Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
மகள் போல் வேடமிட்டு ஜெயிலில் இருந்து தப்பிய திருட்டு கும்பல் தலைவர்... அப்புறம் என்ன நடந்தது?
பிரேசிலிய கும்பல் தலைவர் மாறுவேடமிட்டு தப்பிக்க முயன்ற போது கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, வாருங்கள் அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரியோ டி ஜெனிரோ என்ற சிறைச்சாலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய கொள்ளைக்கார கும்பல் தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதைச் சார்ந்த கிளாவினோ டா சில்வா என்ற இவர் ஜெயிலுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கலான சிறைச்சாலை
சிக்கலான சிறைச் சாலையில் இருந்து நமது ஹீரோக்கள் தப்பிக்கும் நிறைய திரைப்படங்களை நாம் பார்த்து உள்ளோம். அதே மாதிரி தான் தப்பிக்க முயன்றுள்ளார் கிளாவினோ டா சில்வா.

பெண் மாறுவேடம்
இந்த கொள்ளைக்கார கும்பல் தலைவர் தனது 19 வயது மகளைப் போல மாறுவேடம் போட்டு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் முகத்திற்கு போட்டிருந்த மாஸ்க் அவரை காட்டி கொடுத்து விட்டது.

தோல்வி
இப்படி அவர் தப்பிக்க முயற்சி செய்த இரண்டாவது முயற்சியும் தோல்வியை தழுவியது. அவர் பெண் மாதிரி மாற போட்டிருந்த சிலிக்கான் மாஸ்க், கண்ணாடி, விக், அவர் அணிந்திருந்த ஆடை எல்லாமே அவருக்கு என்னவோ கச்சிதமாக பொருந்தவில்லை. இதனால் அவரால் சிறையில் உள்ள காவலர்களை ஏமாற்ற முடியாமல் போனது.

பிடிபட்டார்
ஆனால் போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். தன்னை பார்க்க வரும் மகள் போல மாறுவேடம் அணிந்து தப்பித்து விடலாம் என்ற அவரது எண்ணம் சீர்குலைந்தது. அவரது மாறுவேடத்தை போலிஸார் களைத்து விட்டனர்.

கூடுதல் சிறை தண்டனை
அவரது மகள், அனா கேப்ரியல் லியாண்ட்ரோ டா சில்வா, அவரது தந்தைக்கு தப்பிக்க உதவியதால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.அதே மாதிரி 42 வயதான ஈதன் ஹன்ட் வன்னபே தனிச் சிறைக்கு மாற்றப்பட்டு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தண்டனையுடன் தப்பிக்க முயற்சி செய்ததற்காக 73 ஆண்டுகள் கூடுதல் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தியதற்காக இவர் இந்த தண்டனைகளை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications