Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்த ராசில பிறந்தவங்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்காம்...உங்க ராசியும் இதுல இருக்கா?
கிரக நிலைகளை பொறுத்து அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமது ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் கணித்து விடலாம்.
பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தில் ஜோதிட சாஸ்திரம் திருமணத்தை நிச்சயிக்கும் அடிப்படை ஒன்றாக இருக்கிறது. திருமண பேச்சை எடுத்தாலே அதில் முதலாவதாக பார்க்கப்படும் ஒன்றாக இருப்பது ஆண், பெண் இருவரின் ஜாதகமும்தான். ஏனெனில் அவர்களின் கிரக நிலைகளை பொறுத்து அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமது ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் கணித்து விடலாம்.

இந்த சூழ்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் திருமண முறிவு என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. மறுமணம் செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. துணை இறந்ததால் மறுமணம் செய்பவர்களும் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் தவறும் இல்லைதான். இப்படி அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அவர்களின் பிறந்த ராசி கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

மீனம்
மீனை சின்னமாக கொண்ட இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக உணச்சிவசப்பட கூடியவர்களாக ஜோதிட சாஸ்திரித்தின் படி கருதப்படுகிறார்கள். இது நல்ல செய்தியா அல்லது கெட்ட செய்தியா என்று தெரியவில்லை ஏனெனில் மீன ராசிக்காரர்களுக்கு விவாகரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இவர்களின் காதல் குணத்தாலும், அன்பான பழகும் முறையாலும் இவர்கள் மற்றொரு திருமணத்திற்கு தாராளமாக முயற்சிக்காலம்.

கும்பம்
அனைத்து ராசியினரும் இரண்டாவது திருமணத்திற்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. கும்ப ராசிக்காரர்களுக்கு பொதுவாக திருமணம் செய்வதில் ஆர்வம் இருக்காது, அப்படி அவர்கள் ஒப்புக்கொண்டால் அதற்கு பின்னால் வலிமையான காரணம் இருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் நீண்ட கால எடுத்து கொள்வார்கள். தங்கள் துணை மீதான பிணைப்பு அதிகமாகும் போது மட்டுமே இவர்கள் திருமணத்திற்கு தயாராவார்கள்.

மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி நெருப்பின் அடையாளமான மேஷ ராசி காதல் விஷயங்களில் மிகவும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இவர்களின் முதல் திருமணம் ஏதாவது காரணங்களுக்காக தோல்வியில் முடிந்தால் இவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய ஒருபோதும் தயங்க மாட்டார்கள். வாழ்கையிலும் காதலிலும் தனக்கு என்ன வேண்டுமோ அதனை பெறுவதில் இவர்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

ரிஷபம்
இவர்கள் காதலில் மிகவும் வலிமையானவர்கள். பிடிவாதமும், நேர்மையும் இவர்களின் அடிப்படை குணங்களாகும். இவர்கள் பொதுவாகவே வீடு, குடும்பம், திருமணம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் இரண்டாவது திருமண முயற்சிக்கு ஒருபோதும் தயங்கமாட்டார்கள், ஏனெனில் பின்வாங்குவது என்பது இவர்களுக்கு இல்லாத ஒன்றாகும்.

விருச்சிகம்
வசீகரமும், ஆர்வமும் இவர்கள் கூடவே பிறந்த குணங்களாகும். ஜோதிடத்தின் படி காதல் மற்றும் திருமணத்தில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள். பொருத்தமில்லாத துணையுடன் வாழ்க்கை அமைந்தால் இவர்கள் அதனை உதற யோசிக்க மாட்டார்கள். அதனை விட சிறந்த தனக்கு பொருத்தமான துணையை நோக்கி இவர்கள் நகர்வார்கள். தங்கள் துணையை காதலிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது ஆனால் அவர்களும் இவர்களுக்கு காதலில் ஈடுகொடுக்க வேண்டும்.

துலாம்
அதிக பொறுமையும், அதிக காதலும் உள்ள ராசிக்காரர்கள் இவர்கள். ஜோதிடத்தின் படி துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் துணையை அதீதமாக நேசிப்பார்கள், ஆனால் அவர்களின் நேசத்திற்கு உரிய மரியாதை கிடைக்காத பொது அவர்கள் மற்றொரு சிறப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தயங்க மாட்டார்கள். ஆனால் அதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில் இவர்களின் முதல் காதல் இவர்களை அதிக தொந்தரவு செய்யும். இவர்களை வாழ்க்கையில் இழப்பவர்களே துரதிர்ஷ்டசாலிகள்.



Click it and Unblock the Notifications











