு
ஒரு மனிதன் சோர்வு நிலையில் இருக்கும்போது சபல படக்கூடாது. இந்த சூழ்நிலையில் அவர் உடல்ரீதியாக அதிக கஷ்டப்பட நேரிடும். அவர்கள் உடலில் சதையே இல்லாதது போல உணருவார்கள்.

கண்ணிய இழப்பு
வெளிப்படையாக ஒரு மனிதன் தவறான ஆசைகளால் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடும் போது அவரின் அனைத்து கண்ணியங்களையும் இழந்து தன்னுடைய வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறான்.

மன போதை
ஒருவரின் மனா போதை அதிகரித்து இந்த உலகத்தின் மீது எந்த பற்றும் இன்றி மோசமான நிலையில் இருக்கும்போது சபலப்படக்கூடாது.

மயக்க நிலை
ஒரு மனிதன் மயக்க நிலையில் இருக்கும்போது அல்லது தனது சுயநினைவில் இல்லாதபோது மயக்கம் பாதி தெளிந்த நிலையில் இருக்கும்போது காம ஆசைகளை கொள்ளக்கூடாது.

மரணம்
ஒரு மனிதன் மரண வாசலில் நிற்கும்போதோ அல்லது முடிவுக்காக காத்திருக்கும்போதோ சபலங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இது அவர்களை நேராக நரகத்தில் தள்ளும்.



Click it and Unblock the Notifications











