Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா?
லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு கொண்டு வர சில பொருட்களை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது.
இந்து மதத்தில் லக்ஷ்மி தேவிதான் செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். லக்ஷ்மி தேவியின் அருள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று புராணங்கள் கூறுகிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் லக்ஷ்மி தேவியின் அருளும் இருந்தால் ஒருவரின் முன்னேற்றம் அளப்பரியதாய் இருக்கும்.

லக்ஷ்மி தேவி வழிபாடு என்பது மிகவும் முக்கியமானதாகும். லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு கொண்டு வர சில பொருட்களை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்குள் அழைத்து வர வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குபேரர்
உங்கள் வீட்டில் குபேரர் சிலையை வைப்பது லக்ஷ்மி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகும். செல்வத்தை பாதுகாக்கும் கடவுளாக குபேரர் கருதப்படுகிறார். குபேரர் சிலையை வைக்கும் இடம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

சிறிய தேங்காய்
இந்த தேங்காய்கள் வழக்கமான தேங்காயை விட சின்னதாக இருக்கும். இது ஸ்ரீபால் என்று அழைக்கப்படுகிறது, அதற்கு லக்ஷ்மியின் பழம் என்று அர்த்தம். இந்த தேங்காயை வீட்டிற்குள் வைத்து வழிபடுவது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.

மெர்குரி சிலைகள்
மெர்குரியால் செய்யப்பட்ட சிலைகளும், படங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உங்கள் வீட்டில் மெர்குரியால் செய்த லக்ஷ்மி சிலைகளை வீட்டில் வைப்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைத்துவரும்.

சோழிகள்
குழந்தைகள் இதனை வீட்டில் வைத்து விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த சோழிகள் கடலில் இருந்து கிடைக்கிறது லக்ஷ்மி தேவியும் கடலில் இருந்து பிறந்தவர்தான். எனவே இது உங்கள் வீட்டில் இருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.

மோதி சங்கு
விலைமதிப்பற்ற இந்த சங்கு மந்திர, தந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இது லக்ஷ்மியின் அருளை உங்கள் இல்லம் தேடி வரவைக்கும்.

வெள்ளி சிலைகள்
வெள்ளியால் செய்யப்பட்ட லக்ஷ்மி மாற்றம் பிள்ளையார் சிலைகள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த சிலைகளை தினமும் வழிபடுவது நீங்கள் நினைத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஸ்ரீ எந்திரம்
தாந்திரீக அறிவியலில் ஸ்ரீ எந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது எந்திரங்களின் அரசனாக கருதப்படுகிறது. உங்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.

தாமரை கட்டா
இது தாமரையில் இருந்து கிடைக்கும் ஒருவகை விதை ஆகும். லக்ஷ்மி தாமரையில் வசிப்பவர் ஆவார், இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை வீட்டில் வைத்திருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.

ஒரு கண் தேங்காய்
இந்த வகை தேங்காய்தான் பொதுவாக தாந்திரீக செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கண்களுக்கு பதிலாக இந்த தேங்காயில் ஒரு கண்தான் இருக்கும். அதுதான் இதன் சிறப்பு.



Click it and Unblock the Notifications