இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி

தற்போது ஒட்டுமொத்த உலகமே இன்டர்நெட்டை சார்ந்துதான் உள்ளது. இணையசேவை இல்லாத ஒரு நாளை கூட நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. கல்வி, வணிகம், சுகாதாரம் மற்றும் அரசு சேவைகள் என மக்களின் வாழ்வை எளிதாக்குவதில் இணையம் முக்கியப் பங்காற்றுகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 600 கோடி மக்கள் தினமும் இணையத்தைப் பயன்படுத்தினர். அதாவது உலக மக்கள் தொகையில் 74 சதவீதத்தினர் தினமும் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்.

Which Country Has No Internet Access in the World

2026-ஆம் ஆண்டிலும், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாடப் பணிகள் மற்றும் தகவல் தொடர்புகளுக்காகத் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்து விட்ட காலத்தில் கூட ஒரு நாட்டில் மட்டும் இன்னும் இணைய வசதி இல்லை. இது கேட்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் அப்படி ஒரு நாடு உள்ளது. இணைய வசதி இல்லாத அந்த நாடு எது என்பதையும், அங்கு ஏன் இணைய இணைப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இணைய வசதி இல்லாத நாடு எது?

உலகிலுள்ள 195 நாடுகளில் ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாட்டிலும் குறைந்தபட்ச அளவிலாவது இணைய இணைப்பு உள்ளது. ஆனால், மிக மோசமான இணைப்பு வசதி காரணமாக இணைய வசதி இல்லாத ஒரே நாடு எரித்ரியா மட்டுமே. எரித்ரியாவில் சாதாரண குடிமக்களுக்கு அடிப்படையில் எந்தவொரு மொபைல் இணையச் சேவையும் வழங்கப்படுவதில்லை. 'எரிடெல்' (EriTel) எனப்படும் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், பேசுவதற்கானத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது.

வீடுகளில் இணைய இணைப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன, இணைய வசதி தேவைப்படுபவர்கள், கடுமையாகக் கண்காணிக்கப்படும் ஒரு சில இன்டர்நெட் சென்டர்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

எரித்திரியாவில் இன்டர்நெட் வசதி இல்லாமல் இருப்பது ஏன்?

எரித்திரியாவில் இன்டர்நெட் வசதி குறைவாக இருப்பதற்கு, அரசின் கொள்கைகள் மற்றும் அந்நாட்டின் தொலைத்தொடர்புத் துறையில் நிலவும் கட்டுப்பாடு ஆகியவையே காரணமாக உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட இன்டர்நெட் சேவை நிறுவனங்களைக் கொண்ட உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி, எரித்திரியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் இன்றும் அரசால் மட்டுமே வழங்கப்படுகின்றன.

தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதையே எரித்திரியா அரசு பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறது. இதன் விளைவாக, பிராட்பேண்ட் தொழில்நுட்பங்கள், மொபைல் டேட்டா மற்றும் இணைய அணுகல் ஆகியவற்றில் கடுமையாக பின்தங்கியுள்ளது. மொபைல் பிராட்பேண்ட் மற்றும் வீட்டு இணையச் சேவைகள் ஆகியவை பொதுவான சேவைகளாக உள்ளது போல இந்த நாட்டில் மக்களால் எதிர்பார்க்க முடியாது.

இணைய வசதி இல்லாததால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்

இந்த நாட்டில் இணைய வசதி இல்லாதது, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பாதிக்கிறது. இந்தக் கட்டுப்பாடு, இணையவழி கல்விப் பொருட்கள், இணைய நூலகங்கள், காணொளி விரிவுரைகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பெறப்படும் தற்போதைய ஆய்வுகள் சார்ந்த தகவல்களை மாணவர்கள் அணுகுவதைத் தடுக்கிறது.

இந்த இணையக் குறைபாடு வணிகங்களின் விரிவாக்கம், படைப்பாற்றல் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுடனான தொடர்புகள் ஆகியவற்றையும் பாதிக்கின்றன. நவீன பொருளாதாரம் என்பது நவீன தொழில்நுட்பம், தொலைதூரப் பணி, இணையவழிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பெருமளவில் சார்ந்திருக்கிறது. போதுமான இணைய சேவை இல்லாமல், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்பது இந்த நாட்டின் மக்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது

எதிர்காலத்தில் எரித்திரியாவிற்கு இணைய வசதி கிடைக்குமா?

உலகில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு மிக முக்கியமாக உள்ள நிலையில், தற்போது இணைய வசதி இல்லாத இந்நாடு எதிர்காலத்தில் இணைய இணைப்பை விரிவுபடுத்தக்கூடும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது உலகின் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாக எரித்திரியா உள்ளது, எரித்ரியாவின் நிலையை ஆராய்வது, தற்காலத்தில் இணைய வசதி ஏன் மிக முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

Story first published: Friday, June 19, 2026, 20:31 [IST]
Desktop Bottom Promotion