Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை செய்யுங்க...
நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாகும். அதில் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரிய நாளாகும். ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையில் இருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை பூஜித்து வணங்க வேண்டும். லட்சுமி தேவி செல்வத்திற்கு மட்டுமின்றி, மகிழ்ச்சியின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். ஒருவரின் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்தால், வீட்டில் செல்வம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இருக்காது மற்றும் வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். கீழே நிதி பிரச்சனைகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மண் விளக்கில் கற்பூரம்
யாரோ ஒருவரின் தீய பார்வை உங்கள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்து, அதனால் திருமண உறவு மோசமாக இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் 2 கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதை வீடு முழுவதும் சுற்றி காட்டுங்கள். இப்படி செய்வதால் திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும்.

108 முறை சுக்கிரனுக்குரிய மந்திரம்
ஒருவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் இனிமையை பேணுவதற்கு, சுக்கிர கிரகத்தை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுக்கிரனை வலிமையாக்க வெள்ளிக்கிழமையில் 'கிராம் க்ரேம் க்ரூம் ஸஹ சுக்ரே நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான உறவு வலுவடையும்.

இனிப்பு தானம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைத்திருக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வணங்குங்கள். அதுவும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று இனிப்புக்களை தானம் செய்யுங்கள். அதோடு சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற வளையல்கள், குங்குமம் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

சிவப்பு நிற அரிசி மூட்டை
பணப் பிரச்சனையை எதிர்கொள்கிறீர்களா? அப்படியானால் வெள்ளிக்கிழமையில் சிவப்பு நிற துணியை எடுத்து, அதில் 1 1/2 கிலோ அரிசியை வைக்க வேண்டும். முக்கியமாக இந்த அரிசியானது உடைக்கப்படாமல் இருக்க வேண்டும். பின் அதை மூட்டையாக கட்டி, கையில் எடுத்து, 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். அதன் பின்னர் அந்த அரிசி மூட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள். இப்படி செய்வதால் பண பிரச்சனை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications