Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
லஷ்மணன் ராமனின் தம்பியா? உண்மையிலே யார் அவர்? எதற்காக தம்பியாக அவதரித்தார் தெரியுமா?
நீங்கள் இதுவரை இராமாயணத்தில் வரும் லக்ஷ்மனன் பற்றி அறியாத உண்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். அவரைப் பற்றிய பல சுவாரஸ்யங்கள் கொண்ட தொகுப்பு தான் இந்த கட்டுரை.
ராமாயணம் இந்து மதத்தில் உள்ள ஒரு புனிதமான நூல். இதைப் பற்றி இந்துக்கள் நிறையவே அறிந்திருப்பார்கள். இருப்பினும் ராமனின் தம்பியான லக்ஷ்மணன் பற்றி நாம் அறியாத விஷயங்கள் நிறையவே உள்ளன.

இவர் தான் ராமாயணம் காண்டம் முழுவதும் ராமருக்கு பக்க பலமாக இருந்து உதவியவர். அப்படிப்பட்ட சிறந்த சர்வ வல்லமை படைத்த நேர்மையான மனிதரைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

லக்ஷ்மணன் அவதாரம்
லக்ஷ்மணன் விஷ்ணுவின் 5 தலை நாகத்தின் அவதாரம் ஆவார். கிருஷ்ணர் ராமர் அவதாரம் எடுக்கும் போது தன்னுடைய கொடையாக காத்து நிற்கும் நாகம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் அதற்கு லக்ஷ்மணன் அவதாரத்தை கொடுத்து ராமாயணம் முழுவதும் தன்னுடன் வைத்துக் கொண்டார். அதனால் தான் ராவணனை அழிக்க மிதிலைக்கு நாகம் படையெடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

பலராமன் அவதாரம்
லக்ஷ்மணன் ராமன் உடன் எப்பொழுதும் இருந்து ஒரு நல்ல தமையனாக நடந்து கொள்வார். மிகவும் பணிவுடன் நடந்து கொண்டதை அறிந்த ராமர் அவருக்கு அடுத்த பிறவியில் பலராமனராக அவதரிக்கும் வரத்தை கொடுத்தார். இதனால் அந்த பிறவியில் லக்ஷ்மணன் ராமனுக்கு அண்ணனாக இருக்கும் பாக்கியம் கிடைத்தது. ஸ்ரீ கிருஷ்ணர் எப்பொழுது அவதாரம் எடுத்தாலும் தன்னுடன் இருக்கும் நாகத்தையும் உடன் அவதாரமாக அழைத்துச் சென்று விடுவார். அப்படித்தான் இந்த லக்ஷ்மணனும், பலராமனும் வந்தார்கள்.

குடகேஷ் பற்றி அறிந்த லக்ஷ்மணன்
ராமருக்கு 14 ஆண்டுகள் வனவாசம் போகும் நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் ராமரையும் சீதாதேவியின் பாதுகாப்பிற்காக லக்ஷ்மணன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்க முடிவெடுத்தார். அவருடைய தன்னடக்கத்திற்கும் பணிவிற்கும் மயங்கிய நித்ரா தேவி அவருக்கு 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கும் வரத்தை அளித்துள்ளார். இதனால் லக்ஷ்மணன் குடகேஷ் என்ற பெயருடன் அழைக்கப்பட்டார். இவருடைய இந்த சக்தியே மேக்நாத் என்ற அரக்கனை கொல்ல ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. தூங்காமல் இருக்கும் ஒருவனால் மட்டுமே தான் அழிக்கப்பட வேண்டும் என்ற வரத்தை பெற்ற அவனை லக்ஷ்மணன் தன் சக்தியால் அழித்தார்.

முகத்தைக் கூட பார்க்காத லக்ஷ்மணன்
ராமருடன் சென்ற அந்த 14 ஆண்டுகளும் லக்ஷ்மனன் எந்த பெண்ணின் முகத்தையும் ஏறெடுத்து பார்த்ததில்லையாம். ஏன் தன்னுடைய தாய் ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியான சீதா தேவியின் முகத்தைக் கூட அவர் ஏறெடுத்து பார்த்ததில்லை. எப்பொழுதும் அவரது பாதங்களை பார்த்து மட்டுமே தான் பேசுவாராம். சீதாவை கண்டறிய சுக்ரிவன் காட்டிய சீதாவின் நகைகள் கூட லக்ஷ்மணனுக்கு தெரியாதாம். சீதாவின் பாத கொலுசை தவிர லக்ஷ்மணன் வேறு ஒன்றையும் அறிந்திலார். அந்தளவுக்கு நேர்மையுடனும் பணிவுடனும் நடந்து கொண்டு வந்தவர் லக்ஷ்மனன்.

