Just In
- 14 min ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த ராசிக்காரங்களுக்கு மத்தவங்கள விட புத்தி கொஞ்சம் கம்மியாதான் இருக்குமாம் தெரியுமா?
ஒருவர் பிறந்த ராசி அவர்களின் புத்திக்கூர்மையின் மீது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி ஒருவர் முட்டாளாக அல்லது மந்தமாக இருப்பதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே ஒரே அளவிலான மூளைதான் உள்ளது. ஆனால் அதனை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அவர்கள் புத்திசாலியா அல்லது முட்டாளா என்பது தீர்மானிக்கப்படுகிறது. சிலர் அனைத்து விஷயங்களிலும் புத்திசாலிகளாக இருப்பார்கள், சிலர் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் புத்திசாலிகளாக இருப்பார்கள், சிலரோ அனைத்து விஷயங்களிலுமே முட்டாள்தனமாக நடந்து கொள்வார்கள்.
ஒருவர் பிறந்த ராசி அவர்களின் புத்திக்கூர்மையின் மீது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி ஒருவர் முட்டாளாக அல்லது மந்தமாக இருப்பதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மந்தமான புத்தியுடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நிராகரிப்புகளை அவை பர்சனலாக இல்லாத போது கூட மிகவும் பர்சனலாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகவும் சுயநலவாதியாகவும், முட்டாள்களாகவும் இருப்பார்கள். இந்த குணங்கள் இவர்களை சிலசமயம் புத்திசாலிகளாகவும், சிலசமயம் முட்டாள்களாகவும் காட்டும். மேலும்இவர்கள் மிகவும் வேதனை அடைந்தால், அவர்கள் முற்றிலும் மனச்சோர்வடைந்து சோம்பேறியாகி, வீட்டிலேயே தங்கி, தங்களை நினைத்து வருந்துவார்கள். இந்த மக்கள் பொதுவாக பெரும்பாலான நேரங்களில் குழப்பத்தில் இருப்பார்கள். இதுவே இவர்களை மனதமானவர்களாக மாற்றும்.
சிம்மம்
தவறான காரியங்களை செய்யும்போது கூட தங்களை சரியென நிரூபிக்க சிம்ம ராசிக்காரர்கள் பெரிதும் முயல்வார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் தீவிரமான மற்றும் வேடிக்கையான இரண்டு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னும் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். இருப்பினும், அவர்கள் நிராகரிப்பு மற்றும் தோல்வியை ஒரு கற்பிக்கக்கூடிய தருணமாக எடுத்துக்கொண்டு அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இவர்கள் ஒரு நடுநிலை அறிகுறியாகும், இவர்கள் சில நேரங்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் மற்றும் குழந்தைத்தனமானவர்களாகவும் செயல்பட முடியும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சில நேரங்களில் புத்திசாலித்தனமாகவும், சில சமயங்களில் மந்தமாகவும் செயல்பட முடியும். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்களை பொதுவாக அப்பாவிகள் என்று அழைக்கலாம். இவர்கள் எந்த விஷயத்தையும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், அதேசமயம் சுயநலவாதிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் பற்றிய உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள், தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாகவும், மந்தமாகவும் இருப்பதைக் காட்டிலும் மற்றவர்களின் மனதை கையாள தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த அடையாளத்தின் கீழ் வரும் மக்கள் எல்லாவற்றையும் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்க விரும்புகிறார்கள். மற்றவர்களை சரியாக எடைபோடுவது, மோசமான சூழ்நிலையில் இருந்து கூட இலாபத்தை அடைவது போன்ற சில திறமைகள் இவர்களிடம் இருக்கலாம். ஆனால் நிராகரிப்பை இவர்களால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது, நிராகரிப்பு இவர்களின் வேதனையை பலமடங்கு அதிகரிக்கும். அதற்காக முட்டாள்தனமான வழிகளில் பழிவாங்குவார்கள்.
தனுசு
தனுசு தங்கள் உலகத்திற்குள் மட்டுமே இருப்பதால் அவை சில நேரங்களில் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இராசி அடையாளத்தின் கீழ் வரும் மக்கள் சுயநலவாதிகள் மற்றும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். முடிவெடுக்கும் மற்றும் தங்களுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது அவர்களுக்கு புத்திசாலித்தனம் போதாது. இவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறானதாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் மிக மோசமான மனிதர்களாகக் கருதப்படுகின்றனர், அதற்கு காரணம் அவர்களின் அதிக உணர்ச்சிவசப்படும் குணம்தான். எப்பொழுதும் அழுமூஞ்சியாக இருக்கும் இவர்கள் சிலசமயம் புத்திசாலிகளாகவும் சிலசமயம் முட்டாளாகவும் நடந்து கொள்வார்கள். அதிக உணர்ச்சிவசப்படும் இவர்கள் சிலசமயம் முட்டாள்தனமான விஷயங்களை கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள்.