Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உங்க வீட்டுல பணப் பிரச்சனை குறையணுமா? அப்ப வாஸ்துப்படி 'இத' செய்யுங்க...
ஒருவரது வீட்டில் பணம் சேராமல், அதிகமாக செலவாகிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நம் வாழ்வில் பணம் ஒரு முக்கிய அங்கமாகும். நாம் அனைவருமே இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு தான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தால் தான் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தில் உருவாக்க முடியும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் ஒருவரது வீட்டில் சேராமல் இருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் இது அனைவருக்குமே மன வேதனையைத் தரும். ஒருவரது வீட்டில் பணம் சேராமல், அதிகமாக செலவாகிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தைக் குறிக்கும் 3 பகுதிகள் உள்ளன. அதில் ஒன்று குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு பகுதி. இரண்டாவது தென்கிழக்கு பகுதி. இது பணப்புழக்கத்தை நிர்வகிப்பதால் முக்கியமானது. மூன்றாவது வடகிழக்கு பகுதி. இது செழிப்பு, செல்வம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டு வரும் பகுதியாகும். இந்த மூன்று பகுதிகளைக் கொண்டு ஒருவரது வீட்டில் உள்ள பணப்பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது அது எப்படி என்பதைக் காண்போம்.

வடக்கு
வடக்கு பகுதியானது புதனால் ஆளப்படுகிறது. புதனின் நிறம் பச்சை. எனவே வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற பெயிண்ட், பச்சை நிற வால்பேப்பர் ஆகியவற்றை வைப்பதன் மூலம், வீட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம். வேண்டுமானால் இந்த பகுதியில் மணி பிளாண்ட் அல்லது நீரூற்று அமைக்கலாம். ஆனால் அந்த நீரூற்றானது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் மிகவும் பெரிய அளவில் இருக்கக்கூடாது. மேலும் வடக்கு பகுதியில் கண்ணாடியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஆற்றலை அதிகரித்து, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். வேண்டுமெனில் புதன் யந்திரத்தை வடக்கு பகுதியில் வைக்கலாம்.
இது தவிர வடக்கு பகுதியில், ஒரு கலசத்தில் நீரை நிரப்பி, அதில் 3 நாணயங்களைப் போட்டு மூடி வைக்க வேண்டும். பின் அந்த கலசத்தில் உள்ள நீரை 2-3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருங்கள்.

தென்கிழக்கு
தென்கிழக்கு பகுதியானது சுக்கிரனால் ஆளப்படுகிறது. வீட்டில் பணப் பிரச்சனை இருக்கும் போது, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் சுக்கிர யந்திரத்தை வைத்தால், அது அந்த வீட்டில் பணம், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும். இது தவிர இந்த திசையில் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால் சிவப்பு நிற பல்பை அந்த இடத்தில் வைக்கலாம். இது வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

வடகிழக்கு
வடகிழக்கு பகுதி குருவால் ஆளப்படுகிறது. எனவே வீட்டின் வடகிழக்கு பகுதியை எப்போதும் சுத்தமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திசையில் உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்களை வைக்காதீர்கள். மேலும் இந்த திசையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கண்ணாடியை வையுங்கள். குரு பகவான் ஆளும் திசை என்பதால் இந்த பகுதியில் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. வேண்டுமானால் இந்த பகுதியில் குரு யந்திரத்தை வைக்கலாம்.



Click it and Unblock the Notifications