Just In
- just now
மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!
- 30 min ago
உங்க ராசிப்படி பெற்றோராக நீங்கள் செய்யப்போகும் தவறு என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 1 hr ago
சுவையான... வரமிளகாய் சட்னி
- 2 hrs ago
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
Don't Miss
- News
ரமலான் தினத்தில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்... சிபிஎஸ்இ அறிவிப்பு!
- Movies
ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
- Sports
உங்க இடத்துக்கு 2 பேர் வெயிட்டிங்... நியாபகம் வச்சிட்டு ஆடுங்க..சுப்மன் கில்லுக்கு லக்ஷ்மண் அட்வைஸ்
- Finance
வீடு கட்ட,வாங்க இது தான் சரியான நேரம்.. வட்டியை குறைத்த மற்றொரு வங்கி.. வட்டி எவ்வளவு தெரியுமா?
- Automobiles
கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...
பார்ட்டி என்றாலே ஒரே மஜாதான்! நண்பர்களாக கூடிவிட்டால், யார் அதிகம் குடிக்கிறார்கள் என்ற போட்டியும் எழும். அதற்குத் கைகளை தட்டி உற்சாகப்படுத்த பலர் ரெடியாக இருப்பர்.
ஆனால், இதுபோன்ற விளையாட்டு வினையில்போய் நிற்கும் என்பதை அதிகமாக யாரும் யோசித்து பார்ப்பதில்லை. மது அருந்தும்போட்டியில் சிலர் உயிரையும் இழந்துள்ளனர்.

தாய்லாந்து பார்ட்டி
தாய்லாந்து நாட்டில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறவர்கள் ஓய்விடத்தில் (ரிசார்ட்) விருந்து (பார்ட்டி) வைத்துள்ளனர். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. விருந்தில் பீர் அருந்துவதற்காக பலர் வரிசையில் நிற்கின்றனர். பீர் அருந்தும் உயரமான குவளை ஒன்றில் வாங்கி ஒரே மடக்கில் அருந்திவிட்டு, வெற்றியை காட்டுவதற்கு குவளையை உயர்த்திய ஒரு நபர், அப்படியே நிலைகுலைந்து விழுகிற காட்சி அதில் பதிவாகியுள்ளது.
MOST READ: குழந்தைங்க அடம்பிடிக்கறப்ப இந்த வார்த்தைய மட்டும் சொல்லுங்க... கப்...சிப்னு ஆகிடுவாங்க...

சிங்கிள் கல்ப்
நம்ம ஊர் குவாட்டர், ஆஃப் போன்று 'பின்ட்' என்ற அளவீடு ஒன்று உள்ளது. பிரிட்டன் போன்ற சில இடங்களில் 568 மிலியும் அமெரிக்காவில் 473 மிலியும் ஒரு 'பின்ட்' என்று குறிப்பிடப்படுகிறது. தாய்லாந்து மனிதர், ஒரு பின்ட் அளவான பீரை அரை நிமிட நேரத்துக்குள் குடித்துள்ளார். உடனே கீழே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
MOST READ: உட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா? இதுதான் காரணம்... இப்படி செய்ங்க சரியாயிடும்...

பீரால் பிரிந்ததா உயிர்?
அவர் அருந்திய மது விஷமாகிவிட்டது என்று பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதி சுகாதார கட்டுப்பாட்டு துறை, குறிப்பிட்ட அம்மனிதர் மதுவினால்தான் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்வது கடினமான காரியம் என்ற கருத்து தெரிவித்துள்ளது.
அசம்பாவிதம் நடந்தபோது அங்கிருந்த பெண்மணி ஒருவர், பீர் அருந்தியவருக்கு வலிப்பு வந்தது போல் தெரிந்தது என்றும், அவரது வாய் மற்றும் மூக்கின் வழியே பீர் வெளியே வந்தது என்றும் தெரிவித்துள்ளார். நிலைகுலைந்து விழுந்த அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்ததுதான் சோகம்!