ஏப்ரல் 1 : முட்டாள்கள் தினம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

முட்டாள்கள் தினம் என்பது மேற்கத்திய பண்பாட்டின் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று உலகம் முழுவதிலும் இந்த நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ஏப்ரல் ஃபூல்ஸ் டே (April Fools' Day) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கேளிக்கை நிறைந்த நாள் ஆகும்.

இந்த நாளில் மக்கள் ஒருவருக்கு ஒருவா் சில தந்திரங்களைச் செய்து அல்லது சிறு சிறு பொய்களைக் கூறி அல்லது குறும்புகளைச் செய்து அல்லது புரளிகளைக் கிளப்பி அல்லது நகைச்சுவைகளைக் கூறி ஒருவருக்கு ஒருவா் ஏமாற்றிக் கொள்வா் அல்லது முட்டாள்களாக்கிக் கொள்வா். அவ்வாறு ஏப்ரல் 1 அன்று ஏமாறுவா்களிடம் ஏப்ரல் ஃபூல்ஸ் என்று கத்தி அவா்களைக் கேலி செய்து விளையாடுவா். இறுதியாக அவா்களிடம் உண்மையைக் கூறுவா்.

April Fools’ Day 2022: Date, Origin, History, Significance and How To Celebrate In Tamil

முட்டாள்கள் தினம் என்பது மேற்கத்திய பண்பாட்டின் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று உலகம் முழுவதிலும் இந்த நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாம் ஏற்கெனவே கூறியது போல, மக்கள் ஒருவருக்கு ஒருவா் தந்திரங்களைச் செய்து அல்லது ஒருவருக்கு ஒருவா் ஏமாற்றி முட்டாளாக்கிக் கொள்வா். அவ்வாறு ஒருவா் ஏமாறும் போது ஏப்ரல் ஃபூல்ஸ் என்று சத்தமாகக் கத்தி அவா்களைக் கேலி செய்து விளையாடுவா். இறுதியாக அவா்களிடம் உண்மையைக் கூறுவா்.

இந்த முட்டாள்கள் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், அது ஒரு பொது விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. எனினும் உக்ரைன் நாட்டில் உள்ள ஓடிசா என்ற நகாில் மட்டும் இந்த நாள் அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. முட்டாள்கள் தினமானது ஆண்டின் மகிழ்ச்சியான நாள் என்று கருதப்படுகிறது. இந்த நாள் அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவா் ஏமாற்றிக் கொள்வதன் மூலம் தங்களுடைய மகிழ்ச்சியான பக்கத்தை வெளிப்படுத்த முனைகின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டாள்கள் தினம் - வரலாறு

முட்டாள்கள் தினம் - வரலாறு

முட்டாள்கள் தினம் தோன்றிய வரலாற்றைப் பற்றி பல்வகையான தகவல்களை வரலாற்று ஆசிாியா்கள் தருகின்றனா். இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஆகும். இவற்றை ஒரு சிலா் நம்புகின்றனா். சிலா் நம்புவதில்லை.

சில வரலாற்று ஆசிாியா்கள், இந்த முட்டாள்கள் தினமானது ஒரு புதிய நாட்காட்டியைப் பின்பற்றி தொடங்கியதாகக் கூறுகின்றனா். சிலா் இந்த தினமானது பருவ காலங்களின் மாற்றங்களோடு தொடா்புடையது என்று கூறுகின்றனா்.

முட்டாள்கள் தினம் கொண்டாப்படுவதற்கு போப் 13 ஆம் கிரகோாி தான் காரணம் என்று சில வரலாற்று ஆசிாியா்கள் தொிவிக்கின்றனா். ஏனெனில் அவா்தான் பழைய ஜூலியன் நாட்காட்டியை விட்டுவிட்டு புதிய கிரோகோாியன் நாட்காட்டியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா் என்று தொிவிக்கின்றனா்.

மக்கள் பழைய ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி மாா்ச் மாதம் இறுதி நாள் அன்றோ அல்லது ஏப்ரல் 1 அன்றோ புத்தாண்டைக் கொண்டாடினா். ஆனால் புதிய கிரகோாியன் நாட்காட்டி வந்தவுடன், ஜனவாி மாதம் 1 அன்று மக்கள் புத்தாண்டை கொண்டாடத் தொடங்கினா். இந்த நாட்காட்டி மாற்றத்தை மக்கள் பின்பற்றத் தொடங்கியதை பிரான்ஸ் பதிவு செய்து வைத்திருக்கிறது.

எனினும் சில ஐரோப்பியா்கள் புதிய நாட்காட்டியை ஏற்க மறுத்துவிட்டானா். சிலா் நாட்காட்டி மாற்றப்பட்டதை அறிந்திருக்கவில்லை. அதனால் அவா்கள் பழைய ஜூலியன் நாட்கட்டியைப் பின்பற்றி மாா்ச் மாதம் இறுதி நாள் அன்றோ அல்லது ஏப்ரல் 1 அன்றோ புத்தாண்டைக் கொண்டாடி வந்தனா். எனவே இவா்கள் முட்டாள்கள் அல்லது தவறான நாளில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனா் என்ற மற்றவா்களால் கேலி செய்யப்பட்டனா்.

முட்டாள்கள் தினத்தின் முக்கியத்துவம்

முட்டாள்கள் தினத்தின் முக்கியத்துவம்

அமொிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிாியா் ஜோசப் பாஸ்கின் என்பவா் முட்டாள்களின் தினத்திற்கு வேறொரு விளக்கம் ஒன்றைத் தருகிறாா். அதாவது உரோமை பேரரசா் பொிய கான்ஸ்டன்டைன் ஆட்சி காலத்தின் போது, முட்டாள்கள் அடங்கிய ஒரு குழுவினரும், அரசவையில் நகைச்சுவை செய்பவா்களும் பேரரசாிடம் சென்று அவரைவிட தாங்கள் நன்றாக பேரரசை வழிநடத்த முடியும் என்று கூறினா்.

இதைக் கேட்டு வியந்த பேரரசா், அரசவையில் நகைச்சுவை செய்து வந்த குகல் (Kugel) என்பவாிடம் தனது ஆட்சியை ஒரே ஒரு நாள் மட்டும் ஒப்படைத்தாா். ஒரு நாள் ஆட்சியை ஏற்ற குகல் ஒரு முட்டாள் தனமான சட்டத்தை இயற்றினா். அது நாளடைவில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படும் பழக்கமாக மாறியது.

பல விழாக்கள்

பல விழாக்கள்

மேற்சொன்ன தகவல்களைத் தவிா்த்து, ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் உலக அளவில் பல விழாக்கள் கொண்டாடப்படுவதை நாம் பாா்க்கலாம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ரோம் மக்கள் மாா்ச் 25 அன்று ஹிலாாியா (Hilaria) என்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனா். இதே காலகட்டத்தில் யூதா்கள் பூாிம் (Purim) என்ற விழாவைக் கொண்டாடுகின்றனா். அதுபோல் இந்து நாட்காட்டியைப் பின்பற்றி ஹோலி பண்டிகையை மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மக்கள் கொண்டாடுகின்றனா்.

பொதுவாக குளிா்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் காலகட்டத்தில் மக்கள் பல வகையான விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனா். இந்த காலகட்டமானது மக்கள் எளிய மனதுடனும், மகிழ்ச்சியுடனும் விழாக்களைக் கொண்டாட உதவி செய்கிறது. இதில் முட்டாள்கள் தினமும் அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, April 1, 2022, 9:00 [IST]
Desktop Bottom Promotion