இந்திரஜித் மரணம்
போர்களுக்கு பிறகு அகஸ்திய முனிவர் ஒருநாள் அயோத்தியா வந்து இருந்தார். அப்பொழுது அவர் மேக்நாத் என்ற அரக்கனை சாமானியப்பட்டவர்களால் கொல்ல முடியாது. திருமூர்த்தி, பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரா, பசுபதாஸ்திரா போன்ற ஏகப்பட்ட வித்தைகளை அறிந்தவன். அவனை கொல்ல வேண்டும் என்றால் 14 ஆண்டுகள் உண்ணாமல், உறங்காமல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்காத ஒருவனாலே முடியும் என்று கூறியுள்ளார். அப்படி பார்க்கையில் ராமர் சென்ற 14 ஆண்டுகளும் லக்ஷ்மனன் ஒருபோதும் தூங்கவும் உண்ணவும் இல்லை. சீதா தேவியின் பாதத்தை பணிந்த நின்றானே ஒழிய ஒரு போதும் முகத்தை கண்டதில்லை. எனவே லக்ஷ்மணன் மேக்நாத்தை அழிக்கும் சர்வ சக்தியும் பெற்று விளங்கினார்.

இறப்பிற்கான காரணங்கள்
ராமர் அவதாரம் முடிந்தவுடன் வைகுண்டத்திற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் ராமர் எமனை அழித்து தன்னை இந்த அவதாரத்தில் இருந்து விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இது மரண ரகசியம் யாரும் அறியாத வண்ணம் இறப்பு நிகழ வேண்டும் என்று எமன் கட்டளையிட்டார். எனவே ராமர் தன்னுடைய அறைக்கு யாரும் வருவதை தடுக்க நம்பிக்கையான லக்ஷ்மணனைத் தான் காவல் புரிய சொல்லியுள்ளார் என்று இந்து மதம் கூறுகிறது.
ஏனெனில் ராமரின் இறப்பு நிகழும் சமயத்தில் துர்வாசர் என்ற முனிவர் ராமரை காண வந்தார். ஆனால் ராமரின் ஆணைப்படி யாரையும் அனுமதிக்க கூடாது என்பதால் அவரை லக்ஷ்மணன் தடுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர் அயோத்தியை சாபமாக்குவேன் என்ற ஆவேசமாக கூறிய அவரை தடுக்க சர்யூ நதிக்கரையில் தன் உயிரையே கொடுத்தான் லக்ஷ்மணன். ராமன் கூறிய சொல்லை காப்பாற்ற தன் உயிரையே கொடுத்தவன் லக்ஷ்மணன்.

லக்ஷ்மணனின் அளப்பரிய அன்பு
சீதா தேவி சிறைப்பிடியில் இருப்பதை கவலை கொண்ட ராமர், அவள் அரண்மனையிலே இருந்திருக்கலாம். இப்படி என்னுடன் வந்து கஷ்டப்பட வேண்டியதில்லை என்று கூறினார். ஆனால் ராமர் இதை சீதா தேவிக்காக மட்டும் கூறவில்லை. லக்ஷ்மணனும் மனம் மாறி வனவாசத்தில் இருந்து அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்று தான் கூறினார். ஆனால் லக்ஷ்மணனின் ஆழப் பெரிய அன்பு ராமரை விட்டு ஒரு அணுகளவும் அசையவில்லை.

ராமர் லக்ஷ்மணன் மேல் வைத்த அன்பு
லக்ஷ்மனன் ராமர் மேல் அளவுகடந்த அன்பை கொண்டு இருந்தார். லக்ஷ்மணன் ராமாயணப் போரில் இறக்கும் தருவாய் வரை கூட சென்றுள்ளார். அப்பொழுது தான் ராமர் நினைத்தாராம் அயோத்தியின் செல்வ செழிப்பு கள் இல்லாமல் 14 ஆண்டுகள் வனவாசம் கூட இருந்தாச்சு, என் மனைவி சீதாவும், என் அன்பு தம்பி லக்ஷ்மணன் இல்லாமலும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தார். அவருடைய அன்பையும் அவர்களுக்கு பொழிந்தார்.

ராமரின் ஆலோசனை நண்பன்
சீதா காணவில்லை என்றதும் ராமர் மிகவும் உடைந்து போனார். சீதாவை தொலைத்த ராமரின் நிலையை ராமாயணத்தில் வால்மீகி இதை அழகாக சொல்லி இருப்பார். ராமர் ஒரு பித்து பிடித்தவன் போல் பார்க்கின்ற மரங்கள், பூக்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகள் என்று எல்லா உயிர்களிடத்தும் என் சீதா எங்கே எங்கே என்று அழுது புலம்புவாராம். அந்த மாதிரியான சமயங்களில் லக்ஷ்மணன் தான் ராமருக்கு ஆலோசனைகளையும் அன்பான வார்த்தைகளையும், நம்பிக்கையான வார்த்தைகளையும் கொடுத்து தேற்றுவாராம்.

லக்ஷ்மணன் குரு
ராமருக்கு லக்ஷ்மணன் ஒரு தமையனாக மட்டும் இல்லை. அவருக்கு ஒரு தந்தையாகவும் சிறந்த ஆசானாகவும் விளங்கியவர் லக்ஷ்மனன். ஒரு சமயம் விஸ்வாமித்திரர் முனிவர் வில் வித்தைகளையும், பிரம்மாஸ்திரத்தையும் கற்றுக் கொடுக்க ராமருக்கு வந்த போது, அதை லக்ஷ்மனன் கையில் கொடுத்து அவனை தன் குருவாக ஏற்றுக் கொண்டார் ராமர். அத்தனை வல்லமை படைத்த மனிதர் தான் லக்ஷ்மணன்.



Click it and Unblock the Notifications











