Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
பண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்க முடியாது...
தவறு செய்வது எப்படி மனித இயல்போ அதேபோல தவறை ஒப்புக்கொள்வது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகமாகும்.
மனிதர்கள் எப்பொழுதுமே கூட்டமாக இருக்க பழகியவர்கள். உலகம் தோன்றிய காலம் முதலே மனிதர்கள் குழுவாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். குழுவாக வாழும்போது அதில் அனைவரும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனிதர்களின் இயல்பே தவறு செய்வதுதான். தவறு செய்யாத மனிதனும் இல்லை, தவறு செய்யாதவன் மனிதனே இல்லை.

தவறு செய்வது எப்படி மனித இயல்போ அதேபோல தவறை ஒப்புக்கொள்வது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகமாகும். ஆனால் இந்த நாகரிகம் அனைவருக்கும் இருந்து விடுவதில்லை. நம்மில் பெரும்பாலானோர் தப்பு செய்தாலோ அல்லது ஏதாவது சொதப்பினாலோ அதனை அடுத்தவர்கள் மீது போடும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் சிலர் எப்போதும் இதையே வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். இதற்கு அவர்கள் பிறந்த ராசிகூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம்.

கும்பம்
உங்களின் சில செயல்கள் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதுமே இருக்காது. எனவே உங்கள் மீது மற்றவர்கள் மீது கோபப்படும்போது அது முழுக்க முழுக்க மற்றவர்களின் தவறுதான் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். அனைவரின் மீதும் நீங்கள் குற்றம் கண்டுபிடிப்பீர்கள், ஆனால் மற்றவர்கள் உங்கள் மீது குற்றம் கூறும்போது அதனை கருத்தில் கூட கொள்ளமாட்டிர்கள். உங்கள் வாழ்க்கையில்ஏற்படும் துன்பங்கள் அனைத்திற்கும் எப்பொழுதும் மற்றவர்கள் மீதே பழிபோடுவீர்கள். அதற்கு காரணம் நீங்கள்தான் என்பதை உணரவும் மாட்டிர்கள், ஒப்புக்கொள்ளவும் மாட்டிர்கள்.

மிதுனம்
இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்னால்தான் வந்தது என்றும் தோல்விகள் வரும்போது அது மற்றவர்களால் தான் வந்தது என்றும் கூறிக்கொள்வார்கள். இவர்கள் தங்களின் செயல்களுக்கு ஒருபோதும் பொறுப்பேற்று கொள்ள மாட்டார்கள், ஆனால் மற்றவர்கள் மீது பழிசுமத்த இவர்கள் எப்போதும் தயாராய் இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு பிரச்சினைகள் மட்டுமே வந்துசேரும்.

கன்னி
உங்களை பொறுத்தவரை நீங்கள் நீங்கள் அனைத்திலும் சரியானவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும். எனவே நீங்கள் திட்டமிட்டபடி எதுவும் உங்கள் வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் மற்றவர்களின் தவறுதான் என்று நினைப்பீர்கள். உங்களுக்கு நீங்கள் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள்தான் அதனால உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்கு நீங்கள் ஒருபோதும் பொறுப்பேற்று கொள்ளமாட்டிர்கள். மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதிலேதான் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும்.

மகரம்
நீங்கள் மற்றவர்களை புண்படுத்திவிட்டிர்கள் என்பதை கேட்க உங்களுக்கு விருப்பம் இருக்காது. ஆனால் நீங்கள் ஒருவேளை அப்படி செய்துவிட்டால் உடனடியாக அது உங்கள் தவறில்லை என்றார் வாதிடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பீர்கள், அதுதான் உங்களை அடுத்தவர் மீது பழிசுமத்த உதவியாக இருக்கும். நீங்கள் விளைவுகளை பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டிர்கள். உங்களின் நோக்கம் எல்லாம் மற்றவர்களின் மீது பழியை சுமத்தி விட்டு நீங்கள் பிரச்சினைக்ளைல் இருந்து ஒதுங்கி கொள்வதுதான்.

கடகம்
மற்றவர்கள் மீது பழிசுமத்துதல் என்று வரும்போது நீங்கள் நிச்சயம் உங்களுடைய தவறை ஒப்புக்கொள்ள மாட்டிர்கள். உங்களை நிரூபிக்க ஒன்று கிடைத்து விட்டால் நீங்கள் அதனை வைத்தே உங்கள் மீது எந்த தப்பும் இல்லை என்று பேசியே சாதித்து விடுவீர்கள். இது உங்களை சிறந்தவர்களாக காட்டலாம் ஆனால் உண்மையில் நீங்கள் விளைவுகளை எதிர்கொள்ள அஞ்சும் ஒரு கோழையாவீர்கள். உங்களுக்கு தவறானசெயல்கள் பிடிக்காது, ஒருவேளை உங்களால் ஏதாவது தவறு நேர்ந்தால் நீங்கள் மற்றவர்கள் மீது பழிசுமத்திவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிடுவீர்கள்.

துலாம்
தான் அனைத்து தருணங்களிலும் சரியானவராகவே இருக்கிறேன் என்று நினைக்கும் ராசிகளில் நீங்களும் ஒருவர். மற்றவர்களுடன் ஒன்றாக சேர்ந்து சிரித்தாலும் நீங்கள் பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பீர்கள். சகமனிதர்கள் மீதான உங்களின் வெறுப்பு வலுவாக இருக்கும், இதனால் மற்றவர்கள் மீது பழிபோடுவது என்பது உங்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் மற்றவைகளை விட உங்களை எப்போதும் நல்லவராக நினைப்பீர்கள் அதனால் உங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்று கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க மாட்டிர்கள். உங்களை நினைத்து நீங்கள் எப்போதும் குற்றவுணர்வு கொள்ளவே மாட்டிர்கள்.



Click it and Unblock the Notifications