Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
நாக தோஷம், ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப கருட பஞ்சமி அன்று இத செய்யுங்க...
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த கருட பஞ்சமி நாளானது தோஷங்களை போக்கும் பரிகாரங்களை மேற்கொள்ள உகந்த நாள்.

புராணங்களின் படி, கருடன் ஒருவரை அனைத்து வகையான நாக தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் சக்தியைக் கொண்டவர். எனவே கருட பஞ்சமி அன்று கருடணை மகிழ்விக்க கருட காயத்ரி மந்திரம், கருட தண்டகம், கருட கவசம் போன்றவற்றை சொல்வது நல்லது. அதுவும் இந்த மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால், கருடனின் அருள் கிடைக்கும்.

கருட காயத்ரி மந்திரம்
கம்! கணபதயே! நமஹ!
ஓம்! ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!
ஓம்! நமோ! பகவதே! வாசுதேவாயா!
ஓம்! ஹாம்! ஹனுமதே! ஸ்ரீராம தூதாய நமஹ!
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட பிரச்சோதயாத்

கருட மந்திரம் சொல்வதால் பெறும் பலன்கள்
இந்த கருட மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாகும். இந்த கருட மந்திரத்தை ஒருவர் சுக்ல பக்ஷத்தின் வளர்பிறை பஞ்சமி திதி தொடங்கி, தினமும் 1008 முறை என 108 நாட்கள் சொல்லி வந்தால், அந்நபர் 12 தலைமுறைக்கான சித்தியைப் பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும் அனைத்து வகையான நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபட்டு, நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் ஆகியவற்றை பெறலாம்.

பிற நன்மைகள்
கருடனை வணங்குவதன் மூலம் பின்வரும் நன்மைகளும் கிடைக்கும். அவையாவன:
* பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துக்களின் பயம் நீங்கும்.
* கண் திருஷ்டி, சூனியம் மற்றும் பிற எதிர்மறை ஆற்றலை நீக்கும்.
* சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
* கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள்.
* புகழ், பெயர் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
* தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
* பாம்புகள் பற்றிய பயம் நீங்கும்.
* வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிப்பதற்கான திறன் கிடைக்கும்.

கருட பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது?
கருடனுக்கும் அவரது தாயாரான வினிதாவுக்கும் இடையே உள்ள முடிவில்லாத பிணைப்பைக் காட்ட கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. தாய் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆகவே இந்நாளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்க கருடனை வழிபடுவார்கள்.
சாஸ்திரங்களின் படி, கருடனின் அருளைப் பெற்றவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது உறுதி. மேலும் அவர் வல்லமையும், வலிமையும் உடையவர். அதோடு கருடன் விஷ்ணுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். விஷ்ணு பகவானின் பக்தர்கள் அனைவருமே கருடனை தவறாது வணங்குவார்கள். இத்தகைய கருடன் 8 விதமான சித்திகளை அருளக்கூடியவர். அதோடு இவர் விஷ்ணுவின் மங்களகரமான 6 குணங்களையும் கொண்டவர்.



Click it and Unblock the Notifications