Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...!
கனவுல பொண்ணுங்க வராங்களா? நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது...!
வாழ்க்கையில் மறுக்க முடியாத நிகழ்வான மரணம் எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அது தெரியாமல் இருக்கும் வரைதான் நம்மால் மகிழ்ச்சியாக வாழவும் முடியும்.
நமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். இனபம், துன்பம், மரணம், மோட்சம் என நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் நமது புராணங்களில் பதில்கள் உள்ளது.

வாழ்க்கையில் மறுக்க முடியாத நிகழ்வான மரணம் எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அது தெரியாமல் இருக்கும் வரைதான் நம்மால் மகிழ்ச்சியாக வாழவும் முடியும். ஆனால் ஒருவகையில் அதனை தெரிந்து கொள்வது நம்மை பாவச்செயல்கள் செய்வதில் இருந்து தடுக்க உதவும். மேலும் நம்முடைய கடமைகளை சரியாக முடிக்கவும் உதவும். இந்த சூழ்நிலையில் மரணம் நிகழப்போவதற்கான சில அறிகுறிகளை தெரிந்து கொள்வது எப்படி என நமது புராணங்கள் கூறியுள்ளது. அந்த அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிகுறி 1
சூரியன் உங்களுக்கு சிதைந்தது போலவோ அல்லது தேய்ந்தது போலவோ உங்கள் கண்களுக்கு தெரிவது உங்களுக்கு மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் அவர்கள் 11 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என புராணங்கள் கூறுகிறது.

அறிகுறி 2
உங்கள் பாதங்களுக்கும் உங்கள் விதிக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் மரணம் ஏற்படுவதையும் உங்கள் பாதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தூசி அல்லது மண் மீது நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் அவர்கள் ஏழு மாதத்தில் இறந்து விடுவார்கள்.

அறிகுறி 3
நம்மை விட பறவைகளுக்கு உணர்திறன் மிகவும் அதிகமாகும். ஒருவருக்கு மரணம் நேரப்போவது அவர்களை சுற்றியுள்ள பறவைகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். ஒருவரின் தலைக்கு மேலே கழுகு, புறா, காகம் போன்றவை தொடர்ந்து சுற்றி கொண்டிருந்தால் அவர்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள்.

அறிகுறி 4
ஒருவரின் பிம்பம் சிதைந்து காணப்பட்டால் அது மரணத்தின் அறிகுறியாகும். ஒருவர் திடீரென மேகம் அல்லது தூசிகளால் சூழப்பட்டால் அவர்கள் நான்கு அல்லது ஐந்து மாதத்தில் இறந்து விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.

அறிகுறி 5
வானத்தில் மேகங்கள் இல்லாதபோது மின்னலை பார்த்தாலோ அல்லது தண்ணீரில் வானவில்லை பார்த்தாலோ அது மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்களின் ஆயுள்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே என்று கருட புராணம் கூறுகிறது.

அறிகுறி 6
பிணவாடை என்பது மரணம் உங்களுக்கு மிகஅருகில் இருப்பதற்கான அறிகுறி ஆகும். பிணம் இல்லாத போதே ஒருவர் பிணவாடையை அடிக்கடி உணர்ந்தால் அவர்கள் பத்து அல்லது பதினைந்து நாட்களில் இறந்து விடுவார்கள் என்று புராணம் கூறுகிறது.

அறிகுறி 7
குளித்த முடித்தவுடன் உடனேயே உங்களின் பாதம் உலர்ந்து போவது அவர்கள் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாக போகிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறு நிகழ்ந்தால் அவர்கள் பத்து நாட்களில் இறந்து விடுவார்கள்.

அறிகுறி 8
தாகம் என்பது மனிதர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் ஒருவரின் தாகம் தீரவில்லை என்றால் அவர்கள் மிகவிரைவில் இறந்து விடுவார்களாம்.

அறிகுறி 9
கனவுகளும் கூட மரணம் நிகழ போவதை உணர்த்தக்கூடும். கனவில் தெற்கு பக்கமாக பயணிப்பது போலவும் கரடிகளோ அல்லது குரங்குகளோ உடன் வருவது போல வந்தால் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.

அறிகுறி 10
கனவில் பெண்கள் வருவது கூட உங்கள் மரணத்தை தீர்மானிக்கும். கருப்பு உடையணிந்து ஒரு பெண் பாடுவது போலவோ அல்லது ஓட்டைகள் நிறைந்த கருப்பு உடை அணிந்த பெண் கனவில் வந்தாலோ அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.

அறிகுறி 11
விளக்கு எரியும் போது அதற்கென ஒரு தனி வாசனை இருக்கும். ஆனால் ஒருவரால் விளக்கெரியும் வாசனையை உணர முடியவில்லை என்றால் அவர்கள் ஆயுட்காலம் மிகவும் குறைவுதான்.

அறிகுறி 12
இரவில் வானவில் தெரிந்தாலோ அல்லது ஒரு கண்ணில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அல்லது நாக்கு எப்பொழுதும் வறட்சியுடன் இருந்தால் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.



Click it and Unblock the Notifications











