Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ராமரே வந்து மண்டியிட்டு வழிபட்ட தமிழ்நாட்டு சிவன் கோவில் எது தெரியுமா?
ராமேஸ்வரம் கோயில் பற்றி முக்கியமான சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் புகழ்ப்பெற்று விளங்கும் புண்ணியத் திருத்தலங்களுல் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பாம்பன் தீவின் மேற்குப் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இந்தியா முழுவதிலுமிருந்து ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்ககணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து இறையருளைப் பெறுகின்றனர். குறிப்பாக மகாசிவரிராத்தி அன்று இங்கு நடக்கும் ஆன்மீக விழா மிகவும் சிறப்புக்கு உரியதாகும். இராமநாதசுவாமி கோவிலைப் பற்றிய பல அறிய தகவல்களை இங்குக் காணலாம்.

இராமரால் கட்டப்பட்ட கோவில்.
விஷ்ணுவின் அவதாரமான இராமரால் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இராமநாதன் என்னும் சொல்லுக்கு "இராமனின் தலைவன்" என்பது பொருளாகும். இாமன் தான் வணங்கும் தலைவனான சிவனுக்குக் கோவில் கட்டி வழிபாடு செய்த திருத்தலம் என்பதால் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் மிகுந்த சிறப்புக்கு உரியதாகத் திகழ்கிறது. இராமாயண காலத்தில், இலங்கையில் நடந்த போரில் ஏற்பட்ட துயரங்களுக்கு ஆறுதல் தேடும் வகையில் இராமன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

அருட்பெரும் ஜோதிலிங்கம்
இந்தியாவில் சுயம்புவாகத் தோன்றிய 12 ஜோதிலிங்கத் தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இப்பன்னிரண்டு ஜோதிலிங்கத்தையும் வழிபாடு செய்பவர்கள், சிவபெருமானின் அருளால், பிறப்பு இறப்பு என்னும் மனித சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி என்னும் முழுமையை அடைய முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

நான்கு புண்ணியத்தலங்களுள் ஒன்று
மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் வரையறை செய்யப்பட்ட நான்கு புண்ணியத் தலங்கள், பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி ஆகியவை. தற்காலத்தில், பத்ரிநாத், துவாரகா, பூரி, இராமேஸ்வரம் ஆகியவை நான்கு புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றன. இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த நான்கு புண்ணியத் தலங்களுக்கும் சென்று வழிபட்டால் தங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.

5. இணையற்ற இரு லிங்கங்கள்
"ராமலிங்கம்", "விஸ்வலிங்கம்" என்னும் இரண்டு லிங்கங்கள் அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். சிவ வழிபாட்டுத் தலத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் இந்த லிங்கத்தை, இராமன், சீதாதேவி மற்றும் அனுமனோடு சேர்ந்து வழிபட்டு மகிழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த இரு லிங்கங்களும் உருவானது குறித்த சுவராஸ்யமான வரலாறும் உண்டு.

6. இரு லிங்கங்களின் கதை
இராமநாதசுவாமி கோவிலில் ஒரு பெரிய லிங்கத்தை வைத்து வழிபாடு செய்ய நினைத்தார் இராமர். இமாலய மலையிலிருந்து பெரிய லிங்கத்தைச் சுமந்து வருமாறு அனுமனைக் கேட்டுக் கொண்டார் இராமர். அனுமன் இமாலய மலையிலிருந்து லிங்கத்தை எடுத்துவருவதற்கு காலதாமம் ஏற்பட்டது. எனவே, தன்னுடைய நாதனின் ஆசையை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு சீதை கடற்கரையிலிருந்த மணலைத் திரட்டி ஒரு லிங்கத்தைச் செய்து கொடுத்தார். இவ்வாறாக அனுமனாலும், சீதாதேவியாலும் இராமநாதசுவாமி கோவிலுக்கு இரண்டு சிவலிங்கங்கள் உருவாக்கப்பட்டன.

7. ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூண்களால் அமைக்கப்பட்ட பழங்கால மண்டபங்கள் உலகில் மிகச்சில இடங்களில மட்டுமே காணப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அத்தகைய இடங்களில் ஒன்று. இரமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவிலில் 1212 தூண்களோடு கூடிய வெளிப்பிரகார மண்டபம் அமைந்துள்ளது. இக்கோவிலின் இராஜகோபுரம் 53 மீட்டர் நீளமுடையது.

8. சந்நிதிகளின் சங்கமம்
இராமரால் நிர்மாணிக்கப்பட்ட சிவபெருமான் சிலை மூலவராக கோயிலின் உள்ளே அமைந்துள்ளது. இக்கோயில் கருப்புநிறக் கிரானைட் கற்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் விமான கோபுரம் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலில், இராமநாதசுவாமி, விசாலாட்சி, பர்வதவர்த்தினி, சந்தானகணபதி, மகாகணபதி, சுப்பிரமணியர், சேதுமாதவர், மகாலட்சுமி, நடராஜர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்குத் தனித்தனியாக சிலைகளும் வழிபாட்டிடங்களும் அமைந்துள்ளன.

9. நன்மையளிக்கும் புண்ணிய தீர்த்தங்கள்
இக்கோயிலில் 22 புண்ணிய தீர்த்தத் தலங்கள் அமைந்துள்ளன. இராமன் தன்னுடைய அம்பறாத்தூணில் வைத்திருந்த 22 அம்புகளைக் குறிக்கும் வகையில் இந்த 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைவதற்குள் இந்தத் தீர்த்தங்களில் நீராடுவது பக்கதர்களின் முக்கியக் கடமையாகும்.

10. உலகின் மிக நீளமான பிரகாரம்.
இராமநாதசுவாமி கோவிலின் சுற்றுப் பிரகாரம் உலகின் மிக நீண்ட பிரகாரமாகக் கருதப்படுகிறது. இப்பிகாரம் 6.9 மீட்டர் உயரமுடையது. கிழக்கு மற்றும் மேற்காக 400 அடி நீளமும், வடக்கு மற்றும் தெற்காக 640 அடி நீளமும் உடையது இப்பிரகாரம்15.5 அடி முதல் 17 அடிவரை அகலமுடையதாகும். இந்தச் சுற்றுப் பாதையின் மொத்த நீளம் 3850 அடியாகும்.



Click it and Unblock the Notifications











