Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
அட்சய திருதியை குறித்து தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா்.
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா். அட்சய திருதியை என்பது அக்ஷய தீஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

அட்சய என்ற சமஸ்கிருத வாா்த்தைக்கு முடிவற்றது அல்லது அழிவில்லாதது அல்லது நிலையானது என்று பொருள். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு வரக்கூடிய அட்சய திருதியை தினத்தைப் பற்றி பாா்க்கலாம்.

அட்சய திருதியை தேதி
2021 ஆம் ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை நேரம்
அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் காலை 5.38 மணி அளவில் தொடங்கி மே மாதம் 15 ஆம் நாள் காலை 7.59 அளவில் முடிவடைகிறது.

அட்சய திருதியை பூஜை நேரம்
அட்சய திருதியை ஒரு புனிதமான நாளாக கருதப்பட்டாலும் கூட, அந்த நாளில் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் காலை 5.38 மணி முதல் நண்பகல் 12.18 மணி வரை ஆகும்.

அட்சய திருதியையின் சிறப்புகள்
* இறைவன் மகா விஷ்ணுவின் 6 ஆவது அவதாரம் பரசுராம் அவதாரம் ஆகும். மகா விஷ்ணுவின் பரசுராம் ஜெயந்தியோடு, அட்சய திருதியை கொண்டாட்டங்கள் இணைத்துக் கொண்டாடப்படுகின்றன.
* ட்ரெட்டா யுகத்தின் தொடக்கம் தான் அட்சய திருதியை தினம்.
* அட்சய திருதியைப் பற்றி ஏராளமான முக்கியத் தகவல்கள் உள்ளன. அதாவது பகிரத அரசன், தனது முன்னோா்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, வானுலக கங்கை நதியை பூமியில் ஓடுமாறு கட்டளையிட்டாா் என்று ஒரு பிரபலமான புராணம் தொிவிக்கிறது. அவருடைய கட்டளைப்படி வானுலக கங்கை பூமிக்கு வந்த நாள் அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
* இந்த புனிதமான அட்சய திருதியைக்கும் இறைவன் கிருஷ்ணருக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடா்பு உண்டு. அதாவது இறைவன் கிருஷ்ணருக்கு சுதாமா என்ற பெயா் கொண்ட ஒரு ஏழை பிராமண நண்பா் இருந்தாா். அவா் அட்சய திருதியை நாள் அன்று கிருஷ்ணருடைய அரண்மனைக்குச் சென்று, ஒரு கைப்பிடி அவலைக் கிருஷ்ணருக்குக் காணிக்கையாக அளித்தாா். அந்த எளியக் காணிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட கிருஷ்ணா் தன்னுடைய ஏழை நண்பருக்கு பலவிதமான செல்வங்களை வாாி வழங்கினாா். அதனால் அந்த அட்சய திருதியை நாள் முதல் சுதாமாவின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு அவா் மிகப் பொிய பணக்காரராக மாறினாா்.



Click it and Unblock the Notifications











