மகா சிவராத்திரியில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்க போகுது... உங்க ராசிக்கு எப்படி?

2023 மகா சிவராத்திரி நாளில் இருந்து 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் மற்றும் சிவனின் அருளைப் பெற எந்த பொருட்களால் சிவனை வழிபட வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

Mahashivratri 2023 Horoscope: இந்தியாவில் இந்துக்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு தினம் தான் மகா சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரியானது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு பொருட்களால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்வார்கள். மேலும் இந்த மகா சிவராத்திரி நாளில் சிவனின் ஆசியைப் பெற பக்தர்கள் உறங்காமல் சிவனை நினைத்து மனமுருக வேண்டுவார்கள்.

Mahashivratri 2023 Horoscope: Effects On 12 Zodiac Signs In Tamil

இப்படிப்பட்ட மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி நாளில் கிரகங்களின் நிலைகளால் 12 ராசிகளிலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் 2023 மகா சிவராத்திரி நாளில் இருந்து 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் மற்றும் சிவனின் அருளைப் பெற எந்த பொருட்களால் சிவனை வழிபட வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் இருந்து நற்பலன்கள் கிடைக்கவுள்ளது. இதுவரை நிதி பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த சிவராத்திரிக்கு பின் அது முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு சந்தன அபிஷேகம் செய்ய இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி நல்ல பலன்களை வழங்கும். அதில் சிலர் நற்செய்திகளையும், சிலர் பெரிய லாபத்தைப் பெறலாம். ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக ஏதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், அது இந்நாளில் வெற்றிகரமாக நடக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் மல்லிகை பூக்களை சிவபெருமானுக்கு படைத்து வணங்குவது நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் சிவனின் ஆசி கிடைக்கும். அதுவும் பணிபுரிபவர்களாக இருந்தால், அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும். இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்க மகா சிவராத்திரி நாளில் சிவப்பு சந்தனத்தை வாங்கி கொடுத்து வழிபடுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் வெள்ளை நிற பூக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் அஷ்டம சனியின் தாக்கத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். ஒருவேளை நீங்கள் இதுவரை ஒருவித மன அழுத்தத்தில் இருந்தால், இந்த மகா சிவராத்திரியில் இருந்து சற்று மன நிம்மதியை அடைவீர்கள். ஆனால் இந்நாளில் சிவபெருமானை வழிபட மறந்துவிடாதீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியில் இருந்து பண பிரச்சனைகளை சந்திக்கமாட்டார்கள். சிவனின் அருளால் பணம் சம்பாதிக்க பல்வேறு வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் செம்பருத்தி பூக்களை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பிரச்சனையை அதிகரிக்கும். மகா சிவராத்திரி நாளில் சிவனின் அருளைப் பெற சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

மகா சிவராத்திரியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். இந்நாளில் இருந்து இந்த ராசிக்காரர்கள் கடன்கள் அனைத்தும் தீரும் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நற்பலனைப் பெற மகா சிவராத்திரி நாளில் ஊமத்தம் பூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்வதோடு, நல்ல தெளிவைப் பெறுவார்கள். வாழ்வில் நல்ல விஷயங்களை ஆதரித்தால், நல்லது நடக்கும் என்பதை புரிந்து கொள்வீர்கள். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவ சாலிசாவை பாராணம் செய்வது நல்லது.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியானது மங்ளகரமாக இருக்கும். சிலர் இந்நாளில் நல்ல செய்தியைப் பெறலாம். சிலர் நீண்ட நாட்களுக்கு பின் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் எள்ளு விதைகளை சிவனுக்கு படைப்பது நல்லது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் யாரையும காயப்படுத்தாமல் இருக்க வெண்டும். மற்றவர்களுடன் நல்ல எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் தேனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நல்லது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் தங்களின் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நாளில் மதிப்புமிக்க பொருட்களை இழக்க வாய்ப்புள்து. பேராசையைக் கட்டுப்படுத்த வேண்டும். சிவனின் அருளைப் பெற இந்த ராசிக்காரர்கள் நெய்யை சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 16, 2023, 16:40 [IST]
Desktop Bottom Promotion