Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இராமருடன் லக்ஷ்மணன் வனவாசத்திற்கு செல்லும்போது ஊர்மிளா ஏன் அவரை தடுக்கவில்லை தெரியுமா?
லக்ஷ்மணனுக்கும், ஊர்மிளாவுக்கும் இருந்த காதலும், அவர்கள் இருவரின் தியாகமும் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானது.
இராமாயணத்தில் அனைவரும் இராமர், சீதை, அனுமன், இராவணன், லக்ஷ்மணன் இவர்களை பற்றித்தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இராமயணத்தில் புகழ் பெறாத பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா ஆவார்.

லக்ஷ்மணனுக்கும், ஊர்மிளாவுக்கும் இருந்த காதலும், அவர்கள் இருவரின் தியாகமும் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானது. லக்ஷ்மணன் தன் சகோதரனுடன் வனத்திற்கு செல்கிறேன் என்று கூறியபோது ஊர்மிளா எந்த தடங்கலும் கூறாமல் அவரை அனுப்பி வைத்தார். ஊர்மிளா லக்ஷ்மணனை ஏன் தடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த ஓவியர்
இராமரின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஊர்மிளாவும்தான். ஊர்மிளா ஓவியக்கலையில் சிறந்து விளங்கினார். இராமருக்கு முடிசூட்டுவது போன்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார். விழா நடைபெறுவதற்கு முன்னரே ஊர்மிளா ஓவியம் வரைய தொடங்கி விட்டார்.

லக்ஷ்மணனின் வருகை
ஊர்மிளா ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது திடீரென லக்ஷ்மணன் வந்துவிட்டார். அவரின் எதிர்பாராத வருகையால் கவனம் சிதறிய ஊர்மிளா தனது கையில் இருந்த வண்ணப்பூச்சை ஓவியத்தின் மீது கொட்டிவிட்டார்.

ஓவியம் பாழாகிவிட்டது
ஊர்மிளாவின் இந்த செயலால் ஓவியம் பாழாகிவிட்டது. இது ஒரு அபசகுணம் என்று ஊர்மிளா கருதினார். இதனால் மோசமான சம்பவம் ஏதோ நடக்க போகிறது என்று லக்ஷ்மணனிடம் கூறினார்.

லக்ஷ்மணரின் முடிவு
லக்ஷ்மணன் தான் வந்ததற்கான காரணத்தை கூறினார். கைகேயி செய்த சதியையும் அதனால் முடிசூட்டு விழா நடக்காது என்பதையும் கூறினார். இதனால் இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதையும் அவருடன் தானும் வனவாசம் செல்லவிருப்பதாகவும் கூறினார்.

ஊர்மிளா சொன்னது சரிதான்
ஓவியம் பாழடைந்தது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் அறிகுறி என்று சந்தேகித்த ஊர்மிளா இப்போது தனது சந்தேகம் உறுதியாகி விட்டதை உணர்ந்தார். ஆனால் ஊர்மிளா அதனை நினைத்து வருந்தவில்லை. அவர் எந்த வகையிலும் லக்ஷ்மணனின் முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை.

ஊர்மிளாவின் முடிவு
ஒரு மனைவியாக தான் லக்ஷமணனின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும், ஆனால் இப்போது தான் உங்களுடன் வனவாசத்திற்கு வந்தால் லக்ஷ்மணன் தன்னுடைய தமையனுக்கு முழுவதுமாக இராமருக்கு சேவை முடியாது என்று கூறினார்.

லக்ஷ்மணரின் நிம்மதி
லக்ஷ்மணருக்கு இருந்த பெரிய கவலை இதுவாகத்தான் இருந்தது. லக்ஷ்மணன் ஊர்மிளாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஆனால் ஊர்மிளாவின் தியாகத்தையும், கடமையுணர்ச்சியையும் பார்த்த பிறகு லக்ஷ்மணனுக்கு ஊர்மிளா மீது அன்பும், மரியாதையும் அதிகரித்தது.



Click it and Unblock the Notifications