Just In
- 42 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
குரு பெயர்ச்சி 2019 - 20: ராஜாதி ராஜயோகம் பெறும் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
குரு பெயர்ச்சி இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் சில படிப்பினைகளை தருவார். இந்த குருப்பெயர்ச்சியினால் ராஜாத
Recommended Video
குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயரப்போகிறார். இந்த இடப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதி நிகழ்கிறது. குரு பகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு இருக்கும் இடம் பார்க்கும் இடத்தைப் பொறுத்து மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ராஜாதி ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
குருபகவான் கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் தனுசு ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக மிதுனம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மம் ராசியையும் பார்க்கிறார்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெறும் என்பதே உண்மை. அதே போல இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களும், கும்பம் ராசிக்காரர்களும் ராஜாதி ராஜ யோகம் பெறப்போகின்றனர்.
மேஷம்
எங்கும் எதிலும் சுபிட்சம்
மேஷம் ராசிக்காரர்களே... அஷ்டம குருவினால் படாத பாடு பட்ட நீங்கள் இந்த ஆண்டு கஷ்டங்களில் இருந்து விடுபடுகிறிர்கள். 9ஆம் இடம் மேஷம் பாக்ய ஸ்தானம். நிறைய நன்மை பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம். மிகப்பெரிய நல்ல யோகமான பலன்களை பெறப்போகிறது. நல்ல மாற்றம் அதிர்ஷ்டம் நிகழும். எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதால் வீட்டிற்கு வருவதால் அதிர்ஷ்டமான காலம். பாக்ய ஸ்தானத்திற்கு வருவதால் அந்த ராசியில் ஆட்சி நிலை பெறுவதால் சுபிட்சமான நிலை ஏற்படும்.
MOST
READ:
அட
நம்ம
ஜெனீலியாவா
இது?...
அந்த
அழகோட
ரகசியம்
இதுதானாமே!
திருச்செந்தூர் முருகன்
துவரம்பருப்பு தானம் கொடுங்க
ஒன்பதாம் வீடு அதி அற்புதமான மாற்றங்களை தரப்போகிறது. அற்புதமான பெயர்ச்சியாக அமையப்போகிறது. வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். பெற்ற அம்மா அப்பாவை வணங்குவதன் மூலம் குரு பகவான் மகிழ்ச்சியடைவார் நன்மைகள் அதிகம் நடைபெறும். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு பணம் கொடுத்து உதவுங்கள். மாதுளை செடி, செம்பருத்திப்பூ நட்டு வைத்து பராமரியுங்கள். துவரம்பருப்பு தானம் கொடுங்க.
மிதுனம்
காதல் திருமணம் கைகூடும்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடம் களத்திர ஸ்தானம் நன்மையை கொடுக்கும் ஸ்தானம். திருமண பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் தரும் நேரடி குரு பார்வை மிதுனத்திற்கு கிடைக்கிறது. திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருந்து நேரடி பார்வையால் இருப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீரும் ஒற்றுமை ஏற்படும். விவாகரத்திற்கு அப்ளை செய்தவர்கள் கூட ஒன்று சேர்வார்கள். காதல் வயப்பட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சங்கர நாராயணர்
துளசி செடி தானம்
குரு பகவான் எப்பவுமே பாசிட்டிவ்தான் செய்வார். நன்மைகளை செய்வார். பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கப் போகிறார். புதன் ராசி மிதுனம். சங்கரன் கோவில் சங்கரநாராயணரை வழிபட மேன்மைகள் நன்மைகள் நடைபெறும். திருநங்கைகளுக்கு உதவி செய்யலாம். வயதானவர்களுக்கு தேவையான பொருட்களை புதன்கிழமை உதவி செய்வது நன்மை. துளசி செடி வாங்கி பெருமாள் கோவிலுக்கு சென்று தானம் கொடுங்க. மிதுன ராசிக்காரர்கள் துளசி நந்தவனத்தை பராமரிக்கலாம். தினமும் காலையில் ஐந்து துளசி சாப்பிடுங்கள். பாதிப்புகள் எதுவும் வராது.
MOST
READ:
கணவன்
மனைவி
ஒற்றுமை
ஏற்பட...
செல்வம்
பெருக
இதை
முக்கியமா
செய்யுங்க
சிம்மம்
குழந்தை பாக்கியம்
சிம்மம் ராசிக்காரர்களே... இந்த ஆண்டு ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு குரு வருகிறார். காரிய சித்தியாகும். இந்த ஆண்டு குரு ரொம்ப நன்மையை செய்வார். பூர்வ புண்ணியத்தில் குரு அமரப்போகிறார். சிம்ம ராசிக்கு குருவின் அருள் பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை தரப்போகிறது. எடுத்த முயற்சிகள் வெற்றியில் முடியும். மனோ பலம், உடல் ஆரோக்கியம், பண பலத்தையும் தருவார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப விசயங்கள் நடைபெறும். நினைத்த காரியம் நடக்கும்.
பரிகாரம் என்ன
சூரிய நமஸ்காரம்
பதவியில் வெகுமானம் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் தருவார் குரு பகவான். அற்புதமான யோகத்தை தருவார். முறப்பநாடு கயிலாய நாதர் கோவிலுக்கு சென்று குருபகவானை வணங்கலாம். வீட்டில் தாத்தா பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்யலாம். குரு பெயர்ச்சியை முன்னிட்டு பவளமல்லி நட்டு வைத்து பராமறிக்கலாம். தானம் கொடுக்கலாம். தினமும் ஐந்து நிமிடங்கள் சூரியனை பார்ப்பது நன்மையை தரும். சூரிய பகவானை வணங்க கண் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். ஹோமம் நடைபெறும் இடங்களுக்கு சென்று பொருட்களை தானமாக தரலாம்.
விருச்சிகம்
குடும்ப குரு
விருச்சிகம் ராசிக்கு தனுசு இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம், ஜென்ம குரு ராமர் வனத்தில் என்பார்கள். அப்படி கஷ்டப்பட்டத்தில் இருந்தீர்கள். இனிமேல் நிகழ விருக்கும் குருப்பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார். தனுசு ராசியில் அமரப்போகும் குரு பகவான் கேது சனியோடு இணையப்போவதால் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும்.
பாதிப்புகள் நீங்கும்
பணவருமானம் ராஜயோகம்
உடல்நலக் கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மனநிலை உடல்நிலையில் நல்ல மாறுதால் ஏற்படும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். மனதில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ரிலீப் ஏற்படும். தன காரகன் தன ஸ்தானத்திற்கு வருவதால் பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குருவித்துறையில் உள்ள சித்திரரத வல்லப பெருமாளை வணங்கி விட்டு குருபகவானை வணங்கலாம்.
செவ்வாழை மரம் நட்டு வைக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் நல்லெண்ணெய் அதிகம் உபயோகியுங்கள்.
MOST
READ:
விநாயகர்
சதுர்த்திக்கு
7
வகை
கொழுக்கட்டை
சூப்பரா
சிம்பிளாக
செய்வது
எப்படி?
கும்பம்
லாப குரு
கும்பம் ராசிக்கு லாப ஸ்தான குரு வரப்போகிறார். 11வது வீடு சுப ஸ்தானம் ரொம்ப நன்மைகள் நடக்கும். கும்ப ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாற்றம் பெருகிறார். செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை நீங்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் குருப்பெயர்ச்சி. வியாபாரம் தொழிலில் நஷ்டப்பட்டவர்களுக்கு நன்மைகள் நடக்கும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சசினைகள் தீரும். குருபகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். கடந்த கால சிக்கல்கள் தீரப்போகிறது. மேலும் நன்மைகள் நடக்க சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்கலாம். அதே போல வியாழக்கிழமைகளில் அகத்தியரை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். வியாழக்கிழமைகளில் உளுந்த வடை செய்து ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்து அனைவருக்கும் தர நன்மைகள் கொடுக்கும்.