Latest Updates
-
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களிடம் சாத்தானின் குணங்கள் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...!
விதவைகளின் கொலை மற்றும் கற்பழிப்புகளுக்கு எதிராக போராடிய முதல் இந்திய பெண் ஆசிரியர் யார் தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே பெண்கள் ஆணாதிக்கத்தால் நசுக்கப்பட்டுத்தான் வந்தனர். உண்மையில், இப்போதும் பல நாடுகளில் இந்தியா உட்பட பெண்கள் ஆணாதிக்கத்தால் நசுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றனர்.
உலகம் தோன்றிய காலம் முதலே பெண்கள் ஆணாதிக்கத்தால் நசுக்கப்பட்டுத்தான் வந்தனர். உண்மையில், இப்போதும் பல நாடுகளில் இந்தியா உட்பட பெண்கள் ஆணாதிக்கத்தால் நசுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றனர். வரலாறு முழுவதும் ஆணாதிக்கத்தின் கடிவாளத்திற்கு தங்களைச் சமர்ப்பித்துக்கொண்டு அமைதியாக வீட்டிற்குள்ளேயே இருந்து உலகைப் பார்க்கும்படி பெண்கள் கூறப்பட்டுள்ளனர்.

இன்று கல்வியைப் பெறுவது முதல் வெற்றிகரமான முதல் உலகின் முக்கிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பு வகிப்பது வரை பெண்கள்பல உயரங்களை அடையத் தொடங்கியுள்ளனர் . பெண்கள் முழு சமத்துவத்தை அடைய இன்னும் நிறைய செய்ய வேண்டியிருந்தாலும், பெண்கள் இப்போது இருக்கும் நிலைக்கு அவர்களை அழைத்துச் வந்த, நமக்கு முன் வாழ்ந்த பெண்களின் பல நூற்றாண்டு கடின உழைப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். பெண்களின் சமத்துவத்திற்காக போராடிய வீரமிக்க சில இந்திய பெண்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சாவித்ரிபாய் புலே (1831-1897)
சாவித்ரிபாய் புலே ஒரு தலித் பெண் மற்றும் இந்தியாவில் பெண்ணியத்தின் முன்னோடி ஆவார். அனைத்து சாதி பெண்களுக்கும் கல்வி கற்பிக்கும் 17 பள்ளிகளை நிறுவிய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். ஜாதி மற்றும் பாலின பாகுபாட்டை ஒழிக்க அவர் தனது கணவர் மற்றும் பிற பெண்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர் பெண் சிசுக்கொலையைத் தடுக்க 'பால்ஹத்யா பிரதிபந்தக் கிரிஹா'வை நிறுவினார், மேலும் விதவைகள் மற்றும் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கொல்வதற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். சாவித்ரிபாய் புலே இன்று இந்தியாவில் உள்ள பெண்ணிய இயக்கத்தின் ஆதரவாளர்களால் மிகவும் மதிக்கப்படுகிறார்.

பாத்திமா ஷேக்
ஃபாத்திமா ஷேக் ஃபுலே தம்பதியின் சக ஊழியராக இருந்தார், மேலும் அவர் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியையாகக் கருதப்படுகிறார். ஃபுலே தம்பதியினர் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவர்களது நடைமுறைகளை நிறுத்தவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவோ அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டது. அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி வீட்டை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுத்தனர், மேலும் உஸ்மான் மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோரின் வீட்டில் வசிக்க இடம் வழங்கப்பட்டது.
சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் இறுதியில் அவரது வீட்டில் ஒன்றாக ஒரு பள்ளியை நிறுவினர், மேலும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கற்பிக்கத் தொடங்கினர். இதன் மூலம், அவர்கள் சவர்ணா மற்றும் மரபுவழி முஸ்லிம் சமூகங்களின் நெறிமுறைகளை மீறினர், மேலும் 19 ஆம் நூற்றாண்டில் ஒரு முஸ்லீம் பெண்ணாக பாத்திமா ஷேக் இந்த விதிமுறைகளுக்கு எதிராகச் சென்று எடுத்த அபாயங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

தாராபாய் ஷிண்டே (1850-1910)
தாராபாய் ஷிண்டே ஆணாதிக்கம் மற்றும் சாதிய பாகுபாடுகளை எதிர்த்து போராடிய பெண்ணிய ஆர்வலர் ஆவார். அவர் இந்து வேதங்களில் காணப்படும் உள்ளார்ந்த ஆணாதிக்கத்தை மீறினார், மேலும் அவரது கருத்துக்கள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. மராத்தியில் வெளியிடப்பட்ட அவரது முதல் படைப்பான 'ஸ்த்ரி புருஷ் துலானா' (மொழிபெயர்ப்பு - பெண்கள் மற்றும் ஆண்களின் ஒப்பீடு), இதில் அவர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஆராய்கிறார், இது இந்தியாவின் முதல் நவீன பெண்ணிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அவர் தாராபாய் ஷிண்டே புலே தம்பதியினரின் கூட்டாளியாக இருந்தார், மேலும் பாலினம் மற்றும் சாதிய ஒடுக்குமுறை பற்றிய அவர்களது பகிரப்பட்ட கருத்துக்கள், இந்தியாவில் பெண்களின் உரிமைகளுக்காக அவர் போராடுவதற்குத் தேவையான தளத்தை அவருக்கு அளித்தது. இருப்பினும், தாராபாய் ஷிண்டே, இந்தியாவில் பெண்களுக்கு மட்டும் கவனம் செலுத்தவில்லை, ஆனால் உலகெங்கிலும் உள்ள பெண்கள் இதேபோல் ஒடுக்கப்படுகிறார்கள் என்று நம்பினார்.

ரமாபாய் ரானடே (1863-1924)
இந்தியாவின் முதல் பெண் உரிமை ஆர்வலர்களில் ஒருவரான ரமாபாய் ரானடே, மும்பை மற்றும் புனேவில் உள்ள சேவா சதன் நிறுவனராவார். இது ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பல்வேறு திறன்களில் பயிற்சி அளித்த நிறுவனமாகும். பெண்களை தன்னம்பிக்கை மற்றும் நிதிரீதியாக சுதந்திரமாக மாற்றுவதற்கு அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
அவரது குழந்தைப் பருவத்தில், ரமாபாய் ரானடே படிக்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் 11 வயதில் திருமணம் செய்து கொண்டார். அதிர்ஷ்டவசமாக, அவரது கணவர் அவரது கல்வியை முடிக்கவும், பரந்த உலகத்தைப் பற்றி அறியவும் ஊக்கப்படுத்தினார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெண்கள் நலனுக்காக உழைத்த பல சமூகங்களுக்கு பங்களித்தார்.

டாக்டர் வினா மஜும்தார் (1927-2013)
டாக்டர் வினா மஜும்தார் பெண்களின் ஆய்வுகள் மற்றும் பெண்களின் செயல்பாட்டின் ‘இரட்டை இயக்கங்களில்' ஈடுபட்ட முதல் பெண்களில் ஒருவர். இந்தியா முழுவதும் உள்ள ஆணாதிக்க அமைப்பில் பெண்களின் மாறுபட்ட அனுபவங்களைப் புரிந்து கொள்வதில் அவர் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். அவரது ஆராய்ச்சியின் மூலம், அவரும் அவரது சகாக்களும், தாழ்த்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி பரவலான அறிவு இல்லை என்பதை உணர்ந்தனர், இதனால் 1980 இல் பெண்கள் மேம்பாட்டு ஆய்வுகள் மையம் (CWDS) வருவதற்கு வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில், டாக்டர் வினா மஜும்தார் இந்திய மகளிர் ஆய்வு சங்கத்தின் (IAWS) நிறுவன உறுப்பினரானார், இது இன்றும் கூட பெண்களின் படிப்பை ஊக்குவிக்க தேசிய மாநாடுகளை நடத்துகிறது.

ஷர்மிளா ரெகே (1964-2013)
ஷர்மிளா ரெகே, சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே மகளிர் ஆய்வு மையத்தின் (KJSPWSC) இயக்குநராக இருந்தார். அவரது பணி சமூகவியல், பெண்கள் ஆய்வுகள் மற்றும் பெண்கள் இயக்கங்கள் ஆகிய மூன்று வகைகளில் அடங்கும். அவர் தலித் பெண்ணியம் என்ற நிலைப்பாட்டிற்காக மிகவும் பிரபலமானவர், அதில் அவர் தலித் தன்மையின் ஆண்மயமாக்கலையும், தலித் பெண்மையை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கும் பெண்ணின் சாவர்ணமயமாக்கலையும் விமர்சிக்கிறார்.
அவர் தனது வாழ்க்கை முழுவதும், ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களைச் சுற்றி பெண்ணிய இயக்கத்தை மையமாகக் கொண்ட அம்பேத்கரிய பெண்ணிய சித்தாந்தங்களை வலுவாக வலுப்படுத்தினார். அவர் 2006 இல் "எழுதும் சாதி/ எழுதும் பாலினம்: தலித் பெண்களின் சாட்சியங்களை விவரித்தல்" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். துரதிர்ஷ்டவசமாக, ஷர்மிளா ரெகே தனது 48 வயதில் புற்றுநோயால் இறந்தார்.



Click it and Unblock the Notifications











