Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க...
உங்கள் கைரேகை பற்றிய சில அதிர்ச்சிகரமான விஷயத்தைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
முன்பெல்லாம் எங்கு சென்றாலும் கையெழுத்து போடச் சொல்வார்கள். படிக்காத, கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஏளனமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எங்கு போனாலும் ரேகை வைக்கச் சொல்லி கேட்கிறார்கள்.

அவ்வளவு ஏன் ஒரு சிம் கார்டு வாங்கப் போனால் கூட கைரேகை தான் இப்போது தேவைப்படுகிறது. அதை நாம் பெரிதாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதைப் பற்றிய பல விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கைரேகை இல்லாமல் பிறப்பார்களா?
கைரேகை என்பது எல்லோருக்கும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் கைரேகை இல்லாமல் யாராவது பிறந்திருப்பார்களா? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? மூன்று வகையான மரபணு பிரச்சினைகள் காரணமாக கைரேகை ஒருவருக்கு உருவாகாமல் போகலாம்.
அந்த மரபணுக்கள்
1. Naegeli - franceschrtti - jadassohn syndrome (NFJS)
2. Dermatopathia pigmentosa reticularis (DPR)
3. Adermatoglyphia
இந்த மூன்று மரபணுக்களின் காரணமாகவே கைரேகை உருவாகாமல் போகும்.

அழிந்துவிடுமா?
நம்முடைய கைரேகை எதனாலாவது அழிந்து போகுமா? மிகக் கடினமான வேலைகள் செய்பவர்களுக்குக் கைரேகை தேய்ந்து போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் சில நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும்.

எப்போது உருவாகும்?
நாம் நம்முடைய அம்மாவின் வயிற்றுக்குள் கருவில் இருக்கும்பொழுதே கை ரேகை உருவாகிவிடும். நம்முடைய உடல் அசைவுகள், வயிற்றுக்குள் இருக்கும் இடம், இருக்கின்ற முறைகள் அதன் தன்மை ஆகியவை தான் ஒவ்வொருவருக்கும் கைரேகை தனித்துவமாக இருப்பதற்கான காரணம்.

இறந்தவரை கண்டுபிடிக்க
ஒருவர் இறந்து போய்விட்டார் என்றால், அவருடைய உடல் நீண்ட நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாமல் போனால் அவர்களுடைய கையில் இருக்கின்ற தோல் கழன்றுவிடும். அப்போது அந்த நபரை அடையாளம் காண்பதற்காக அந்த கையினுடைய தோலை கழற்றி எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.

உலகின் முதல் ரேகை
உலகின் முதல் கைரேகை என்பது சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. குவைத் நாட்டில் உடைந்து போன மண்பானையில் இருந்து தான் இப்படியொரு ரேகை கிடைத்திருக்கிறது. அந்த ரேகையினுடைய வயது 7300 ஆண்டுகள்.

ஹீமோதெரபி
ஹீமோதரபி சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சிகிச்சையின் போது கைரேகை அழிந்து போகக்கூட வாய்ப்புண்டு.

டுவின்ஸ்
இரட்டையர்களாகப் பிறப்பவர்களுக்கு டிஎன்ஏ என்று சொல்லப்படும் மரபணு பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் identifical twins என்று சொல்லப்படும் இரட்டையர்களின் கைரேகை என்பது கட்டாயமாக வேறு வேறாகத்தான் இருக்கும்.

ஆய்வு
கைரேகை பற்றி ஆய்வு செய்யும் படிப்புக்கு Dactyloscopy என்று பெயர்

கரடி
கோலாக்கரடி என்னும் ஒருவகைக் கரடிக்கும் மனிதர்களைப் போலவே கைரேகை இருக்கும். கோலாக் கரடிக்கும் நம்முடைய கை பெருவிரல் போல தான் ரேகை இருக்கும்.

பிடிமானம்
நம்முடைய கையில் ரேகை இருப்பதால் தான் நம்மால் எல்லா பொருள்களையும் தாங்கிப் பிடிக்க முடிகிறது. இல்லையென்றால் எந்த பொருளையும் கையில் பிடிக்க முடியாது. வழுக்கிக் கொண்டு போகும்.



Click it and Unblock the Notifications