For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா

குரு பெயர்ச்சியால் குரு பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல

|

மதுரை: குரு பகவான் இப்போது விருச்சிகத்தில் இருக்கிறார். அக்டோபர் இறுதியில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு இருக்கும் இடத்தைப் பொறுத்தும் அவர் பார்வையை பொறுத்தும் சில ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் லக்னகாரர்கள், ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம்.

கால புருஷ தத்துவப்படி குரு ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள்தான் நடைபெறும். காரணம் தனுசு ராசி குருவின் சொந்த வீடு.

குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார். அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புக்தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புக்தி நன்றாக இருந்தால் தற்கால கிரக அமைப்புகளால் மொத்தமாக கெடுபலன்கள் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குரு பெயர்ச்சி பாடல்

குரு பெயர்ச்சி பாடல்

குரு எங்கு இருந்தால் என்ன பலன்

"ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்

தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்

இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்

ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்

தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்

சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்

வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்பது பழம் பாடல் இதில் சொன்னது போல நடக்கும் என்று சொல்ல முடியாது. ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை, தசாபுத்தி படியும் நன்மைகள் தீமைகள் நடைபெறலாம்.

குரு இருக்கும் இடம் என்ன பலன்

குரு இருக்கும் இடம் என்ன பலன்

கோச்சார குருவினால் நன்மை

ஒருவரின் ஜாதகத்தில் ஜன்ம ராசிக்கு இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஸ்தானங்களில் குரு கோச்சார ரீதியாக அமரும் போது நன்மைகளையே செய்வார். அப்போது மற்ற இடங்களில் அமரும் போது நன்மை இல்லையா பாதிப்பு வருமோ என்று அஞ்ச வேண்டாம். குரு எந்த இடத்தில் அமர்ந்தாலும் அவர் பார்க்கும் இடங்களினால் பலன் கிடைக்கும். குரு பகவான் இந்த முறை விருச்சிக ராசிக்கு இரண்டாம் வீடு, சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீடு, மிதுனம் ராசிக்கு ஏழாம் வீடு, மேஷம் ராசிக்கு ஒன்பதாம் வீடு, கும்பம் ராசிக்கு பதினொன்றாம் வீடு என குருவின் சஞ்சாரம் அமையப்போகிறது.

மேஷத்திற்கு ராஜயோகம்

மேஷத்திற்கு ராஜயோகம்

ராஜயோகம் வரும் ராசி

மேஷம் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் குருபகவான் அமரப்போகிறார். குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்வது யோக காலம். தனுசு ராசியில் அமர்ந்த குரு மேஷ ராசியை பார்வையிடுகிறார். ராசியை பார்க்கும் குருவினால் ராஜயோகம் உங்களுக்கு காத்திருக்கிறது. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானம், ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வையிடுவார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்வீர்கள். உங்களின் பூர்வ புண்ணியத்தின் மூலம் நன்மைகள் அதிகம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். அவர்களின் கல்வி நிலை உயரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.

கல்வி ஸ்தாபனம் நடத்துபவர்களுக்கு நன்மை நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ரொம்ப புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் தீரும்.

ரிஷபத்திற்கு அஷ்டம குரு

ரிஷபத்திற்கு அஷ்டம குரு

ரிஷபத்திற்கு விபரீத ராஜயோகம்

குருபகவான் 7ஆம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டுக்கு குரு நகர்வதால் கவலை வேண்டாம். நன்மை தருவார். தன் வீட்டில் ஆட்சி பெறுகிறார். கவலை வேண்டாம். அஷ்டமத்து சனியின் பிடியில் இருக்கும் உங்களை விடுவிக்கவே குரு அங்கே போய் அமர்கிறார். பணமழை உங்க வீட்டில் கொட்டப்போகிறது.

குரு உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு 2ஆம் வீட்டை குரு பார்வையிடுவதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு இருக்கிறார், அந்த வீட்டை குரு பார்ப்பதால் சுபத்தோடு வருமானம் அதிகரிக்கும். பொருளதார வளர்ச்சியை தருவார் ஆனந்தத்தை அள்ளித்தரப்போகிறார். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த கசப்பான அனுபவங்கள் நீங்கும். 12ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் நிறைய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் நிறைய வாங்குவீர்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும்.

மிதுனம் பொன்னான காலம்

மிதுனம் பொன்னான காலம்

கடன்கள் தீரும் காலம்

மிதுனம் ராசிக்காரர்களே இதுநாள்வரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு அக்டோபர் முதல் களத்திர ஸ்தானத்தில் நகர்கிறார். கடன் பகை நோய் ஸ்தானத்தில் இருந்து குரு களத்திரத்திற்கு நகர்வதால் கடன் நோய்களால் அல்லப்பட்டவர்கள் நன்மை நடைபெறும். ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு குரு கெடுதல் செய்ய மாட்டார் நன்மைதான் செய்வார்.

உங்கள் ராசிக்கு ஏழு, பத்தாம் அதிபதி குரு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சியினால் பொன்னான கால கட்டம் வரப்போகிறது.

கடகத்திற்கு கடன்

கடகத்திற்கு கடன்

தம்பதியர் ஒற்றுமை

கடன் நோய் எதிரி ஸ்தானத்தில் குரு அமர்வதால் கடன் வாங்க வைக்கும் உடம்பில் உள்ள நோய்களை சுட்டிக்காட்டும். நிவர்த்தி கிடைக்கும் நன்மையே நடைபெறும். கடன் மூலம் சொத்து சேர்க்கலாம். கடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. அளவிற்கு மீறி கடன் வாங்க வேண்டாம். நோய்களை பயப்பட வேண்டாம். எதையும் எதிர்த்து போராடி வெல்வீர்கள். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது. குரு பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன்களை தீர்க்க வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள்.

சிம்மம் யோக காலம் பிறக்கிறது

சிம்மம் யோக காலம் பிறக்கிறது

சிம்மத்திற்கு அதிர்ஷ்டம்

இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கு மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது.

இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்க்கு வருகிறார். இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குல தெய்வத்தை காட்டும் இடம். ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு. குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடைபெறும் சனியோடு குரு இணையும் காலம் ராஜயோகம்.

கன்னிக்கு கவலை நீங்கும்

கன்னிக்கு கவலை நீங்கும்

கன்னிக்கு பிரச்சினை தீரும்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். எதைத் தொட்டாலும் தடையாக இருந்தது. இனி நன்மைகள் நடைபெறும். நான்காம் வீட்டில் குரு அமரப்போகிறார். 3ஆம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டிற்கு குரு நகரும் காலத்தில் பல நன்மைகள் நடைபெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். தொழில் செய்ய இடம் கிடைக்கும். கவலைகள் நீங்கும் காலம். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும்.

சிலருக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் நடைபெறும். இந்த குரு பெயர்ச்சியினால் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும்.

துலாம் மாற்றம் முன்னேற்றம்

துலாம் மாற்றம் முன்னேற்றம்

கன்னிக்கு முயற்சி வெற்றி

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் விலகி சுபிட்சம் நடைபெறப்போகிறது. தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை நடக்கிறது. இனி குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடைபெறப் போகிறது. மூன்றாம் வீட்டில் அமர்ந்து குரு உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். கேதுவை நோக்கி குரு செல்கிறார். துலாம் ராசிக்கு 9ல் ராகு மூன்றில் கேது சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுவாழ்க்கை அமையும்.

விருச்சிகம் கஷ்டங்கள் தீரும்

விருச்சிகம் கஷ்டங்கள் தீரும்

விருச்சிகம் செல்வாக்கு உயரும்

விருச்சிக ராசிக்காரர்களே... இதுநாள் வரை ஏழரை சனி, ஜென்மகுருவினால் கஷ்டப்பட்டு வந்த நீங்கள் இனி கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்கும் காலம் வரப்போகிறது. காரணம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு அமரப்போகிறார். தன, வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குரு பகவான் நகர்வதால் உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். பணவரவு அதிகமாகும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும். ஏழரை சனியில் இருந்தும் விடுபடப்போவதால் இனி விருச்சிக ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். கடன் தொல்லைகள் தீரும். குரு தனது ஏழாம்பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தாலி பாக்கியத்தை கொடுப்பார். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும்.

தனுசு மகிழ்ச்சி கூடும்

தனுசு மகிழ்ச்சி கூடும்

தனுசுக்கு சுபகாரியம்

குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஓராண்டு காலம் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சொந்த வீட்டிற்கு ராசி அதிபதி வருவதால் யோகங்கள் அதிகம் நடைபெறும். குரு ஆட்சி பெற்று அமர்வது பொற்காலம். தனுசு ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. எல்லையில்லாத வெற்றிகளைத் தருவார். குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். உயர்கல்வியை படிக்க ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மகரம் தொழில் வளர்ச்சி

மகரம் தொழில் வளர்ச்சி

மகரம் குடும்பத்தில் மகிழ்ச்சி

குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து 12ஆம் வீட்டுக்கு பெயர்ச்சி அடைகிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும். நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். இதுநாள்வரை கவலைகள் அதிகமாக இருந்தது. இனி துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் பெருகும். நல்ல வேலை வாய்ப்பு பெருகும். ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும்.

கும்பம் லாபம் அதிகம்

கும்பம் லாபம் அதிகம்

கும்பம் கெட்டிமேளம் கொட்டும்

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்தில் அமரும் குரு பகவானால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் சிலருக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் ஜோடிகளுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். மாணவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று கல்வி பயில நன்மை செய்வார்.

மீனத்திற்கு புதிய பதவி

மீனத்திற்கு புதிய பதவி

பத்தில் பதவி வரும்

பத்தில் குரு புதிய பதவி தேடி வரும் பத்தில் குரு வரும் போது உயர்பதவிகள் தேடி வரும். வாழ்க்கை ரீதியான பயணத்தில் வெற்றி கிடைக்கும். வேலை தொழிலில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அஞ்ச வேண்டாம். ஆளுமை தன்மையை அதிகரிப்பார். பத்துக்கு அதிபனே பத்தில் வருவதால் பதவி உயர்வை தருவார். தனுசு வீடு ஆட்சி வீட்டில் இருப்பதால் தனித்தன்மை வாய்ந்த பார்வைகளை தருவார். வீழ்ச்சியில் இருந்தவர்களை உச்சத்திற்கு கொண்டு வருவார். கெடுதல் நடக்காமல் தடுப்பார். குரு பகவான் தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குருவின் பார்வையால் பிரச்சினைகளை கஷ்டங்களை நிவர்த்தி செய்வார்

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

குருவால் பாதிப்பா பரிகாரம் இருக்கு

திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.

பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் லக்னகாரர்கள், ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். இந்த பரிகாரங்களை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guru peyarchi 2019: Jupiter transit 2019 vision benefits

Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. Guru is the Lord for Dhanus rasi and Meenam rasi.If Jupiter is in a good position like exalted or in its own house, then the native will be an influential person, will enjoy all benefits and happiness.
Story first published: Monday, July 22, 2019, 17:39 [IST]
Desktop Bottom Promotion