Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை செய்யுங்க...
நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாகும். அதில் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரிய நாளாகும். ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையில் இருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை பூஜித்து வணங்க வேண்டும். லட்சுமி தேவி செல்வத்திற்கு மட்டுமின்றி, மகிழ்ச்சியின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். ஒருவரின் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்தால், வீட்டில் செல்வம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இருக்காது மற்றும் வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். கீழே நிதி பிரச்சனைகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மண் விளக்கில் கற்பூரம்
யாரோ ஒருவரின் தீய பார்வை உங்கள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்து, அதனால் திருமண உறவு மோசமாக இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் 2 கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதை வீடு முழுவதும் சுற்றி காட்டுங்கள். இப்படி செய்வதால் திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும்.

108 முறை சுக்கிரனுக்குரிய மந்திரம்
ஒருவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் இனிமையை பேணுவதற்கு, சுக்கிர கிரகத்தை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுக்கிரனை வலிமையாக்க வெள்ளிக்கிழமையில் 'கிராம் க்ரேம் க்ரூம் ஸஹ சுக்ரே நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான உறவு வலுவடையும்.

இனிப்பு தானம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைத்திருக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வணங்குங்கள். அதுவும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று இனிப்புக்களை தானம் செய்யுங்கள். அதோடு சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற வளையல்கள், குங்குமம் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

சிவப்பு நிற அரிசி மூட்டை
பணப் பிரச்சனையை எதிர்கொள்கிறீர்களா? அப்படியானால் வெள்ளிக்கிழமையில் சிவப்பு நிற துணியை எடுத்து, அதில் 1 1/2 கிலோ அரிசியை வைக்க வேண்டும். முக்கியமாக இந்த அரிசியானது உடைக்கப்படாமல் இருக்க வேண்டும். பின் அதை மூட்டையாக கட்டி, கையில் எடுத்து, 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். அதன் பின்னர் அந்த அரிசி மூட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள். இப்படி செய்வதால் பண பிரச்சனை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications