Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை செய்யுங்க...
நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாகும். அதில் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரிய நாளாகும். ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையில் இருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை பூஜித்து வணங்க வேண்டும். லட்சுமி தேவி செல்வத்திற்கு மட்டுமின்றி, மகிழ்ச்சியின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். ஒருவரின் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்தால், வீட்டில் செல்வம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இருக்காது மற்றும் வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். கீழே நிதி பிரச்சனைகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மண் விளக்கில் கற்பூரம்
யாரோ ஒருவரின் தீய பார்வை உங்கள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்து, அதனால் திருமண உறவு மோசமாக இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் 2 கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதை வீடு முழுவதும் சுற்றி காட்டுங்கள். இப்படி செய்வதால் திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும்.

108 முறை சுக்கிரனுக்குரிய மந்திரம்
ஒருவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் இனிமையை பேணுவதற்கு, சுக்கிர கிரகத்தை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுக்கிரனை வலிமையாக்க வெள்ளிக்கிழமையில் 'கிராம் க்ரேம் க்ரூம் ஸஹ சுக்ரே நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான உறவு வலுவடையும்.

இனிப்பு தானம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைத்திருக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வணங்குங்கள். அதுவும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று இனிப்புக்களை தானம் செய்யுங்கள். அதோடு சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற வளையல்கள், குங்குமம் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

சிவப்பு நிற அரிசி மூட்டை
பணப் பிரச்சனையை எதிர்கொள்கிறீர்களா? அப்படியானால் வெள்ளிக்கிழமையில் சிவப்பு நிற துணியை எடுத்து, அதில் 1 1/2 கிலோ அரிசியை வைக்க வேண்டும். முக்கியமாக இந்த அரிசியானது உடைக்கப்படாமல் இருக்க வேண்டும். பின் அதை மூட்டையாக கட்டி, கையில் எடுத்து, 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். அதன் பின்னர் அந்த அரிசி மூட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள். இப்படி செய்வதால் பண பிரச்சனை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications