Latest Updates
-
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்!
தன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...
தன்னை வளர்க்கும் ஓனருக்கே சோறு போட்டு வளர்க்கும் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்று நாய்கள் பற்பல உதவிகளை செய்யக்கூடியவை. மிகவும் அன்பாக இருக்கக்கூடிய செல்ல பிராணியான நாய், மனிதனுக்கு உற்ற நண்பனும் கூட.
பலருக்கு அவர்கள் வீட்டு நாயை 'உங்க நாய்' என்று சொன்னால்கூட கோபம் வந்துவிடும். 'டைசன்' என்று பெயரோடு கூற வேண்டும்.

தெரு கலைஞன்
யோர்கே லூயிஸ் ரூய்ஸ் என்ற இளைஞன், தெரு கலைஞன். தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துபவர். அவரை ரசிப்பதற்கென்று சிலர் இருந்தனர். ஆனாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக யோர்கே, பிரேசிலுக்கு குடி பெயர்ந்தார்.
அங்கு ஃபோர்த்தலேசா என்ற பகுதியில் தெருக்களில் வித்தை காட்டுவதன் மூலம் பணமீட்டி வாழ்ந்து வருகிறார். நகரத்தின் பரபரப்பான ஃபெரைரா ஸ்குயர் என்ற பகுதியில் சிலைபோல நின்று மக்களை சந்தோஷப்படுத்துவது யோகே லூயிஸின் வழக்கம்.

ஜாஸ்பி
யோர்கேயை போன்று எத்தனையோ தெரு கலைஞர்கள் அந்நகரத்தில் இருந்தாலும், அவனுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர். ஏன் தெரியுமா? யோர்கேயுடன் அவனது நாய் ஜாஸ்பியும் சேர்ந்து சிலைபோல நிற்கும். யோர்கே செல்லுமிடமெல்லாம் அமைதியாக உடன் செல்லும் ஜாஸ்பி, யோர்கே கையை மடக்கிக் கொள்ள அதில் சிலைபோல உட்கார்ந்திருக்கும். நாயும் மனிதனும் சேர்ந்து சிலைபோல நிற்பதால் மற்ற கலைஞர்களை காட்டிலும் யோர்கேக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

டிவிட்டரில் வைரல்
ஃபோர்த்தலேசா நகரின் தெருக்களில் யோர்கேயும் ஜாஸ்பியும் பிரபலமானதால் நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவர்கள் இருவரையும் பார்க்க குவிந்து வருகின்றனர். யோர்கேயும் ஜாஸ்பியும் சிலை போல நிற்கும் வீடியோ காட்சி டிவிட்டரில் பகிரப்பட்டபோது, மூன்று வார காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 91 ஆயிரம் பேர் பின்னூட்டமிட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications