Just In
- 39 min ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 1 hr ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 3 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Don't Miss
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க...
குழந்தை அடம் பிடிக்காமல் இருக்க கையில் செல்போன் கொடுத்ததும் ஆன கதை பற்றிய விஷயத்தை தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மலேசியாவில் தாயாரை வெளியே விட்டு விட்டு காருக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட சிறுவன் செய்தவை பதிவான செய்த வீடியோவை அவனது தந்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். அது பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க... என்ன ஆச்சுன்னு நீங்களே இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...
தாயும் தனயனும்
மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்த பெண்மணி பாஸிர் மாஸ். சிறுவனான தன் மகனுடன் பாஸிர், காரில் வெளியே சென்றுள்ளார். அவர் காரிலிருந்து இறங்கி வந்த வேலையை கவனிக்கச் சென்றபோது, மொபைல் போனை தன் மகனிடம் கொடுத்துள்ளார். காரை திறக்கவும் பூட்டவும் தெரிந்த அச்சிறுவன், மொபைல் போனுடன் காருக்குள் ஏறி கதவை அடைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்துள்ளான்.
MOST READ:வண்டி ஓட்டும்போது மூக்க சொறிஞ்சதுக்காக அபராதமா?... டேய் இதுக்குலாமா அபராதம் போடுவீங்க...
திறக்காத கதவு
வந்த வேலையை முடித்த பாஸிர் மாஸ், காரின் அருகே வந்து கதவை திறக்குமாறு கேட்டுள்ளார். அவர் காரின் கண்ணாடியை தட்டுவதை பார்த்துவிட்டு, மறுபடியும் மகன், மொபைல் போனை பார்க்க ஆரம்பித்து விடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
தாய் மறுபடியும் மறுபடியும் கண்ணாடியை தட்டி, கதவை திறக்கும்படி கூறியும் அவரது அழைப்பை கவனிக்காததுபோல் மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். காரை திறந்தால் போனை தாயார் வாங்கிக் கொள்வார் என்பதால் விளையாட்டை விடுவதற்கு மனமில்லாமல் தொடர்கிறான்.
MOST READ:வந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை?
என்ன நடந்தது?
தான் எவ்வளவோ கூறியும் மகன் அசட்டை செய்தததால், பாஸிர் மாஸ் வேறு வழியில்லாமல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கிறார். அவர்கள் வந்து காரின் கதவை உடைப்பதற்கு முயற்சிக்கும் போதும் பையன், மொபைல் போனில் விளையாடிக் கொண்டே இருப்பதுதான் வேதனையான விஷயம்!
மொபைல் போன் அடிமைத்தனம்
பிள்ளைகளை அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைப்பதற்கு மொபைல் போனை கொடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது அவசியம். மொபைல் போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத ஆக்ரோஷமான கட்டத்தை எட்டுகிறார்கள்.
மொபைல் போனில் விருப்பமான கார்ட்டூன் வரும் வரைக்கும் சாப்பிடாமல் அடம் பிடிப்பது, பொருள்களை தூக்கி எறிவது என்று தாங்கள் கேட்டது கிடைக்கும் வரைக்கும் முரட்டாட்டம் செய்கிறார்கள். ஆகவே, மொபைல் போனை கொடுத்து குழந்தைகளை பழக்குவதை தவிர்ப்பது நல்லது.
MOST READ:மேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...