Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
700 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் 5 ராஜயோகங்கள் உருவாகின்றன. அவை கேதார், மாளவியா, சதுஷ்சக்ரா, மகாபாக்யா மற்றும் ஹன்ஸ் போன்றவை ஆகும்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் மங்களகரமான யோகம் ஒருவரது வாழ்வில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 700 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் 5 ராஜயோகங்கள் உருவாகின்றன. அவை கேதார், மாளவியா, சதுஷ்சக்ரா, மகாபாக்யா மற்றும் ஹன்ஸ் போன்றவை ஆகும்.

இந்த 5 சுப யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த மங்களகரமான சுப யோகங்களால் பணக்காரராகும் வாய்ப்பைப் பெறுவதோடு, அவர்களின் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கப் போகிறது. இப்போது 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 5 ராஜயோகங்களால் நற்பலனைப் பெறும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

5 ராஜயோகங்கள்
2023 மார்ச் மாத கிரக நிலைகளால், முதலாவதாக உருவான ராஜயோகம் தான் கேதார் ராஜயோகம். இந்த ராஜயோகமானது 7 நவகிரகங்கள், 4 ராசிகளில் இருக்கும் போது உருவாகும். அந்த வகையில், சூரியன், புதன், சனி, குரு, சுக்கிரன், ராகு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிகளில் இருப்பதால், கேதார் ராஜயோகம் உருவானது.
ஏற்கனவே குரு மீன ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவானது. அதன் பின் சுக்கிரன் குருவுடன் மீன ராசியில் இணையும் போது மாளவியா ராஜயோகம் உருவானது. இது தவிர சதுஷ்சக்ர ராஜயோகம் பொருந்தும். பின்பு சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாபாக்யா ராஜயோகம் உருவாகவுள்ளது.
இப்படி மார்ச் மாதத்தில் 5 ராஜயோகங்கள் உருவாவதால், 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்களைக் காண்போம்.

மிதுனம்
இந்த 5 ராஜயோகங்களின் உருவாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் கனவுகள் நனவாகும் வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். செய்யும் வேலைகளில் மிகப்பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் திடீர் பண வரவிற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வேலை இல்லாதவர்கள் அல்லது வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்கள், நல்ல வேலையைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் செயல்திறனால் நல்ல பாராட்டையும், பணியிடத்தில் முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

கடகம்
இந்த 5 ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக இக்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் எதிர்பாராத வகையில் பல நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானமும், முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள், தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்ன பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது மற்றும் அந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். முக்கியமாக மாணவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 5 ராஜயோகங்களின் உருவாக்கமானது நல்ல லாபத்தை அள்ளித் தரும். உங்களின் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையும் அவர்களின் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் தம்பதிகளுக்கு இடையேயான காதல் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கும் இந்த 5 ராஜயோகங்களின் உருவாக்கமானது நல்ல சாதகமான பலன்களைத் தரும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் தைரியமும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையால் பாராட்டைப் பெறுவார்கள் மற்றும் சரியான நேரத்தில் தங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவார்கள். வியாபாரம் செய்து கொண்டவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள் மற்றும் ஒரு பெரிய தொகையைப் பெறவும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். சுருக்கமாக கூற வேண்டுமானால், இந்த ராஜயோகங்கள் பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications