Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
மகள் போல் வேடமிட்டு ஜெயிலில் இருந்து தப்பிய திருட்டு கும்பல் தலைவர்... அப்புறம் என்ன நடந்தது?
பிரேசிலிய கும்பல் தலைவர் மாறுவேடமிட்டு தப்பிக்க முயன்ற போது கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, வாருங்கள் அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரியோ டி ஜெனிரோ என்ற சிறைச்சாலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய கொள்ளைக்கார கும்பல் தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதைச் சார்ந்த கிளாவினோ டா சில்வா என்ற இவர் ஜெயிலுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கலான சிறைச்சாலை
சிக்கலான சிறைச் சாலையில் இருந்து நமது ஹீரோக்கள் தப்பிக்கும் நிறைய திரைப்படங்களை நாம் பார்த்து உள்ளோம். அதே மாதிரி தான் தப்பிக்க முயன்றுள்ளார் கிளாவினோ டா சில்வா.

பெண் மாறுவேடம்
இந்த கொள்ளைக்கார கும்பல் தலைவர் தனது 19 வயது மகளைப் போல மாறுவேடம் போட்டு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் முகத்திற்கு போட்டிருந்த மாஸ்க் அவரை காட்டி கொடுத்து விட்டது.

தோல்வி
இப்படி அவர் தப்பிக்க முயற்சி செய்த இரண்டாவது முயற்சியும் தோல்வியை தழுவியது. அவர் பெண் மாதிரி மாற போட்டிருந்த சிலிக்கான் மாஸ்க், கண்ணாடி, விக், அவர் அணிந்திருந்த ஆடை எல்லாமே அவருக்கு என்னவோ கச்சிதமாக பொருந்தவில்லை. இதனால் அவரால் சிறையில் உள்ள காவலர்களை ஏமாற்ற முடியாமல் போனது.

பிடிபட்டார்
ஆனால் போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். தன்னை பார்க்க வரும் மகள் போல மாறுவேடம் அணிந்து தப்பித்து விடலாம் என்ற அவரது எண்ணம் சீர்குலைந்தது. அவரது மாறுவேடத்தை போலிஸார் களைத்து விட்டனர்.

கூடுதல் சிறை தண்டனை
அவரது மகள், அனா கேப்ரியல் லியாண்ட்ரோ டா சில்வா, அவரது தந்தைக்கு தப்பிக்க உதவியதால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.அதே மாதிரி 42 வயதான ஈதன் ஹன்ட் வன்னபே தனிச் சிறைக்கு மாற்றப்பட்டு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தண்டனையுடன் தப்பிக்க முயற்சி செய்ததற்காக 73 ஆண்டுகள் கூடுதல் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தியதற்காக இவர் இந்த தண்டனைகளை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











