Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை செய்யுங்க...
நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாகும். அதில் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரிய நாளாகும். ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையில் இருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை பூஜித்து வணங்க வேண்டும். லட்சுமி தேவி செல்வத்திற்கு மட்டுமின்றி, மகிழ்ச்சியின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். ஒருவரின் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்தால், வீட்டில் செல்வம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இருக்காது மற்றும் வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். கீழே நிதி பிரச்சனைகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மண் விளக்கில் கற்பூரம்
யாரோ ஒருவரின் தீய பார்வை உங்கள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்து, அதனால் திருமண உறவு மோசமாக இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் 2 கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதை வீடு முழுவதும் சுற்றி காட்டுங்கள். இப்படி செய்வதால் திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும்.

108 முறை சுக்கிரனுக்குரிய மந்திரம்
ஒருவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் இனிமையை பேணுவதற்கு, சுக்கிர கிரகத்தை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுக்கிரனை வலிமையாக்க வெள்ளிக்கிழமையில் 'கிராம் க்ரேம் க்ரூம் ஸஹ சுக்ரே நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான உறவு வலுவடையும்.

இனிப்பு தானம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைத்திருக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வணங்குங்கள். அதுவும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று இனிப்புக்களை தானம் செய்யுங்கள். அதோடு சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற வளையல்கள், குங்குமம் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

சிவப்பு நிற அரிசி மூட்டை
பணப் பிரச்சனையை எதிர்கொள்கிறீர்களா? அப்படியானால் வெள்ளிக்கிழமையில் சிவப்பு நிற துணியை எடுத்து, அதில் 1 1/2 கிலோ அரிசியை வைக்க வேண்டும். முக்கியமாக இந்த அரிசியானது உடைக்கப்படாமல் இருக்க வேண்டும். பின் அதை மூட்டையாக கட்டி, கையில் எடுத்து, 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். அதன் பின்னர் அந்த அரிசி மூட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள். இப்படி செய்வதால் பண பிரச்சனை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











