Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
இந்த ஒரு ரூபா பொருளை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களோட பல பிரச்சனைகள் நீங்கும் தெரியுமா?
கற்பூரம் ஜோதிட சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் வாழ்வில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகளைப் போக்க கற்பூரம் உதவுகிறது.
கற்பூரம் ஒரு நல்ல வாசனை நிறைந்த பொருள். இந்து மதத்தில் கற்பூரம் ஒரு புனிதமான பொருள். இது வழிபாடுகளின் போது ஆரத்தி காண்பிக்க பயன்படுத்தப்படுகிறது. கற்பூரமானது தீய சக்திகளை விரட்டுவதாக கூறப்படுகிறது. கற்பூரத்தை ஏற்றி கடவுளை வழிபடும் போது அவரது பிரச்சனைகள் கற்பூரம் கரைவது போன்று கரையும் என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட கற்பூரம் ஜோதிட சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் வாழ்வில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகளைப் போக்க கற்பூரம் உதவுகிறது. கீழே இந்த ஒரு ரூபாய் கற்பூரம் எந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து ஒருவரை விடுவிக்க உதவுகிறது என்பதைக் காண்போம்.

பணப்பிரச்சனை நீங்க...
உங்களுக்கு கால சர்ப்ப தோஷம் அல்லது ராகு-கேது தோஷம் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டையில் கற்பூரத்தை எப்போதும் வைத்து கட்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், தோஷங்கள் நீங்குவதோடு, பண பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கற்பூரம் மற்றும் நெய்
பித்ரு தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் போன்றவை நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தவறான நிலையால் ஏற்படுகிறது. இந்த தோஷங்களை சமாளிக்க கற்பூரம் மற்றும் நெய்யை ஒன்றாக சேர்த்து தினமும் எரிக்க வேண்டும்.

சரும பிரச்சனைகள் குறைய...
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அல்லது நீங்கள் சரும பிரச்சனைகளை அதிகம் சந்தித்தால், அதிலிருந்து கற்பூரம் விடுபட உதவும். அதற்கு கற்பூரத்தை வெள்ளைத் துணியில் வைத்து கட்டி, பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து பாருங்கள் ஒரு நல்ல பலனைப் பெறுவதை உணர்வீர்கள்.

எதிர்மறை ஆற்றல் நீங்க...
தினமும் வீட்டில் கற்பூரத்தை எரிப்பதனால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் உள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாஸ்து தோஷம் குறைய
உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதா? வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் பிரச்சனைகள், குறிப்பாக பணப்பிரச்சனைகள் அதிகம் இருக்கும். எனவே வாஸ்து தோஷத்தைக் குறைக்க வீட்டின் மூலைப் பகுதியில் கற்பூரத்தை வைத்து எரிக்க வேண்டும். இதனால் வீட்டின் வாஸ்து தோஷம் குறையும்.

கெட்ட கனவுகள்
இரவு தூங்கும் போது பயங்கரமான கனவுகள் வருகிறதா? அப்படியானால் இரவு படுக்கையறையில் ஒரு கற்பூரத்தை எரியுங்கள். இது அறையில் எதிர்மறை ஆற்றலை நீக்கும். மறுபுறம், கற்பூரத்தை ஒரு வெள்ளை துணியில் கட்டி பாக்கெட்டில் வைத்திருப்பது வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications