Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
இராமருடன் லக்ஷ்மணன் வனவாசத்திற்கு செல்லும்போது ஊர்மிளா ஏன் அவரை தடுக்கவில்லை தெரியுமா?
லக்ஷ்மணனுக்கும், ஊர்மிளாவுக்கும் இருந்த காதலும், அவர்கள் இருவரின் தியாகமும் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானது.
இராமாயணத்தில் அனைவரும் இராமர், சீதை, அனுமன், இராவணன், லக்ஷ்மணன் இவர்களை பற்றித்தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இராமயணத்தில் புகழ் பெறாத பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா ஆவார்.

லக்ஷ்மணனுக்கும், ஊர்மிளாவுக்கும் இருந்த காதலும், அவர்கள் இருவரின் தியாகமும் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானது. லக்ஷ்மணன் தன் சகோதரனுடன் வனத்திற்கு செல்கிறேன் என்று கூறியபோது ஊர்மிளா எந்த தடங்கலும் கூறாமல் அவரை அனுப்பி வைத்தார். ஊர்மிளா லக்ஷ்மணனை ஏன் தடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த ஓவியர்
இராமரின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஊர்மிளாவும்தான். ஊர்மிளா ஓவியக்கலையில் சிறந்து விளங்கினார். இராமருக்கு முடிசூட்டுவது போன்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார். விழா நடைபெறுவதற்கு முன்னரே ஊர்மிளா ஓவியம் வரைய தொடங்கி விட்டார்.

லக்ஷ்மணனின் வருகை
ஊர்மிளா ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது திடீரென லக்ஷ்மணன் வந்துவிட்டார். அவரின் எதிர்பாராத வருகையால் கவனம் சிதறிய ஊர்மிளா தனது கையில் இருந்த வண்ணப்பூச்சை ஓவியத்தின் மீது கொட்டிவிட்டார்.

ஓவியம் பாழாகிவிட்டது
ஊர்மிளாவின் இந்த செயலால் ஓவியம் பாழாகிவிட்டது. இது ஒரு அபசகுணம் என்று ஊர்மிளா கருதினார். இதனால் மோசமான சம்பவம் ஏதோ நடக்க போகிறது என்று லக்ஷ்மணனிடம் கூறினார்.

லக்ஷ்மணரின் முடிவு
லக்ஷ்மணன் தான் வந்ததற்கான காரணத்தை கூறினார். கைகேயி செய்த சதியையும் அதனால் முடிசூட்டு விழா நடக்காது என்பதையும் கூறினார். இதனால் இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதையும் அவருடன் தானும் வனவாசம் செல்லவிருப்பதாகவும் கூறினார்.

ஊர்மிளா சொன்னது சரிதான்
ஓவியம் பாழடைந்தது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் அறிகுறி என்று சந்தேகித்த ஊர்மிளா இப்போது தனது சந்தேகம் உறுதியாகி விட்டதை உணர்ந்தார். ஆனால் ஊர்மிளா அதனை நினைத்து வருந்தவில்லை. அவர் எந்த வகையிலும் லக்ஷ்மணனின் முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை.

ஊர்மிளாவின் முடிவு
ஒரு மனைவியாக தான் லக்ஷமணனின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும், ஆனால் இப்போது தான் உங்களுடன் வனவாசத்திற்கு வந்தால் லக்ஷ்மணன் தன்னுடைய தமையனுக்கு முழுவதுமாக இராமருக்கு சேவை முடியாது என்று கூறினார்.

லக்ஷ்மணரின் நிம்மதி
லக்ஷ்மணருக்கு இருந்த பெரிய கவலை இதுவாகத்தான் இருந்தது. லக்ஷ்மணன் ஊர்மிளாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஆனால் ஊர்மிளாவின் தியாகத்தையும், கடமையுணர்ச்சியையும் பார்த்த பிறகு லக்ஷ்மணனுக்கு ஊர்மிளா மீது அன்பும், மரியாதையும் அதிகரித்தது.



Click it and Unblock the Notifications











