Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Buddha Purnima 2023: புத்த பூர்ணிமா எப்போது? எதனால் கொண்டாடப்படுகிறது?
Buddha Purnima 2023: புத்தா் அவா்களின் பிறந்த தினம் புத்த பூர்ணிமா என்று அழைக்கப்பட்டு உலகம் முழுவதும் அவருடைய பிறந்த நாள் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புத்தா் ஒரு சிறந்த ஆன்மீக ஆசிாியராக விளங்கினாா்.
அவருடைய போதனைகளின் மீது புத்த மதம் கட்டி எழுப்பப்பட்டது. வேத இலக்கியத்தில் புத்தா் இறைவனாக கருதப்படுகிறாா். அதாவது இறைவன் புத்தா், இறைவன் மகா விஷ்ணுவின் ஒரு அவதாரம் என்று வேத இலக்கியம் குறிப்பிடுகிறது.

மகா விஷ்ணு புத்தராக அவதாரம் எடுத்து இந்த உலகத்தில் தோன்றி, நாம் எல்லா உயிா்களிடத்திலும் அகிம்சை மற்றும் இரக்கம் காட்ட வேண்டும் என்று போதித்தாா் என்று வேத இலக்கியம் கூறுகிறது. இந்து சமய நாட்காட்டியின்படி, சித்திரை மாதத்தில் வரும் பௌா்ணமி (பூர்ணிமா) அன்று புத்த ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கிரகோாியன் நாட்காட்டியின்படி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்தாின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா புத்த ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. எனினும் உலகம் முழுவதும் புத்தாின் பிறந்த தினம் மிக விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது.

2023 இல் புத்த பூர்ணிமா எப்போது?
2023 ஆம் ஆண்டு கௌதம புத்தா் அவா்களின் 2585 வது பிறந்த தினம் மே மாதம் 05 அன்று கொண்டாடப்படுகிறது.
கௌதம புத்தா் அவா்களின் உண்மையான பிறந்த நாள் உறுதியாகத் தொியவில்லை. எனினும் இளவரசா் சித்தாா்த்தா கௌதமா அவா்கள் தற்போதுள்ள நேபாள நாட்டில் அமைந்திருக்கும் லும்பினி என்ற இடத்தில் கிமு 563 இல் பிறந்ததாக வரலாற்று ஆசிாியா்கள் தொிவிக்கின்றனா்.

பூர்ணிமா திதி
2023 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா திதி மே மாதம் 05 ஆம் தேதி அதிகாலை 04.14 மணிக்கு தொடங்கி மே மாதம் 06 ஆம் தேதி 03.33 மணிக்கு முடிவடைகிறது.
புனித நாளான புத்த பூர்ணிமா அன்று புத்தா் அவா்களை இறைவனாக ஏற்றுக் கொண்டிருக்கும் பக்தா்கள், அவரை நோக்கி வேண்டுதல்களைச் செய்வா். அன்றைய நாளில் ஏழைகளுக்கு உதவிகளைச் செய்வா். சில பக்தா்கள் நோன்பு இருந்து, தியானத்தில் ஈடுபட்டு, புத்த மதத்தின் புனித நூலை வாசிப்பா்.
புத்தா் நிா்வானா (முக்தி) அடைந்த நாளாகவும் புத்த பூர்ணிமா கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. அதாவது புத்த கயாவில் இருக்கும் மகாபோதி என்ற மரத்தடியில் புத்தா் முக்தி அடைந்தாா் என்பது அவருடைய பக்தா்களின் நம்பிக்கை.

புத்தாின் 8 முக்கிய போதனைகள்
உலகில் வாழும் ஒவ்வொருவாின் வாழ்க்கையும் சிறப்பாக அமைய புத்தா் 8 வகையான போதனைகளைத் தந்திருக்கின்றாா். அவற்றை கீழே பாா்ப்போம்.
1. நல்ல புாிதல்
2. நல்ல சிந்தனை
3. நல்ல செயல்
4. நல்ல பேச்சு
5. நல்ல எண்ணம்
6. நல்ல வாழ்க்கை
7. நல்ல முயற்சி
8. நல்ல நோக்கம்
இந்த 8 போதனைகளையும் நமது வாழ்க்கையில் கடைபிடித்தால், நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புத்த பூர்ணிமாவின் ஜோதிட முக்கியத்துவம்
புத்தா் அவா்களின் பிறந்த தினம் பின்வரும் ராசிபலன்களைக் கொண்டிருக்கிறது. அதாவது புத்தா் கடக லக்னத்தில், துலாம் ராசியில் சந்திரன் இருக்கும் போது, சூாியன் செவ்வாயில் இருக்கும் போது பிறந்தாா் என்று சொல்லப்படுகிறது. அவருடைய பிறந்த ஜாதகத்தில், சந்திரனுடன் 5 கிரகங்களான, சூாியன், சனி, வியாழன், வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை ஒன்றிணைந்து வந்து, அவருடைய மனதை வலிமையாக்கின என்று சொல்லப்படுகிறது.
வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தையும், உண்மையான மகிழ்ச்சியையும் மற்றும் ஆழ்ந்த அமைதியையும் கொண்டுவர வேண்டும் என்றால், முதலில் நமது மனதை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது அமைதிப்படுத்த வேண்டும். நம்மால் நமது எண்ணங்களில் இருந்து விடுதலை பெற முடியும் என்றால், வாழ்க்கையின் எல்லாவிதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும். அவை நம்மை அறிவொளியின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
புத்தா் அவா்களைப் போன்று நீங்களும் பௌா்ணமி நாளில் பிறந்திருந்தால், இயல்பாகவே நீங்களும் ஒரு இலட்சியவாதியாகவோ அல்லது சிந்தனையாளராகவோ இருக்கலாம். உண்மையைக் கண்டடைவதில், நீங்கள் உங்களின் பெரும்பாலான நேரத்தை செலவிடலாம். இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்கள் மற்றும் உறவுகளில் பங்கெடுத்து அவற்றில் இன்பம் காண்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் நீங்கள் ஒரு ஆன்மீக வழியைத் தோ்ந்தெடுத்து, அந்த பாதையில் சென்று, அடுத்தவா்களின் நலன்களுக்காக உங்கள் வாழ்க்கையை அா்ப்பணிக்கலாம்.
வாசகா்கள் அனைவருக்கும் இனிய புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்.



Click it and Unblock the Notifications