Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா?
நமது கைகளில் இருக்கும் மச்சம், ரேகைகள், அடையாளங்கள் என ஒவ்வொன்றும் நமது எதிர்காலத்துடன் தொடர்புடையதாகும்.
நமது முன்னேற்றத்திற்கான சாவி என்பது நமது உடல்தான். அதேபோல நமது அதிர்ஷ்டம், வெற்றி, எதிர்காலம் போன்றவற்றிற்கான ரகசியங்கள் நமது உடலிலேயே உள்ளது. நாம்தான் அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். சாஸ்திரங்களின் படி நமது எதிர்காலம் பற்றிய பல ரகசியங்கள் நமது கைகளிலேயே உள்ளது.

நமது கைகளில் இருக்கும் மச்சம், ரேகைகள், அடையாளங்கள் என ஒவ்வொன்றும் நமது எதிர்காலத்துடன் தொடர்புடையதாகும். கைரேகையை பார்த்து எதிர்காலத்தை கூறுவது நமது நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு வழக்கமாகும். இந்த பதிவில் மணிபந்த ரேகை என்றால் என்ன? அது உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

மணிபந்த ரேகை
மணிபந்த ரேகை என்பது உள்ளங்கைக்கும், கைக்கும் இடையே இருக்கும் கோடாகும். சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறியுள்ள படி மணிபந்த ரேகை என்பது வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அறிகுறியாகும். அதேசமயம் இது உங்களுக்கு காத்திருக்கும் அழிவை பற்றியும் கூறும்.

அதிர்ஷ்டம்
மணிபந்த ரேகையில் இருந்து கிளை ரேகையானது தொடங்கி உங்கள் கைரேகையின் மேடு வரை சென்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாருமில்லை. நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக காத்திருக்கும். ஒருவேளை இறந்து கோடுகள் இருந்தால் உங்கள் வருமானம் திடீரென இரட்டிப்பாகும்.

ஆயுள் கோடு
உங்கள் மணிபந்த ரேகையிலிருந்து கோடானது உங்கள் ஆயுள்ரேகையை தொட்டால் உங்கள் எதிர்காலம் வெளிநாடுக்ளில் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ரேகை கையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் மிக சிறிய வயதிலேயே கிடைத்துவிடும். செல்வத்திற்கும் எந்த குறையும் இவர்கள் வாழ்வில் இருக்காது.

இதய ரேகை
உங்களுடைய மணிபந்த ரேகை இதய கோட்டை தொடும்படி இருந்தால் அது நீண்ட புகழுக்கும், நிலையான செல்வத்திற்குமான அடையாளமாகும். இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு கூட்டு தொழில் அமோகமாக இருக்கும். வெற்றியும், புகழும் இவர்களை தேடிவரும்.

சூரியமேடு
உங்கள் மணிபந்த ரேகையில் இருந்து செல்லும் கோடு சூரிய மேட்டில் சென்று முடிவடைந்தால் இது அரசியலில் ஏற்படும் வெற்றிக்கான அடையாளமாகும். உங்களுக்கு அரசியலில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் இருக்கும். ஆனால் நீங்கள் எந்த துறையில் நுழைந்தாலும் அதில் உங்கள் கால்தடத்தை வலுவாக பதிப்பீர்கள்.

குருமேடு
மணிபந்த ரேகையிலிருந்து செல்லும் கோடு குருமேட்டை சென்று அடைந்தால் உங்கள் தொழிலில் நீங்கள் உச்சத்தை அடப்போகிறீர்கள் என்று அர்த்தம். மிகச்சிறிய வயதிலேயே நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். உங்களை விட வயதில் மூத்தவர்கள் மீது நீங்கள் காதலில் விழ வாய்ப்புள்ளது. மற்றவர்களை உங்களை ஏற்றுக்கொள்ள வைக்க நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications