Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்கள் ஒருவருக்கு வாழும் போதே நரகத்தை கொடுப்பதுடன் வாழும் ஆசையையும் குறைக்குமாம்!
பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். இன்று அவர் சிறந்த வாழ்க்கை பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். இன்று அவர் சிறந்த வாழ்க்கை பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மதம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களிலும் சாணக்கியர் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். இன்றும் மக்கள் அவருடைய கருத்துக்கள் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிகரமானதாக உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியர் சொன்ன விஷயங்கள் இன்றைய காலத்திலும் உண்மை என்பதை நிரூபிக்கின்றன. ஆச்சாரியர் சாணக்கியரின் நீதி சாஸ்திரம் என்ற புத்தகம் மக்களிடையே மிகவும் விரும்பப்படுகிறது, இது சாணக்கிய நீதி என்றும் பலரால் அழைக்கப்படுகிறது. சாணக்கிய நீதியில் சாணக்கியர் ஒருவரை உள்ளிருந்து எரிக்கும் சில விஷயங்களை பற்றி கூறியுள்ளார். இந்த சூழ்நிலைகளுக்குப் பின், ஒரு நபரின் மன உறுதி உடைந்து, அவர் தன்னை பலவீனமாக நினைக்கத் தொடங்குகிறார். இந்த சூழ்நிலைகள் ஒருவருக்கு வாழும் ஆசையையே குறைக்கிறது.

மனைவி பிரிந்து செல்வது
கணவனும் மனைவியும் ஒரு தேரின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள், இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவனை விட்டு மனைவி அடிக்கடி பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. மனைவி விட்டு சென்ற கணவர் உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருப்பார். வாழ்க்கையைப் பற்றிய அவரது அணுகுமுறை முற்றிலும் அலட்சியமாகிறது.

குடும்பத்தினரால் அவமதிக்கப்படுவது
இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்தக்காரர்களால் திரும்பத் திரும்ப அவமானப்படுத்தப்படுவார்கள், திரும்பத் திரும்ப அவமானத்தை தாங்கிக் கொண்டு வாழ்வது மிகவும் கடினம். அத்தகைய நபர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வாழும் இந்த வாழ்க்கை ஒரு பாரமாகத் தெரிகிறது.

கடன்
ஒருவருக்கு கடன் எப்போதும் சுமக்கும் சுமையைப் போன்றது. இந்தச் சுமைக்குள் புதைந்திருப்பவர் சுதந்திரமாக சுவாசிக்கவோ, நிம்மதியாக வாழ்க்கையை வாழவோ முடியாது. வாழும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு வலி நிறைந்ததாக இருக்கும்.

மோசமான முதலாளிக்கு கீழ் வேலை செய்வது
வேலை செய்வது ஒரு நல்ல விஷயம், ஆனால் ஒரு நபர் ஒருவரின் அழுத்தத்தின் கீழ் ஒரு மோசமான முதலாளிக்கு கீழ் வேலை செய்ய வேண்டியிருந்தால், அந்த நபர் மிகவும் பாதிக்கப்படுகிறார். கோபத்தின் நெருப்பு அவர்களுக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும், இதனால் அவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கிறார்கள்.

வறுமை
சாணக்கியர் வறுமையை ஒரு சாபமாகக் கருதினார். வறுமை ஒரு மனிதனிடமிருந்து நிறைய விஷயங்களைப் பறிக்கிறது. இதன் காரணமாக ஒரு நபர் எல்லாவற்றையும் பெற போராட வேண்டியுள்ளது. ஏழையின் உணர்வுகளை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

பலவீனம்
பலவீனமானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அங்கு வீணாவது நேரம் மட்டும்தான், எதையும் சாதிக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் அனைவரும் தங்களை சிறந்தவர்கள் என்று நிரூபிக்க கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications