Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க...
குழந்தை அடம் பிடிக்காமல் இருக்க கையில் செல்போன் கொடுத்ததும் ஆன கதை பற்றிய விஷயத்தை தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மலேசியாவில் தாயாரை வெளியே விட்டு விட்டு காருக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட சிறுவன் செய்தவை பதிவான செய்த வீடியோவை அவனது தந்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். அது பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க... என்ன ஆச்சுன்னு நீங்களே இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...

தாயும் தனயனும்
மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்த பெண்மணி பாஸிர் மாஸ். சிறுவனான தன் மகனுடன் பாஸிர், காரில் வெளியே சென்றுள்ளார். அவர் காரிலிருந்து இறங்கி வந்த வேலையை கவனிக்கச் சென்றபோது, மொபைல் போனை தன் மகனிடம் கொடுத்துள்ளார். காரை திறக்கவும் பூட்டவும் தெரிந்த அச்சிறுவன், மொபைல் போனுடன் காருக்குள் ஏறி கதவை அடைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்துள்ளான்.

திறக்காத கதவு
வந்த வேலையை முடித்த பாஸிர் மாஸ், காரின் அருகே வந்து கதவை திறக்குமாறு கேட்டுள்ளார். அவர் காரின் கண்ணாடியை தட்டுவதை பார்த்துவிட்டு, மறுபடியும் மகன், மொபைல் போனை பார்க்க ஆரம்பித்து விடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
தாய் மறுபடியும் மறுபடியும் கண்ணாடியை தட்டி, கதவை திறக்கும்படி கூறியும் அவரது அழைப்பை கவனிக்காததுபோல் மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். காரை திறந்தால் போனை தாயார் வாங்கிக் கொள்வார் என்பதால் விளையாட்டை விடுவதற்கு மனமில்லாமல் தொடர்கிறான்.

என்ன நடந்தது?
தான் எவ்வளவோ கூறியும் மகன் அசட்டை செய்தததால், பாஸிர் மாஸ் வேறு வழியில்லாமல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கிறார். அவர்கள் வந்து காரின் கதவை உடைப்பதற்கு முயற்சிக்கும் போதும் பையன், மொபைல் போனில் விளையாடிக் கொண்டே இருப்பதுதான் வேதனையான விஷயம்!

மொபைல் போன் அடிமைத்தனம்
பிள்ளைகளை அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைப்பதற்கு மொபைல் போனை கொடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது அவசியம். மொபைல் போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத ஆக்ரோஷமான கட்டத்தை எட்டுகிறார்கள்.
மொபைல் போனில் விருப்பமான கார்ட்டூன் வரும் வரைக்கும் சாப்பிடாமல் அடம் பிடிப்பது, பொருள்களை தூக்கி எறிவது என்று தாங்கள் கேட்டது கிடைக்கும் வரைக்கும் முரட்டாட்டம் செய்கிறார்கள். ஆகவே, மொபைல் போனை கொடுத்து குழந்தைகளை பழக்குவதை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications