Just In
- 1 hr ago
இன்றைய ராசிப்பலன் (22.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- 11 hrs ago
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- 11 hrs ago
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- 12 hrs ago
குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரை தெரியாம கூட இந்த ஆரோக்கிய உணவுகளை கொடுத்துறாதீங்க...!
Don't Miss
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Movies
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா?
நமது முன்னேற்றத்திற்கான சாவி என்பது நமது உடல்தான். அதேபோல நமது அதிர்ஷ்டம், வெற்றி, எதிர்காலம் போன்றவற்றிற்கான ரகசியங்கள் நமது உடலிலேயே உள்ளது. நாம்தான் அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். சாஸ்திரங்களின் படி நமது எதிர்காலம் பற்றிய பல ரகசியங்கள் நமது கைகளிலேயே உள்ளது.
நமது கைகளில் இருக்கும் மச்சம், ரேகைகள், அடையாளங்கள் என ஒவ்வொன்றும் நமது எதிர்காலத்துடன் தொடர்புடையதாகும். கைரேகையை பார்த்து எதிர்காலத்தை கூறுவது நமது நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு வழக்கமாகும். இந்த பதிவில் மணிபந்த ரேகை என்றால் என்ன? அது உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

மணிபந்த ரேகை
மணிபந்த ரேகை என்பது உள்ளங்கைக்கும், கைக்கும் இடையே இருக்கும் கோடாகும். சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறியுள்ள படி மணிபந்த ரேகை என்பது வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அறிகுறியாகும். அதேசமயம் இது உங்களுக்கு காத்திருக்கும் அழிவை பற்றியும் கூறும்.

அதிர்ஷ்டம்
மணிபந்த ரேகையில் இருந்து கிளை ரேகையானது தொடங்கி உங்கள் கைரேகையின் மேடு வரை சென்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாருமில்லை. நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக காத்திருக்கும். ஒருவேளை இறந்து கோடுகள் இருந்தால் உங்கள் வருமானம் திடீரென இரட்டிப்பாகும்.
MOST READ: இந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரா தங்கத்தை விட விலை உயர்ந்ததாம் தெரியுமா?

ஆயுள் கோடு
உங்கள் மணிபந்த ரேகையிலிருந்து கோடானது உங்கள் ஆயுள்ரேகையை தொட்டால் உங்கள் எதிர்காலம் வெளிநாடுக்ளில் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ரேகை கையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் மிக சிறிய வயதிலேயே கிடைத்துவிடும். செல்வத்திற்கும் எந்த குறையும் இவர்கள் வாழ்வில் இருக்காது.

இதய ரேகை
உங்களுடைய மணிபந்த ரேகை இதய கோட்டை தொடும்படி இருந்தால் அது நீண்ட புகழுக்கும், நிலையான செல்வத்திற்குமான அடையாளமாகும். இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு கூட்டு தொழில் அமோகமாக இருக்கும். வெற்றியும், புகழும் இவர்களை தேடிவரும்.

சூரியமேடு
உங்கள் மணிபந்த ரேகையில் இருந்து செல்லும் கோடு சூரிய மேட்டில் சென்று முடிவடைந்தால் இது அரசியலில் ஏற்படும் வெற்றிக்கான அடையாளமாகும். உங்களுக்கு அரசியலில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் இருக்கும். ஆனால் நீங்கள் எந்த துறையில் நுழைந்தாலும் அதில் உங்கள் கால்தடத்தை வலுவாக பதிப்பீர்கள்.

குருமேடு
மணிபந்த ரேகையிலிருந்து செல்லும் கோடு குருமேட்டை சென்று அடைந்தால் உங்கள் தொழிலில் நீங்கள் உச்சத்தை அடப்போகிறீர்கள் என்று அர்த்தம். மிகச்சிறிய வயதிலேயே நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். உங்களை விட வயதில் மூத்தவர்கள் மீது நீங்கள் காதலில் விழ வாய்ப்புள்ளது. மற்றவர்களை உங்களை ஏற்றுக்கொள்ள வைக்க நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.