Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
இந்த ராசிக்காரங்களுக்கு மத்தவங்கள விட புத்தி கொஞ்சம் கம்மியாதான் இருக்குமாம் தெரியுமா?
ஒருவர் பிறந்த ராசி அவர்களின் புத்திக்கூர்மையின் மீது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி ஒருவர் முட்டாளாக அல்லது மந்தமாக இருப்பதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே ஒரே அளவிலான மூளைதான் உள்ளது. ஆனால் அதனை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அவர்கள் புத்திசாலியா அல்லது முட்டாளா என்பது தீர்மானிக்கப்படுகிறது. சிலர் அனைத்து விஷயங்களிலும் புத்திசாலிகளாக இருப்பார்கள், சிலர் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் புத்திசாலிகளாக இருப்பார்கள், சிலரோ அனைத்து விஷயங்களிலுமே முட்டாள்தனமாக நடந்து கொள்வார்கள்.

ஒருவர் பிறந்த ராசி அவர்களின் புத்திக்கூர்மையின் மீது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி ஒருவர் முட்டாளாக அல்லது மந்தமாக இருப்பதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மந்தமான புத்தியுடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நிராகரிப்புகளை அவை பர்சனலாக இல்லாத போது கூட மிகவும் பர்சனலாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகவும் சுயநலவாதியாகவும், முட்டாள்களாகவும் இருப்பார்கள். இந்த குணங்கள் இவர்களை சிலசமயம் புத்திசாலிகளாகவும், சிலசமயம் முட்டாள்களாகவும் காட்டும். மேலும்இவர்கள் மிகவும் வேதனை அடைந்தால், அவர்கள் முற்றிலும் மனச்சோர்வடைந்து சோம்பேறியாகி, வீட்டிலேயே தங்கி, தங்களை நினைத்து வருந்துவார்கள். இந்த மக்கள் பொதுவாக பெரும்பாலான நேரங்களில் குழப்பத்தில் இருப்பார்கள். இதுவே இவர்களை மனதமானவர்களாக மாற்றும்.

சிம்மம்
தவறான காரியங்களை செய்யும்போது கூட தங்களை சரியென நிரூபிக்க சிம்ம ராசிக்காரர்கள் பெரிதும் முயல்வார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் தீவிரமான மற்றும் வேடிக்கையான இரண்டு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னும் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். இருப்பினும், அவர்கள் நிராகரிப்பு மற்றும் தோல்வியை ஒரு கற்பிக்கக்கூடிய தருணமாக எடுத்துக்கொண்டு அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இவர்கள் ஒரு நடுநிலை அறிகுறியாகும், இவர்கள் சில நேரங்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் மற்றும் குழந்தைத்தனமானவர்களாகவும் செயல்பட முடியும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சில நேரங்களில் புத்திசாலித்தனமாகவும், சில சமயங்களில் மந்தமாகவும் செயல்பட முடியும். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்களை பொதுவாக அப்பாவிகள் என்று அழைக்கலாம். இவர்கள் எந்த விஷயத்தையும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், அதேசமயம் சுயநலவாதிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் பற்றிய உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள், தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாகவும், மந்தமாகவும் இருப்பதைக் காட்டிலும் மற்றவர்களின் மனதை கையாள தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த அடையாளத்தின் கீழ் வரும் மக்கள் எல்லாவற்றையும் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்க விரும்புகிறார்கள். மற்றவர்களை சரியாக எடைபோடுவது, மோசமான சூழ்நிலையில் இருந்து கூட இலாபத்தை அடைவது போன்ற சில திறமைகள் இவர்களிடம் இருக்கலாம். ஆனால் நிராகரிப்பை இவர்களால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது, நிராகரிப்பு இவர்களின் வேதனையை பலமடங்கு அதிகரிக்கும். அதற்காக முட்டாள்தனமான வழிகளில் பழிவாங்குவார்கள்.

தனுசு
தனுசு தங்கள் உலகத்திற்குள் மட்டுமே இருப்பதால் அவை சில நேரங்களில் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இராசி அடையாளத்தின் கீழ் வரும் மக்கள் சுயநலவாதிகள் மற்றும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். முடிவெடுக்கும் மற்றும் தங்களுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது அவர்களுக்கு புத்திசாலித்தனம் போதாது. இவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறானதாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் மிக மோசமான மனிதர்களாகக் கருதப்படுகின்றனர், அதற்கு காரணம் அவர்களின் அதிக உணர்ச்சிவசப்படும் குணம்தான். எப்பொழுதும் அழுமூஞ்சியாக இருக்கும் இவர்கள் சிலசமயம் புத்திசாலிகளாகவும் சிலசமயம் முட்டாளாகவும் நடந்து கொள்வார்கள். அதிக உணர்ச்சிவசப்படும் இவர்கள் சிலசமயம் முட்டாள்தனமான விஷயங்களை கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications











