Just In
- 10 min ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 32 min ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 1 hr ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 1 hr ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கனவுல பொண்ணுங்க வராங்களா? நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது...!
வாழ்க்கையில் மறுக்க முடியாத நிகழ்வான மரணம் எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அது தெரியாமல் இருக்கும் வரைதான் நம்மால் மகிழ்ச்சியாக வாழவும் முடியும்.
நமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். இனபம், துன்பம், மரணம், மோட்சம் என நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் நமது புராணங்களில் பதில்கள் உள்ளது.
வாழ்க்கையில் மறுக்க முடியாத நிகழ்வான மரணம் எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அது தெரியாமல் இருக்கும் வரைதான் நம்மால் மகிழ்ச்சியாக வாழவும் முடியும். ஆனால் ஒருவகையில் அதனை தெரிந்து கொள்வது நம்மை பாவச்செயல்கள் செய்வதில் இருந்து தடுக்க உதவும். மேலும் நம்முடைய கடமைகளை சரியாக முடிக்கவும் உதவும். இந்த சூழ்நிலையில் மரணம் நிகழப்போவதற்கான சில அறிகுறிகளை தெரிந்து கொள்வது எப்படி என நமது புராணங்கள் கூறியுள்ளது. அந்த அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிகுறி 1
சூரியன் உங்களுக்கு சிதைந்தது போலவோ அல்லது தேய்ந்தது போலவோ உங்கள் கண்களுக்கு தெரிவது உங்களுக்கு மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் அவர்கள் 11 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என புராணங்கள் கூறுகிறது.
அறிகுறி 2
உங்கள் பாதங்களுக்கும் உங்கள் விதிக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் மரணம் ஏற்படுவதையும் உங்கள் பாதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தூசி அல்லது மண் மீது நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் அவர்கள் ஏழு மாதத்தில் இறந்து விடுவார்கள்.
அறிகுறி 3
நம்மை விட பறவைகளுக்கு உணர்திறன் மிகவும் அதிகமாகும். ஒருவருக்கு மரணம் நேரப்போவது அவர்களை சுற்றியுள்ள பறவைகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். ஒருவரின் தலைக்கு மேலே கழுகு, புறா, காகம் போன்றவை தொடர்ந்து சுற்றி கொண்டிருந்தால் அவர்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள்.
அறிகுறி 4
ஒருவரின் பிம்பம் சிதைந்து காணப்பட்டால் அது மரணத்தின் அறிகுறியாகும். ஒருவர் திடீரென மேகம் அல்லது தூசிகளால் சூழப்பட்டால் அவர்கள் நான்கு அல்லது ஐந்து மாதத்தில் இறந்து விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.
அறிகுறி 5
வானத்தில் மேகங்கள் இல்லாதபோது மின்னலை பார்த்தாலோ அல்லது தண்ணீரில் வானவில்லை பார்த்தாலோ அது மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்களின் ஆயுள்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே என்று கருட புராணம் கூறுகிறது.
அறிகுறி 6
பிணவாடை என்பது மரணம் உங்களுக்கு மிகஅருகில் இருப்பதற்கான அறிகுறி ஆகும். பிணம் இல்லாத போதே ஒருவர் பிணவாடையை அடிக்கடி உணர்ந்தால் அவர்கள் பத்து அல்லது பதினைந்து நாட்களில் இறந்து விடுவார்கள் என்று புராணம் கூறுகிறது.
அறிகுறி 7
குளித்த முடித்தவுடன் உடனேயே உங்களின் பாதம் உலர்ந்து போவது அவர்கள் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாக போகிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறு நிகழ்ந்தால் அவர்கள் பத்து நாட்களில் இறந்து விடுவார்கள்.
MOST
READ:
கனவில்
மரணம்
காண்பது
போல
வந்தால்
ஆயுள்
அதிகரிக்கும்
என்பது
உண்மையா?
அறிகுறி 8
தாகம் என்பது மனிதர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் ஒருவரின் தாகம் தீரவில்லை என்றால் அவர்கள் மிகவிரைவில் இறந்து விடுவார்களாம்.
அறிகுறி 9
கனவுகளும் கூட மரணம் நிகழ போவதை உணர்த்தக்கூடும். கனவில் தெற்கு பக்கமாக பயணிப்பது போலவும் கரடிகளோ அல்லது குரங்குகளோ உடன் வருவது போல வந்தால் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.
அறிகுறி 10
கனவில் பெண்கள் வருவது கூட உங்கள் மரணத்தை தீர்மானிக்கும். கருப்பு உடையணிந்து ஒரு பெண் பாடுவது போலவோ அல்லது ஓட்டைகள் நிறைந்த கருப்பு உடை அணிந்த பெண் கனவில் வந்தாலோ அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.
அறிகுறி 11
விளக்கு எரியும் போது அதற்கென ஒரு தனி வாசனை இருக்கும். ஆனால் ஒருவரால் விளக்கெரியும் வாசனையை உணர முடியவில்லை என்றால் அவர்கள் ஆயுட்காலம் மிகவும் குறைவுதான்.
MOST
READ:
எவ்வளவு
சோதனை
வந்தாலும்
இந்த
ராசிக்காரர்
அசால்டா
சமாளிப்பாராம்
அறிகுறி 12
இரவில் வானவில் தெரிந்தாலோ அல்லது ஒரு கண்ணில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அல்லது நாக்கு எப்பொழுதும் வறட்சியுடன் இருந்தால் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.