Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...
தன்னை வளர்க்கும் ஓனருக்கே சோறு போட்டு வளர்க்கும் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்று நாய்கள் பற்பல உதவிகளை செய்யக்கூடியவை. மிகவும் அன்பாக இருக்கக்கூடிய செல்ல பிராணியான நாய், மனிதனுக்கு உற்ற நண்பனும் கூட.
பலருக்கு அவர்கள் வீட்டு நாயை 'உங்க நாய்' என்று சொன்னால்கூட கோபம் வந்துவிடும். 'டைசன்' என்று பெயரோடு கூற வேண்டும்.

தெரு கலைஞன்
யோர்கே லூயிஸ் ரூய்ஸ் என்ற இளைஞன், தெரு கலைஞன். தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துபவர். அவரை ரசிப்பதற்கென்று சிலர் இருந்தனர். ஆனாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக யோர்கே, பிரேசிலுக்கு குடி பெயர்ந்தார்.
அங்கு ஃபோர்த்தலேசா என்ற பகுதியில் தெருக்களில் வித்தை காட்டுவதன் மூலம் பணமீட்டி வாழ்ந்து வருகிறார். நகரத்தின் பரபரப்பான ஃபெரைரா ஸ்குயர் என்ற பகுதியில் சிலைபோல நின்று மக்களை சந்தோஷப்படுத்துவது யோகே லூயிஸின் வழக்கம்.

ஜாஸ்பி
யோர்கேயை போன்று எத்தனையோ தெரு கலைஞர்கள் அந்நகரத்தில் இருந்தாலும், அவனுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர். ஏன் தெரியுமா? யோர்கேயுடன் அவனது நாய் ஜாஸ்பியும் சேர்ந்து சிலைபோல நிற்கும். யோர்கே செல்லுமிடமெல்லாம் அமைதியாக உடன் செல்லும் ஜாஸ்பி, யோர்கே கையை மடக்கிக் கொள்ள அதில் சிலைபோல உட்கார்ந்திருக்கும். நாயும் மனிதனும் சேர்ந்து சிலைபோல நிற்பதால் மற்ற கலைஞர்களை காட்டிலும் யோர்கேக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

டிவிட்டரில் வைரல்
ஃபோர்த்தலேசா நகரின் தெருக்களில் யோர்கேயும் ஜாஸ்பியும் பிரபலமானதால் நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவர்கள் இருவரையும் பார்க்க குவிந்து வருகின்றனர். யோர்கேயும் ஜாஸ்பியும் சிலை போல நிற்கும் வீடியோ காட்சி டிவிட்டரில் பகிரப்பட்டபோது, மூன்று வார காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 91 ஆயிரம் பேர் பின்னூட்டமிட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications