Just In
- 1 hr ago Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- 8 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 10 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 12 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
Don't Miss
- Sports ஐபிஎல் தொடரில் வருகிறது புதிய விதி.. இனி பவுலர்களுக்கும் கொண்டாட்டம் தான்.. பேட்ஸ்மேனுக்கு சிக்கல்
- Finance ஈரான் – இஸ்ரேல் பிரச்சனை: இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரம் ஏன் பாதிக்கப்படுகிறது?
- News வாஷிங் மெஷின் நீங்க யூஸ் பண்றீங்களா? வாஷிங்மெஷினை கிளீன் செய்ய இந்த 2 பொருள் போதுமே.. சூப்பர் டிப்ஸ்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சனிக்கிழமையில் இந்த பொருட்களை சாப்பிடுவது சனிபகவானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும் தெரியுமா
நீங்கள் செய்யும் சில செயல்கள் சனிபகவானுக்கு உங்கள் மீதான கோபத்தை அதிகரிக்கும். அந்த வகையில் சனிக்கிழமைகளில் நீங்கள் சில உணவுகளை சாப்பிடுவது சனிபகவானுக்கு உங்கள் மீது கோபத்தை ஏற்படுத்தும்.
சனிபகவானின் கோபத்தை பற்றி நாம் நன்கு அறிவோம். நம்முடைய பாவங்களுக்கு இறந்த பிறகு தண்டனை கொடுப்பது எமதர்மன் என்றால் வாழும்போதே தண்டனை கொடுப்பது சனிபகவன்தான். இவர் இந்த வேலையை ஈசனின் ஆணையின் பேரிலேயே செய்கிறார். சனிபகவான் உங்களை சோதிக்கிறார் என்றால் நிச்சயமாக நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஏனெனில் சனிபகவான் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்.
சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது ஆனால் அதனை குறைக்க இயலும். நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள், வழிபடும் பொருட்கள், உஙக்ளின் ஒழுக்கமான வாழ்க்கைமுறை போன்றவை உங்களை சனிபகவானின் சோதனனிகளில் இருந்து ஓரளவிற்கு பாதுகாக்கும். அதேசமயம் நீங்கள் செய்யும் சில செயல்கள் சனிபகவானுக்கு உங்கள் மீதான கோபத்தை அதிகரிக்கும். அந்த வகையில் சனிக்கிழமைகளில் நீங்கள் சில உணவுகளை சாப்பிடுவது சனிபகவானுக்கு உங்கள் மீது கோபத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் சனிக்கிழமைகளில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.
மாங்காய் ஊறுகாய்
உணவை முழுமையாக்குவது எதுவெனில் அது நிச்சயம் ஊறுகாய்தான். அதிலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தது எனில் அது மாங்காய் ஊறுகாய்தான். ஆனால் சனிக்கிழமைகளில் மாங்காய் ஊறுகாய் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சனிக்கிழமையில் இதனை சாப்பிடுவது சனிபகவானை அவமதிப்பது போன்றதாகும், இதனால் பணஇழப்பு ஏற்படலாம்.
பால்
இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை அதுதான். ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிக்கிழமையில் பால் சாப்பிடக்கூடாது. இது ஆரோக்கியமானதாக இருக்கலாம் ஆனால் அதிர்ஷ்டமானதாக இருக்காது. அப்படி குடிக்க நேர்ந்தாலும் அதற்க்கு பின் வெல்லத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லயெனில் உங்களுக்கு வந்து சேரவேண்டிய நல்ல செய்திகள் அனைத்தும் தாமதப்படும்.
சிவப்பு பருப்பு
சனிபகவானை வழிபட வேண்டுமென்றால் சனிக்கிழமையில் சிவப்பு பருப்பு சாப்பிடுவதை தவிருங்கள். சனிக்கிழமையில் இதனை சாப்பிடுவது செவ்வாயின் தாக்கத்தை அதிகரிக்கும். இதனால் சனிபகவானின் கோபம் மிகவும் அதிகரிக்கும். இது பொருளாதாரரீதியாக உங்கள் குடும்பத்திற்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். மேலும் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
MOST
READ:
பிணங்களை
ஏன்
சூரியன்
மறைவதற்குள்
எரித்துவிட
வேண்டும்
என்று
கூறுகிறார்கள்
தெரியுமா?
சிவப்பு மிளகாய்
உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு பொருளென்றால் அது சிவப்பு மிளகாய்தான். ஆனால் உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும் பொருளும் இதுதான். சனிக்கிழமைகளில் சிவப்பு மிளகாய் சாப்பிடுபவர்கள் சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது.
மது
பொதுவாகவே மது அருந்துபவர்களை சனிபகவான் விரும்பமாட்டார். அதிலும் சனிக்கிழமையில் மது அருந்துவது சனிபகவானை மிகவும் கோபப்படுத்தும் செயலாகும். அதுவும் உங்களுக்கு சனிதிசை நடக்கும்போது இவ்வாறு செய்வது உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும். இந்த பழக்கத்தால் உங்களுக்கு விபத்துகள் ஏற்படலாம்.
கடுகு எண்ணெய்
சனிக்கிழமையில் கடுகு எண்ணெயை உணவில் பயன்படுத்தக்கூடாது, அதற்கு பதிலாக வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது சனிபகவானுக்கு மிகவும் பிடித்த வழிபாட்டு பொருட்களில் ஒன்றாகும், எனவே அதனை அவரை வழிபடவே பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெயில் விளக்கேற்றி சனிபகவானை வழிபடுவது உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
MOST
READ:
இராவணனின்
மரணத்திற்கு
பிறகு
இராமர்
எப்படி
அயோத்தியின்
மன்னரானார்
தெரியுமா?
கருப்பு எள்
சனிபகவானுக்கு மிகவும் பிடித்த வழிபாட்டு பொருட்களில் முக்கியமான ஒரு பொருள் கருப்பு எள் ஆகும். சனிக்கிழமையில் கருப்பு எள் வைத்து சனிபகவானை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். ஆனால் அதனை சாப்பிடுவது கண்டிப்பாக சனிபகவானின் கோபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும். இதை சனிக்கிழமையில் சாப்பிடுவது அவரை அவமதிப்பதற்கு சமமாகும்.