Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம் இருந்தால் என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா?
சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர் இராஜதந்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார்.
சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர் இராஜதந்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்க்கையில் பலர் வெற்றி பெற்றுள்ளனர். சாணக்கியரின் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி. வாழ்க்கை மற்றும் பிற விஷயங்களைப் பற்றி சாணக்கியர் என்ன சொல்கிறார். இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடையலாம் மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

சாணக்கியர் கணவன் மனைவி உறவில் பல முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அதில் ஒன்று கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம். கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் குறித்தும் சாணக்கிய நிதி வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். இதனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு மிக முக்கியமான விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணவன்-மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசத்திற்கு ஏற்ப திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மாறும் என்று கூறப்படுகிறது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கணவன்-மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் உங்கள் வாழ்க்கையில் பல வழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு கணவன் மனைவிக்கு இடையேயான வயது மிகவும் முக்கியமானது என்கிறார் சாணக்கியர். இருவருக்குள்ளும் அதிக வயது வித்தியாசம் காரணமாக, திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு முதியவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. அத்தகைய திருமணம் பொருந்தாது. இந்த உறவு எப்போதும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய திருமணங்கள் ஒருபோதும் வெற்றிகரமானதாக இருக்காது. அத்தகைய திருமணம் பிரிவதற்கு அதிக காலம் எடுக்காது. எனவே கணவன் மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகம் இருக்கக்கூடாது என்கிறார் சாணக்கியர்.

பார்வைகள் மாறுபடும்
கணவன்-மனைவி இடையேயான உறவில், இருவரும் ஒருவரையொருவர் எல்லா வகையிலும் திருப்திப்படுத்துவது அவசியம் என்று சாணக்யா கூறுகிறார். வயதில் பெரிய வித்தியாசம் இருந்தால், அவர்களின் கருத்துக்கள் சமமாக இருக்காது. அவர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்காமல் இருக்கலாம். வயது வித்தியாசம் அவர்களின் உடலையும் மனதையும் ஒருங்கிணைக்காது. ஒரு வயதான ஆண் ஒரு இளம் பெண்ணை மணந்தால், அத்தகைய திருமணத்தில் கருத்து வேறுபாடு அதிகமாக எழும்.

ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெற கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஏமாற்றக்கூடாது என்று சாணக்யாநிதி கூறுகிறார். கணவனும் மனைவியும் இந்த புனிதமான உறவின் கண்ணியத்தை நிலைநிறுத்தி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட குடும்பத்தின் தாம்பத்திய வாழ்க்கை முறியத் தொடங்குகிறது. அந்த உறவில் அசௌகரியம் இருக்கும் என்றும் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். அதிக வயது வித்தியாசமுள்ள திருமணத்தில் இந்த சிக்கல்கள் எழும் வாய்ப்புகள் அதிகம்.

துணையின் தேவைகளைப் புறக்கணிக்கப்படலாம்
கணவன்-மனைவி இடையேயான உறவு மிகவும் புனிதமானது என்றும், இந்த உறவைப் பேணுவதற்கு, கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சாணக்கியர் தனது சாணக்யாநிதியில் விவரிக்கிறார். கணவன்-மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் சாணக்யா கூறுகிறார். ஆனால் அதிக வயது வித்தியாச திருமணத்தில் ஒருவரின் தேவைகளை மற்றொருவர் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.

கருத்துக்கள் புறக்கணிக்கப்படலாம்
திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவது ஒருவரின் பொறுப்பு மட்டுமல்ல. இந்த உறவை வலுப்படுத்துவது கணவன்-மனைவியின் கூட்டுப் பொறுப்பு. முக்கியமான விஷயங்களில் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இருவருக்கும் உரிமை உண்டு. இல்லையெனில், உங்கள் உறவில் மோதல் மற்றும் பதற்றம் ஏற்படும். குடும்ப விஷயங்களில் துணை தனியாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. வயது முதிர்ந்தவர்கள் தங்கள் வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக எப்போதும் தங்களின் கருத்துக்களே மேலோங்கி இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.



Click it and Unblock the Notifications











