Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்க வாழ்க்கையில் பிரச்சனை அதிகம் இருக்கா? அப்ப செவ்வாய்கிழமை இத செய்யுங்க...
செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்துடன் நேரடி தொடர்புடையது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது.
சாஸ்திரங்களின் படி, செவ்வாய்க்கிழமை அனுமனுக்குரிய நாளாகம். இந்நாளில் அனுமனை வழிபட்டால், அவரின் ஆசியைப் பெறலாம். சனாதன தர்மத்தில், செவ்வாய் புனிதமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த செவ்வாய் கிழமைகளில் அனுமனை வழிபடுபவர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மேலும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்துடன் நேரடி தொடர்புடையது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது. இதனால் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். இப்போது செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட..
கடன் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று அனுமனுக்கு வெல்லம் அல்லது இனிப்புக்களை வாங்கி கொடுங்கள். இப்படி செய்வதனால் கடன் பிரச்சனை நீங்குவதோடு மட்டுமின்றி, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதோடு சொத்து தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்க...
செவ்வாய்கிழமைகளில் 4 பச்சை மிளகாய் மற்றும் ஒரு எலுமிச்சையை ஒரு நூலில் கோர்த்து, அதன் பின் 3 பச்சை மிளகாயை கோர்த்து, அதை வீட்டின் முன் அல்லது கடையின் முன் கட்டித் தொங்க விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அப்பகுதியைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும்.

விரும்பிய வேலை கிடைக்க..
நீங்கள் விரும்பும் வேலை கிடைப்பதில் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இன்டர்வியூ செல்லும் போது பசுவிற்கு வெல்லம் மற்றும் பிரட்டை கொடுங்கள். பசு அனைத்து தெய்வங்களுக்குமான உறைவிடமாக நம்பப்படுகிறது. எனவே பசுவிற்கு வெல்லத்தைக் கொடுப்பதனால் வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும்.

திருமண தடைகள் நீங்க...
உங்களின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதா? அப்படியானால் செவ்வாய்க்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் கொடுங்கள். இப்படி செய்வதனால் திருமணத்தில் வரும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பணப்பற்றாக்குறையை சமாளிக்க...
பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் சிறு வெல்லத் துண்டை எடுத்து, சிவப்பு துணியில் கட்டி, பின் அதை லட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். பின்பு அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணப்பற்றாக்குறை நீங்குவதாக நம்பப்படுகிறது.

குடும்ப பிரச்சனை நீங்க...
உங்கள் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் 1 1/2 கிலோ வெல்லத்தை வாங்கி, தரையில் புதையுங்கள். இப்படி செய்வதால், குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை அதிகம் அழுவதைத் தடுக்க...
உங்கள் வீட்டில் குழந்தை அதிகமாக அழுதால், செவ்வாய்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மயிலிறகை எடுத்து, குழந்தை தூங்கும் படுக்கையின் அடியில் வையுங்கள். இப்படி செய்வதனால் குழந்தையின் அழுகை சீக்கிரம் நின்றுவிடும்.



Click it and Unblock the Notifications