Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க வீட்டுல பணப் பிரச்சனை குறையணுமா? அப்ப வாஸ்துப்படி 'இத' செய்யுங்க...
ஒருவரது வீட்டில் பணம் சேராமல், அதிகமாக செலவாகிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நம் வாழ்வில் பணம் ஒரு முக்கிய அங்கமாகும். நாம் அனைவருமே இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு தான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தால் தான் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தில் உருவாக்க முடியும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் ஒருவரது வீட்டில் சேராமல் இருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் இது அனைவருக்குமே மன வேதனையைத் தரும். ஒருவரது வீட்டில் பணம் சேராமல், அதிகமாக செலவாகிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தைக் குறிக்கும் 3 பகுதிகள் உள்ளன. அதில் ஒன்று குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு பகுதி. இரண்டாவது தென்கிழக்கு பகுதி. இது பணப்புழக்கத்தை நிர்வகிப்பதால் முக்கியமானது. மூன்றாவது வடகிழக்கு பகுதி. இது செழிப்பு, செல்வம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டு வரும் பகுதியாகும். இந்த மூன்று பகுதிகளைக் கொண்டு ஒருவரது வீட்டில் உள்ள பணப்பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது அது எப்படி என்பதைக் காண்போம்.

வடக்கு
வடக்கு பகுதியானது புதனால் ஆளப்படுகிறது. புதனின் நிறம் பச்சை. எனவே வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற பெயிண்ட், பச்சை நிற வால்பேப்பர் ஆகியவற்றை வைப்பதன் மூலம், வீட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம். வேண்டுமானால் இந்த பகுதியில் மணி பிளாண்ட் அல்லது நீரூற்று அமைக்கலாம். ஆனால் அந்த நீரூற்றானது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் மிகவும் பெரிய அளவில் இருக்கக்கூடாது. மேலும் வடக்கு பகுதியில் கண்ணாடியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஆற்றலை அதிகரித்து, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். வேண்டுமெனில் புதன் யந்திரத்தை வடக்கு பகுதியில் வைக்கலாம்.
இது தவிர வடக்கு பகுதியில், ஒரு கலசத்தில் நீரை நிரப்பி, அதில் 3 நாணயங்களைப் போட்டு மூடி வைக்க வேண்டும். பின் அந்த கலசத்தில் உள்ள நீரை 2-3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருங்கள்.

தென்கிழக்கு
தென்கிழக்கு பகுதியானது சுக்கிரனால் ஆளப்படுகிறது. வீட்டில் பணப் பிரச்சனை இருக்கும் போது, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் சுக்கிர யந்திரத்தை வைத்தால், அது அந்த வீட்டில் பணம், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும். இது தவிர இந்த திசையில் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால் சிவப்பு நிற பல்பை அந்த இடத்தில் வைக்கலாம். இது வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

வடகிழக்கு
வடகிழக்கு பகுதி குருவால் ஆளப்படுகிறது. எனவே வீட்டின் வடகிழக்கு பகுதியை எப்போதும் சுத்தமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திசையில் உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்களை வைக்காதீர்கள். மேலும் இந்த திசையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கண்ணாடியை வையுங்கள். குரு பகவான் ஆளும் திசை என்பதால் இந்த பகுதியில் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால் இந்த பகுதியில் குரு யந்திரத்தை வைக்கலாம்.



Click it and Unblock the Notifications











