Just In
- 2 hrs ago
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- 2 hrs ago
உங்களின் இந்த பழக்கங்கள் உங்கள் வயதை விட அதிக வயதான தோற்றத்தை உங்களுக்கு அளிக்குமாம்...!
- 3 hrs ago
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- 4 hrs ago
ஆண்களே! பெண்களின் உச்சக்கட்டம் பற்றி நீங்க நினைக்கிறது தப்பாம்... அப்ப நீங்க எப்படி செயல்படனும் தெரியுமா?
Don't Miss
- News
மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்.. யோசனையை வரவேற்ற வேல்முருகன்! கூடவே வைத்த மற்றொரு கோரிக்கை
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Movies
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளின் பட்டியலில் மகா சிவராத்திரியும் ஒன்று. இந்நாளில் சிவன் கோயில்களில் ஏராளமான சிவபெருமானின் பக்தர்களைக் காணலாம். மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு நேரங்களில் கண் விழித்து விரதங்களை கடைப்பிடித்து, சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து வருவார்கள்.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரி மிகவும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2022 மார்ச் 01 அன்று வருகிறது.
MOST READ: இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்கள் பலவிதமான பொருட்களை சிவபெருமானுக்கு படைத்து வணங்குவார்கள். ஆனால் மகா சிவராத்திரி அன்று சிவனின் முழு அருளும் கிடைக்க வேண்டுமானால், ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற சிவ மந்திரங்களை சொல்லி சிவனை வழிபட வேண்டும். கீழே மகா சிவராத்திரி அன்று 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய சிவ மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனின் அருளைப் பெற 'நாகேஷ்வராய நமஹ:' என்னும் மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.

ரிஷபம்
மகா சிவராத்திரி நாளில் ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள், 'ஓம் த்ரி நேத்ராய நமஹ:' என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதனால் சிவபெருமானின் ஆசியைப் பெறலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 'ஓம் ஸ்ரீகாந்தாய நமஹ:' என்னும் சிவ மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் உச்சரித்து சிவனை வழிபடுவது மிகவும் நல்லது.

கடகம்
மகா சிவராத்திரி அன்று கடக ராசிக்காரர்கள் 'ஓம் ஜனனபூதாய நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறி சிவனை வழிபட்டால், சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று 'ஓம் ஓம்காராய நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறுவது நல்லது. இதனால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிவனின் அருளை சிவராத்திரி அன்று பெற நினைத்தால், 'ஓம் யுக்தகேசத்மரூபயா நமஹ' என்னும் மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று சிவபெருமானின் அருள் கிடைக்க 'ஓம் நந்தேஷ்வராய நமஹ' என்னும் சிவ மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று 'ஓம் கம்கத்தராய நமஹ' என்னும் சிவபெருமானின் மந்திரத்தைக் கூறி வழிபடுவது நல்லது.

தனுசு
மகா சிவராத்திரி அன்று தனுசு ராசிக்காரர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து 'ஓம் ஞானபுத்தாய நமஹ' என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வர, சிவனின் அருள் கிடைக்கும்.

மகரம்
சிவபெருமானின் தீவிர பக்தரான சனி பகவான் ஆளும் ராசி தான் மகரம். இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் முழு அருளும் கிடைக்க வேண்டுமானால், 'ஓம் சோம்நாதாய நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் 'ஓம் தத்புருசாய நமஹ' என்னும் மந்திரத்தைக் கூறி சிவபெருமானை வழிபட்டு வந்தால், சிவனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.

மீனம்
மகா சிவராத்திரி நாளில் மீன ராசிக்காரர்கள் 'ஓம் தயாநிதி நமஹ' என்னும் சிவ மந்திரத்தைக் கூறி வழிபட்டு வந்தால், சிவபெருமானை குளிர்வித்து அவரது முழு அருளைப் பெறலாம்.