Just In
- 2 hrs ago
இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்... இந்த ராசிகளில் குறைவான மக்களே இருக்காங்களாம்... உங்க ராசி என்ன?
- 3 hrs ago
இந்த கோடையில் நீங்க உடற்பயிற்சி செய்யும்போது என்னென்ன செய்யணும் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?
- 4 hrs ago
மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?
- 5 hrs ago
உங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா? அப்ப 'இத' பண்ணுங்க...!
Don't Miss
- Sports
செம டென்சன்.. நொடிக்கு நொடி எகிறிய அழுத்தம்.. முக்கிய கட்டத்தில் அந்த தப்பை செய்த சாம்சன்.. பரபரப்பு
- News
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் - ஏப்.13ல் பதவியேற்பு
- Finance
லாக்டவுன் எதிரொலி: உஷாரான நிறுவனங்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு..!
- Movies
தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு
- Automobiles
50ஆண்டுகள் ஆகிடுச்சாம்! இந்தோனேசியர்களை மிரள வைக்க சிறப்பு பதிப்பு இன்னோவா! 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும்!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபாவளி அன்று நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மியின் சாபத்தை பெற்றுத்தருமாம் தெரியுமா
இந்தியாவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்பட்டு கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது தீபாவளிதான். தீபாவளி அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரக்கூடிய ஒன்றாகும். லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைக்கும் விழாவாக தீபாவளி இருக்கிறது. எனவே தீபாவளி அன்று நீங்கள் செய்யும் சரியான செயல்கள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.
தீபாவளி சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் போலவே செய்யக்கூடாத செயல்கள் என்று சில உள்ளது. இந்த செயல்கள் புனிதமற்ற செயல்களாக கருதப்படுகிறது. தீபாவளி நெருங்கிவிட்ட இந்த சமயத்தில் நீங்கள் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தாமதமாக எழக்கூடாது
நீங்கள் தினமும் காலையில் சீக்கிரம் எழ வேண்டியது நல்லது என்றாலும், தீபாவளி அன்று காலையில் சீக்கிரம் எழ வேண்டியது அவசியமாகும். சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து விடுவது நல்லது. தீபாவளி அன்று நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு லக்ஷ்மியின் அருள் கண்டிப்பாக கிடைக்காது.

பெரியவர்களை அவமதிக்கக் கூடாது
பொதுவாகவே பெரியவர்களை அவமதிப்பது தவறான செயலாகும். தீபாவளியன்று இதனை செய்வது அதனால் கிடைக்கும் மோசமான பலன்களை அதிகரிக்கும். எனவே உங்கள் குடும்பத்தாரிடமும், பெரியவர்களிடமும் தீபாவளி அன்று மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. அவர்களுக்காக ஏதாவது சிறப்பாக செய்ய முயற்சியுங்கள்.

வீட்டை அசுத்தமாக வைத்திருக்காதீர்கள்இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி சமயத்தில் உங்கள் இல்லத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். குறிப்பாக வீட்டில் குப்பைகள் இல்லாமல் நல்ல வாசனையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். MOST READ: இராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா? அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா? https://tamil.boldsky.com/insync/pulse/curses-from-ramayana-and-mahabharata-that-no-one-knows-about-026532.html
இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி சமயத்தில் உங்கள் இல்லத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். குறிப்பாக வீட்டில் குப்பைகள் இல்லாமல் நல்ல வாசனையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
MOST READ: இராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா? அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா?

கோபப்படக்கூடாது
தீபாவளி என்று கோபப்படுவது, கூச்சலிடுவது போன்றவை மிகவும் தவறான மற்றும் புனிதமற்ற செயலாகும். தீபாவளியன்று உங்கள் மனநிலையை நீங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்து, உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக பழகுவது நல்லது.

மாலையில் தூங்கக்கூடாது
நீங்கள் நோய்வாய்பட்டிருந்தாலோ அல்லது கர்ப்பிணியாகவோ இல்லாத பட்சத்தில் மாலையில் தூங்குவதைத் தவிர்க்கவும். மதிய நேரத்தில் தூங்குவது சரிதான் ஆனால் மாலை நேரத்தில் தூங்குவது வறுமை மற்றும் துயரத்திற்கு வழிவகுக்கும்.

சண்டைகளில் ஈடுபடக்கூடாது
தீபாவளி அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் சண்டையிட வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - நீங்கள் வீட்டில் ஒரு நேர்மறையான சூழ்நிலையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், எல்லோரும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதுதான் உங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி தேவியை அழைத்து வரும்.

போதை பொருட்கள்
தீபாவளி அன்று புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இது லக்ஷ்மி தேவியை மிகவும் கோபப்படுத்தும் செயலாகும். இது லக்ஷ்மி தேவியின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.