Just In
- 4 min ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 1 hr ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 3 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Don't Miss
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க...
உங்கள் கைரேகை பற்றிய சில அதிர்ச்சிகரமான விஷயத்தைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
முன்பெல்லாம் எங்கு சென்றாலும் கையெழுத்து போடச் சொல்வார்கள். படிக்காத, கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஏளனமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எங்கு போனாலும் ரேகை வைக்கச் சொல்லி கேட்கிறார்கள்.
அவ்வளவு ஏன் ஒரு சிம் கார்டு வாங்கப் போனால் கூட கைரேகை தான் இப்போது தேவைப்படுகிறது. அதை நாம் பெரிதாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதைப் பற்றிய பல விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கைரேகை இல்லாமல் பிறப்பார்களா?
கைரேகை என்பது எல்லோருக்கும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் கைரேகை இல்லாமல் யாராவது பிறந்திருப்பார்களா? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? மூன்று வகையான மரபணு பிரச்சினைகள் காரணமாக கைரேகை ஒருவருக்கு உருவாகாமல் போகலாம்.
அந்த மரபணுக்கள்
1. Naegeli - franceschrtti - jadassohn syndrome (NFJS)
2. Dermatopathia pigmentosa reticularis (DPR)
3. Adermatoglyphia
இந்த மூன்று மரபணுக்களின் காரணமாகவே கைரேகை உருவாகாமல் போகும்.
MOST
READ:
உடம்பு
சும்மா
எப்பவும்
தளதளனு
வெச்சிக்கணுமா?
இத
மட்டும்
செஞ்சாலே
போதும்...
அழிந்துவிடுமா?
நம்முடைய கைரேகை எதனாலாவது அழிந்து போகுமா? மிகக் கடினமான வேலைகள் செய்பவர்களுக்குக் கைரேகை தேய்ந்து போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் சில நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும்.
எப்போது உருவாகும்?
நாம் நம்முடைய அம்மாவின் வயிற்றுக்குள் கருவில் இருக்கும்பொழுதே கை ரேகை உருவாகிவிடும். நம்முடைய உடல் அசைவுகள், வயிற்றுக்குள் இருக்கும் இடம், இருக்கின்ற முறைகள் அதன் தன்மை ஆகியவை தான் ஒவ்வொருவருக்கும் கைரேகை தனித்துவமாக இருப்பதற்கான காரணம்.
இறந்தவரை கண்டுபிடிக்க
ஒருவர் இறந்து போய்விட்டார் என்றால், அவருடைய உடல் நீண்ட நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாமல் போனால் அவர்களுடைய கையில் இருக்கின்ற தோல் கழன்றுவிடும். அப்போது அந்த நபரை அடையாளம் காண்பதற்காக அந்த கையினுடைய தோலை கழற்றி எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.
உலகின் முதல் ரேகை
உலகின் முதல் கைரேகை என்பது சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. குவைத் நாட்டில் உடைந்து போன மண்பானையில் இருந்து தான் இப்படியொரு ரேகை கிடைத்திருக்கிறது. அந்த ரேகையினுடைய வயது 7300 ஆண்டுகள்.
MOST READ: குபேரன் அருளால் கோடி கோடியாக லாபம் கிடைக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?
ஹீமோதெரபி
ஹீமோதரபி சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சிகிச்சையின் போது கைரேகை அழிந்து போகக்கூட வாய்ப்புண்டு.
டுவின்ஸ்
இரட்டையர்களாகப் பிறப்பவர்களுக்கு டிஎன்ஏ என்று சொல்லப்படும் மரபணு பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் identifical twins என்று சொல்லப்படும் இரட்டையர்களின் கைரேகை என்பது கட்டாயமாக வேறு வேறாகத்தான் இருக்கும்.
ஆய்வு
கைரேகை பற்றி ஆய்வு செய்யும் படிப்புக்கு Dactyloscopy என்று பெயர்
கரடி
கோலாக்கரடி என்னும் ஒருவகைக் கரடிக்கும் மனிதர்களைப் போலவே கைரேகை இருக்கும். கோலாக் கரடிக்கும் நம்முடைய கை பெருவிரல் போல தான் ரேகை இருக்கும்.
MOST
READ:
இந்த
மண்டையில
கூடி
முடி
வளர
வைக்கணுமா?
இந்த
4
பொருளையும்
தேய்ங்க...
பிடிமானம்
நம்முடைய கையில் ரேகை இருப்பதால் தான் நம்மால் எல்லா பொருள்களையும் தாங்கிப் பிடிக்க முடிகிறது. இல்லையென்றால் எந்த பொருளையும் கையில் பிடிக்க முடியாது. வழுக்கிக் கொண்டு போகும்.