மீனத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் டிசம்பர் 31 முதல் இந்த 3 ராசிக்கு பெரிய லக் அடிக்கப்போகுது..

மீன ராசியில் டிசம்பர் 31 ஆம் தேதி குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். இப்படி உருவாகும் யோகத்தால் 12 ராசிக்காரர்களிலும் அதன் தாக்கம் இருக்கும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சில ராசிக்காரர்கள் கெடு பலன்களையும் பெறலாம். இப்போது 2022 ஆம் ஆண்டில் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த மாதத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி சந்திரன் மீன ராசியில் இருப்பார்.

Gajakesari Raj Yoga Will Be Formed In Pisces: These Zodiac Signs Will Be Lucky In Tamil

ஏற்கனவே மீன ராசியில் நவம்பர் 24 ஆம் தேதி முன் குரு வக்ர நிவர்த்தி அடைந்து பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் டிசம்பர் 31 ஆம் தேதி குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, வாழ்வில் பல நற்பலன்களையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜ யோகம் நற்பலனைத் தரும். ஏனெனில் இந்த யோகமானது 2 ஆவது வீட்டில் உருவாகிறது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு விரைவான நிதி ஆதாயம் கிடைக்கும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். இக்காலத்தில் சிக்கியிருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். மீடியா, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அசையா சொத்துக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுனம்

கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதியில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். ஏனெனில் இந்த யோகம் மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது வேலை இடத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். சில புதிய பொறுப்புக்களும் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சொத்து அல்லது வாகனம் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நற்பலனைத் தரும். ஏனென்றால் இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இக்காலத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் மொத்தமாக கைக்கு வரும். இக்காலம் நல்ல லாபகரமானதாக இருக்கும். ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், இந்த யோகத்தால் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

கஜகேசரி ராஜயோகம் எம்மாதிரியான பலன்களைத் தரும்?

கஜகேசரி ராஜயோகம் எம்மாதிரியான பலன்களைத் தரும்?

கஜ என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். வலிமைமிக்க இரண்டு விலங்குகளைக் கொண்டு உருவாகும் இந்த யோகமானது வலிமை, ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், அவர் வலிமையானவராக இருப்பார் மற்றும் எதிரிகளை வீழ்த்தும் திறன் கொண்டவராக இருப்பார். மேலும் இவர்கள் பணியிடத்தில் உயர் பதவியை வகிப்பார்கள். நல்ல நிதி நன்மைகளுடன் இருப்பார்கள். மொத்தத்தில் கஜகேசரி ராஜயோகம் உள்ளவர்கள் செல்வம், ஞானம், சக்தி, புகழ் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 10, 2022, 12:06 [IST]
Desktop Bottom Promotion