Just In
- 10 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த கடவுள்களின் படங்கள் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் தெரியுமா?
கோவிலை பொறுத்தவரையில் கடவுள் சிலைகள் இருக்கும் நிலைக்கும், எண்ணிக்கைக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், வீட்டில் இருக்கும் பூஜையறைக்கென சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளது. அதன்படியே பூஜ
மற்ற மதங்களை போல் அல்லாமல் இந்து மதத்தில் உருவ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோவில்கள் இருந்தாலும் வீட்டில் ஒரு பூஜையறை வைத்து கடவுளை வழிபடுவது கடவுளை அடையும் வழி என பலரும் நம்புகிறார்கள். அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பவை முடிவில்லா சக்தி மற்றும் வல்லமையின் வெளிப்பாடாக இருக்கிறார்.
கடவுள் நம்பிக்கை இருப்பது நம்மை கஷ்டங்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி நம்மை பாவச்செயல்களை செய்வதில் இருந்தும் தடுக்கிறது. சாஸ்திரங்களின் படி அனைத்து வீடுகளிலும் கடவுளின் உருவங்கள் வைத்து முறையாக வழிபடவேண்டும். அதேசமயம் கடவுளை வழிபடும் முறை தவறினால் அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பூஜையறை
கோவிலை பொறுத்தவரையில் கடவுள் சிலைகள் இருக்கும் நிலைக்கும், எண்ணிக்கைக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், வீட்டில் இருக்கும் பூஜையறைக்கென சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளது. அதன்படியே பூஜையறை அமைக்கப்பட வேண்டும், இல்லயெனில் கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
தனி பூஜையறை
பூஜையறை எப்பொழுதும் தம்பதிகள் இருக்கும் படுக்கையரைக்குள் கட்டப்படக்கூடாது. தனி அறையாகவோ அல்லது வேறு அலமாரிகளில்தான் கடவுள் சிலைகள் வைக்கப்படவேண்டும். கிழக்கு திசையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஏனெனில் கடவுள் இருக்கும் அறைகளில் ஒருபோதும் பாலியல் செயல்களில் ஈடுபடக்கூடாது.
சமையலறைக்கு உள்ளேயோ, எதிரிலேயோ இருக்கக்கூடாது
வீட்டிற்குள் இருக்கும் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது சமையலறை ஆகும். ஏனெனில் அங்கு அனைத்தும் சுத்தமாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் குப்பைத்தொட்டியும் சமையலறைக்குள்தான் இருக்கும். எனவே அங்கு ஒருபோதும் கடவுள் சிலைகள் வைக்கப்படக்கூடாது. அதேபோல சமைக்கும்போது வெளிப்படும் புகை படும்படி சமையலறைக்கு நேரெதிரிலும் பூஜையறை வைக்கப்படக்கூடாது.
எப்போதும் பூட்டக்கூடாது
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கம் நாம் வீட்டை விட்டு நீண்ட நாட்கள் வெளியே செல்லும்போது பூஜையறையை பூட்டிச்செல்வது. இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். ஏனெனில் அவ்வாறு பூஜையறையை பூட்டுவது உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை சக்திகளை வெளியேற்றும்.
சுத்தம் செய்ய வேண்டும்
உங்களால் சில நாட்கள் குளிக்காமல் வெளியே செல்ல இயலுமா? அதேபோலத்தான் பூஜையறையையும் பராமரிக்க வேண்டும். தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்காது.
எத்தனை சிலைகள் வைக்க வேண்டும்?
கோவிலுக்கும், வீட்டு பூஜையறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. வீட்டிற்குள் ஒரு பகுதியாக கோவில் இருக்கலாம், ஆனால் கோவிலின் பகுதியாக வீடு இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை. ஏனெனில் வீடு என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும், உலகத்தை அனுபவிக்கவும் இருக்கும் இடமாகும், ஆனால் கோவில் என்பது கடவுள் வசிக்கும் புனிதமான இடமாகும். கோவிலுக்குள் எத்தனை சிலைகள் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் வீட்டு பூஜையறை என்று வரும்போது அதற்கென சில விதிமுறைகள் உள்ளது.
MOST READ: தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மாவிற்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா?
ஒரே கடவுளின் மூன்று சிலைகள்
மூன்று முக்கிய பெண் தெய்வங்களான துர்கை, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மியை நீங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே கடவுளின் மூன்று சிலைகளை வீட்டில் ஒருபோதும் வைக்கக்கூடாது. இது உங்கள் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறு வைக்கும் போது உங்கள் வீட்டின் பொருளாதாரம் மோசமடைந்து கொண்டே செல்வதை நீங்கள் உணரலாம்.
மூன்று விநாயகர் படங்கள்
பழங்கால வேதங்களின் படி உங்கள் வீட்டில் மூன்று விநாயகர் படங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது புனிதமற்றதாக கூறப்படுகிறது. இதனால் உங்கள் வீட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும், மேலும் ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பும் ஏற்படும்.
இரண்டு சிவலிங்கம்
உங்களால் தொடர்ச்சியாக வழிபட முடியாதெனில் ஒரு சிவலிங்கத்தை கூட வீட்டில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இரண்டு சிவலிங்கம் என்பது வைக்கவே கூடாததாகும். வீட்டில் ஒரு சிவலிங்கத்தை வைக்கவே பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது. எனவே இரண்டு சிவலிங்கம் வைக்கப்படும்போது அது உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்துவதுடன் உங்கள் ஆராவையும் பாதிக்கும்.
வைக்கக்கூடாத கடவுள்கள்
உங்கள் வீட்டில் ஒருபோதும் கிருஷ்ணர் ராதை, ருக்மிணி மற்றும் மீராவுடன் இருப்பது போன்ற சிலைகளை வைக்கக்கூடாது. அதேபோல முருகன் வள்ளி மற்றும் தேவயானியுடன் இருப்பது, விநாயகர் சித்தி மற்றும் புத்தியுடன் இருப்பது போன்ற சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது. இது கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தி அவர்களின் பிரிவிற்கு வழிவகுக்கும்.
MOST READ: பெண்களை பொறுத்தவரை இந்த 7 குணங்கள் இருக்கும் ஆண்கள்தான் காதல் மன்னர்களாம் தெரியுமா?
எங்கு வைக்க வேண்டும்?
சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்களே அனைத்து கடவுள்களுக்கும் மேலானவர்கள் என்று வேதங்கள் கூறுகிறது. எனவே பூஜையறை அமைக்கும் போது மற்ற கடவுள்களின் சிலைகள் இவர்களின் சிலைக்கு கீழே இருக்குமாறு அமைக்கவும்.