Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
அட்சய திருதியை குறித்து தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா்.
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா். அட்சய திருதியை என்பது அக்ஷய தீஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

அட்சய என்ற சமஸ்கிருத வாா்த்தைக்கு முடிவற்றது அல்லது அழிவில்லாதது அல்லது நிலையானது என்று பொருள். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு வரக்கூடிய அட்சய திருதியை தினத்தைப் பற்றி பாா்க்கலாம்.

அட்சய திருதியை தேதி
2021 ஆம் ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை நேரம்
அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் காலை 5.38 மணி அளவில் தொடங்கி மே மாதம் 15 ஆம் நாள் காலை 7.59 அளவில் முடிவடைகிறது.

அட்சய திருதியை பூஜை நேரம்
அட்சய திருதியை ஒரு புனிதமான நாளாக கருதப்பட்டாலும் கூட, அந்த நாளில் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் காலை 5.38 மணி முதல் நண்பகல் 12.18 மணி வரை ஆகும்.

அட்சய திருதியையின் சிறப்புகள்
* இறைவன் மகா விஷ்ணுவின் 6 ஆவது அவதாரம் பரசுராம் அவதாரம் ஆகும். மகா விஷ்ணுவின் பரசுராம் ஜெயந்தியோடு, அட்சய திருதியை கொண்டாட்டங்கள் இணைத்துக் கொண்டாடப்படுகின்றன.
* ட்ரெட்டா யுகத்தின் தொடக்கம் தான் அட்சய திருதியை தினம்.
* அட்சய திருதியைப் பற்றி ஏராளமான முக்கியத் தகவல்கள் உள்ளன. அதாவது பகிரத அரசன், தனது முன்னோா்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, வானுலக கங்கை நதியை பூமியில் ஓடுமாறு கட்டளையிட்டாா் என்று ஒரு பிரபலமான புராணம் தொிவிக்கிறது. அவருடைய கட்டளைப்படி வானுலக கங்கை பூமிக்கு வந்த நாள் அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
* இந்த புனிதமான அட்சய திருதியைக்கும் இறைவன் கிருஷ்ணருக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடா்பு உண்டு. அதாவது இறைவன் கிருஷ்ணருக்கு சுதாமா என்ற பெயா் கொண்ட ஒரு ஏழை பிராமண நண்பா் இருந்தாா். அவா் அட்சய திருதியை நாள் அன்று கிருஷ்ணருடைய அரண்மனைக்குச் சென்று, ஒரு கைப்பிடி அவலைக் கிருஷ்ணருக்குக் காணிக்கையாக அளித்தாா். அந்த எளியக் காணிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட கிருஷ்ணா் தன்னுடைய ஏழை நண்பருக்கு பலவிதமான செல்வங்களை வாாி வழங்கினாா். அதனால் அந்த அட்சய திருதியை நாள் முதல் சுதாமாவின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு அவா் மிகப் பொிய பணக்காரராக மாறினாா்.



Click it and Unblock the Notifications