Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
நாக தோஷம், ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப கருட பஞ்சமி அன்று இத செய்யுங்க...
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.
ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த கருட பஞ்சமி நாளானது தோஷங்களை போக்கும் பரிகாரங்களை மேற்கொள்ள உகந்த நாள்.

புராணங்களின் படி, கருடன் ஒருவரை அனைத்து வகையான நாக தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் சக்தியைக் கொண்டவர். எனவே கருட பஞ்சமி அன்று கருடணை மகிழ்விக்க கருட காயத்ரி மந்திரம், கருட தண்டகம், கருட கவசம் போன்றவற்றை சொல்வது நல்லது. அதுவும் இந்த மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால், கருடனின் அருள் கிடைக்கும்.

கருட காயத்ரி மந்திரம்
கம்! கணபதயே! நமஹ!
ஓம்! ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!
ஓம்! நமோ! பகவதே! வாசுதேவாயா!
ஓம்! ஹாம்! ஹனுமதே! ஸ்ரீராம தூதாய நமஹ!
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட பிரச்சோதயாத்

கருட மந்திரம் சொல்வதால் பெறும் பலன்கள்
இந்த கருட மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாகும். இந்த கருட மந்திரத்தை ஒருவர் சுக்ல பக்ஷத்தின் வளர்பிறை பஞ்சமி திதி தொடங்கி, தினமும் 1008 முறை என 108 நாட்கள் சொல்லி வந்தால், அந்நபர் 12 தலைமுறைக்கான சித்தியைப் பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும் அனைத்து வகையான நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபட்டு, நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் ஆகியவற்றை பெறலாம்.

பிற நன்மைகள்
கருடனை வணங்குவதன் மூலம் பின்வரும் நன்மைகளும் கிடைக்கும். அவையாவன:
* பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துக்களின் பயம் நீங்கும்.
* கண் திருஷ்டி, சூனியம் மற்றும் பிற எதிர்மறை ஆற்றலை நீக்கும்.
* சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
* கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள்.
* புகழ், பெயர் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
* தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
* பாம்புகள் பற்றிய பயம் நீங்கும்.
* வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிப்பதற்கான திறன் கிடைக்கும்.

கருட பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது?
கருடனுக்கும் அவரது தாயாரான வினிதாவுக்கும் இடையே உள்ள முடிவில்லாத பிணைப்பைக் காட்ட கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. தாய் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆகவே இந்நாளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்க கருடனை வழிபடுவார்கள்.
சாஸ்திரங்களின் படி, கருடனின் அருளைப் பெற்றவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது உறுதி. மேலும் அவர் வல்லமையும், வலிமையும் உடையவர். அதோடு கருடன் விஷ்ணுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். விஷ்ணு பகவானின் பக்தர்கள் அனைவருமே கருடனை தவறாது வணங்குவார்கள். இத்தகைய கருடன் 8 விதமான சித்திகளை அருளக்கூடியவர். அதோடு இவர் விஷ்ணுவின் மங்களகரமான 6 குணங்களையும் கொண்டவர்.



Click it and Unblock the Notifications